shanthy Mariyappan

நல்லாச்சி – 28

This entry is part 28 of 40 in the series நல்லாச்சி

வெய்யில் வாட்டுகிறதாம் நல்லாச்சியைவருடந்தோறும் அதிகரிப்பதாய்ப் புலம்புகிறாள்மழையும் குளிரும் வெயிலும்அதிகரித்துகொண்டே போவதாய்ச்சொல்லிஅந்தந்த தெய்வங்களை ‘அர்ச்சிக்கிறாள்’ஒருவரையொருவர் நோக்கிக்கொள்கின்றன அவைபாவம்போல்குளிருக்கென்றோர் தெய்வம் இல்லாமல்தவித்துத் திரிகின்றன அர்ச்சனைகள் முற்றத்தைப்போர்த்திய தென்னங்கிடுகுசாளரங்களைத் திரையிட்ட வெட்டிவேர்குலைகுலையாய் நுங்கும் இளநீரும்கூடவே கொஞ்சம் மோரும் பானகமும்ஆயுதங்களுடன் தயாராகத்தானிருக்கிறாள்குட்டிச் சிப்பாய் பேத்தியுடன் அவ்வூரைக் கடக்குமட்டும்மேகத்தில்…

Read more

நல்லாச்சி – 26

This entry is part 26 of 40 in the series நல்லாச்சி

நல்லாச்சியிடம் கதையளக்கிறாள் பேத்திகண்டபடி பறக்கிறது கற்பனைக்குதிரைகதை சொல்வதும் அளப்பதும்ஆச்சிகளின் வழக்கம்இங்கு இன்றுஅது பேத்தியின் முறை நல்லாச்சியின் முதல் விமானப்பயணம்குதூகலம் பாதிகலவரம் பாதியென இருப்பவளிடம்தான்கண்ணகல உரைக்கிறாள் பேத்திமேகங்களின் மேல் ஓய்வெடுக்கும் நிலவைவன்னமிகு இந்திரலோகத்தைமேலோகம் சென்ற மூதாதையரைகண்குளிரக் காணலாமென்கிறாள்அறிவுக்கும் சந்தேகத்துக்குமிடையேஊசலாடுகிறது நல்லாச்சி உள்ளம் உயரப்பறந்த…

Read more

நல்லாச்சி – 25

This entry is part 25 of 40 in the series நல்லாச்சி

நாளும் நாலு நல்லதைநடைப்பயிற்சியின்போது அலசுவதுநல்லாச்சிக்கும் பேத்திக்கும் வழக்கம்தகவல்கள் பரிமாறுவதுபோலவேஅறிவுரைகளும் பரிமாறப்படும்பேதமின்றி ஏற்பாள் நல்லாச்சி வகுப்புத்தோழி குடும்பச்சண்டையால்அம்மாச்சி ஊருக்குப் போய்விட்டது முதல்நாளது தினம் தொலைக்காட்சிச்செய்தி வரைபிழிந்து அலசியபின்பேத்திக்கு வருகிறது சந்தேகமொன்றுமனிதர்கள் ஏன் மோதிக்கொள்கிறார்களென அகந்தையும் தன்முனைப்பும்பெற்றுப்போட்ட காரணங்கள்தாம்காரணங்களென்கிறாள் நல்லாச்சிதுளிக்குள் பிறந்தழியும்மாந்தர் அறியாரோதுளிக்குள் துளியே…

Read more

வலை ஜிமிக்கி

அந்த ஜிமிக்கி அவளுடைய பாட்டி அவளுக்குப் பரிசாகக் கொடுத்தது. நுணுக்கமான தங்க வேலைப்பாடுகள் கொண்ட அந்த டிசைன், சீராகப் பின்னிப்பின்னி பூவும் கொடியுமாக நிறைந்து, விளிம்பில் சின்னஞ்சிறு முத்துகள் தொங்க, சின்ன குடை போல் அவளது காதுகளில் அசைந்து கொண்டிருக்கும். பேசும்போது…

Read more

தனிமையின் தண்மை

தூரத்து மலையில்தனித்தலையும் ஒற்றைக்குருவிமனிதவாசம் படா வெளியில்ஒற்றையாய்ப்பூத்திருக்கும் நீலப்பூஇன்னொரு ஒற்றைப்பாறைக்குதாவிச்செல்லும் வரையாடுதன்னுள்மூழ்கித் தியானிக்கும்அலையற்ற சிறுகுளம்அவரவர் தனிமைக்குஅவரவரே துணையாயிருக்கபனித்துகள் திரட்டிநிலாப்பொம்மை செய்கிறது மலைஒவ்வொருவரின் தனிமையையும்கதகதப்பாய் அணைக்கிறது நிலாகுளிர்கிறது தனிமை.

