தட்டப்பட்டு திறக்கப்படாதஉங்கள் கதவின் ஆழ்ந்த மௌனங்களின்பின் தொடரும்“போயிருப்பான்” என்ற மெல்லிய குரல்.புருவம் உயர்த்தி ஆச்சரியப்பட்டுபின்னால் உதட்டை பிதுக்கி நகையாடும்உங்கள் எகத்தாளம்.நேர்காணலின் கதவை மூடும்கடைசி நொடியில் கேட்கும்என் சுயவிவரம் குப்பையில் விழும் சத்தம்.பாதையின் மையத்திலிருந்து விளிம்புவரைநானே ஒதுங்கியதாய் ஒதுக்கப்படுகிறேன்.சாலை நடுவே கிடந்து சிதைகிறதுஎன் …
கவிதைப்போட்டி
வானம் ஒப்புக் கொள்வதற்கு முன்னரேஅவளது இரவு தொடங்கி விடுகிறது மங்கிய ஒளியில்பழைய புடவைகளை மடிப்பது போலபொழுதுகளை மடிமேல் விரித்து நீவுகிறாள்நைந்து போன அதன் இழைகளில்தூக்கியெறிய முடியாத காலம் முடிவற்ற எண்ணங்களால் நிரம்பி வழியும்அவளது மனதை அறிந்த தூக்கம்ஒருபோதும் உள்ளே நுழைவதில்லைஆனால் அழைக்கப்படாமல்உரிமையுடன் …
வண்ண வண்ணமாய்பறக்கின்றன ஹீலியம் பலூன்கள்உருண்டையாய்வாத்துக்களைப் போலவானூர்தி வடிவத்திலும்இவர்கள் வீடு திரும்பும்போதுஎன்ன வாங்கிப் போவார்கள்குழந்தைகளுக்குத்தின்பண்டங்கள்பொம்மைகள்இல்லத்தரசிகளுக்குகாய்கறிகள்மளிகைப் பொருட்கள்வாழ்க்கைப் பயணத்திற்குத்தேவையானதை பெற்றுத்தருமாஇந்த வாயு தேவனின் குழந்தைகள்கார்கள் கண்ணாடிகளைஏற்றிக்கொண்டு விரைகின்றன.நடுத்தர வர்க்கம் பார்த்தும்பார்க்காதது போல கடக்கிறது.குழந்தைகளே இல்லாத வீட்டில்இதெல்லாம் எதுக்குஎன்ற மனைவியின் கேள்வியைஎப்படி எதிர்கொள்வதுஎன்ற எண்ணத்தைப் புறந்தள்ளிவிற்பவரின் …
காலத் தூரிகைத்துடைத்துச் சென்றபக்கங்கள் யாவிலும்அழுத்திப்பிடித்த கறைகள்புரட்டி எடுக்கும்நினைவின் அசைவில்வெளிப் பரவும் வண்ணத்துகள்கள்அலைவரிசையை நிறைத்துவிட்டஅலப்பறையில்படபடக்கும்பக்கங்கள்அத்துணையிலும்புதுப்புது கலவைகளால்தோய்த்து வைக்குமொருமாயம் நிகழும்ஒன்றுகூடிஒன்றுகுறைந்துகலந்து திரிந்துவர்ணம் மாறியவரைபடமென வாழ்க்கைநின்றிருக்கநிதானிக்கநகர்ந்து செல்லதேவையாய் இருக்கிறது..அன்னியப்படுதல் எனும் விதி.
உடலெங்கும் பெருகியோடும்வியர்வை நதியின்ஓயாத் தீண்டலைஒதுக்கி விடுமெனதேடித்தேடி நில்லா இடம் விட்டுநிழலென்ற அமுதத்தை நேசமென விரியவைக்கும்கிளை பரப்பிக் கிடந்தமரத்தின் கீழேபாதையின் ஓவியத்தில் பகலிரவாய் உழைப்பைக் கூட்டிதன்னையே கரைத்துவிட்டயாசகனைப் போலவேபலனைத் தேடாத பக்தனெனநின்றுவிட்ட நிலையில்ஆடாமல் அசையாமல்வேடிக்கை பார்க்கத் துவங்கியதுகிளைக் கண்ணிலிருந்து மரம்.நின்றுவிட்ட இயக்கத்தின்நீள் கதையைச் …