Read more

நல்லாச்சி – 24

This entry is part 24 of 40 in the series நல்லாச்சி

உலகத்து வெயிலெல்லாம் உம்மேலதான்’செல்லமாகக் கடிகிறாள் நல்லாச்சிநட்புகளுடன் விளையாடும் பேத்தியைஉச்சிப்பொழுதின் வெப்பம்வாட்டுமென்ற அக்கறையில்கலந்தாலோசித்த பட்டாளம்திருவிழா விளையாட்டைத் தேர்கிறதுஅறங்காவலராக்குகிறது நல்லாச்சியை செங்கற்களே மூர்த்தங்களாய்அகப்பட்ட பூக்களே தோரணங்களாய்வடிவெடுக்கிறது சப்பரம்பூஜைப்பொருட்கள் ஒருவன் உபயம்நைவேத்யம் ஒருத்தி கொணர்கிறாள்காற்றில் ஒருவன் கொட்டுமுழக்கதாத்தாவின் கைத்தடி நாகஸ்வரமாகிறதுஏதும் கொணராத ஒருத்தியைவிலக்குகிறது கூட்டம் பதைக்கிறாள்…

Read more

நல்லாச்சி – 23

This entry is part 23 of 40 in the series நல்லாச்சி

பனிச்சறுக்கு விளையாட ஆசை பேத்திக்குநயந்தும் பயந்தும்பெற்றோர்க்குச்சொன்னவையெல்லாம்கிணற்றில் சறுக்கிய கல்லாய்க் கிடக்கவழக்கம்போல் சரணடைகிறாள் நல்லாச்சியிடம் இமயமலை பற்றி விளக்கினால்‘ஆராம்ளி மலய விட ஒசரமா?’ என்கிறாள்மணல்மணலாய்ப் பனித்துகள் காணலாமென்றால்‘ஆத்தங்கரையில் இல்லாத மணலா?’ என்கிறாள்ஊரே குளிர்ந்திருக்குமென ஆசை காட்டினால்‘தடுமம் பிடிச்சுக்கிடும்ல’ என்கிறாள்ஊரே உலகமென வாழ்ந்த நல்லாச்சி…

Read more

நல்லாச்சி – 22

This entry is part 22 of 40 in the series நல்லாச்சி

சாப்பிடுவதற்குசெரை படுத்தாத பேத்திஏனோசில பொழுதுகளில் சுணங்குவதுண்டு‘காத்தாட சாப்பிடுதேன்’ என்றபடிகிணற்றடிக்குத் தட்டுடன் செல்பவள்துலக்கி மினுக்கி மீள்வாள்அம்மட்டில் திருப்தியுற்ற நல்லாச்சிகண்டுகொள்ளாதிருக்கிறாள் சின்னவளை ‘காத்தாட’ தனித்துண்ணும் பொழுதுகள்சந்தேகத்தை விதைக்கின்றனஅன்னையின் மனதில்செல்லப்பேத்தியைச் சொல்லுக்கு ஆளாக்கினால்ஆச்சி வீசுவாள் கண்டனக்கணையைஅகிலமே ஆச்சிக்கு அஞ்சும்போதுஅன்னை எம்மாத்திரம்எனினும்புகையை ஒளிக்க இயலுமோ!! கரையவிட்ட தோசைகள்…

Read more

நல்லாச்சி – 21

This entry is part 21 of 40 in the series நல்லாச்சி

விதைத்த சோளக்காடு அறுவடைக்கு நிற்கிறதுதளவாடங்களுடன் கிளம்புகிறது குடும்பம்கோணிகளோடு நல்லாச்சியும்சிறு பையுடன் பேத்தியும் தொடர்கின்றனர் கும்பிட்டு அறுத்தமுதல் கதிரே சாவியாய் இருக்கஅடுத்தடுத்த கதிர்களும் அப்படியேபோனால் போகிறதெனஒன்றிரண்டு சோளமுத்துகளைச் சுமந்துவெறுஞ்சிப்பியாய் பிளந்திருக்கின்றன மீதமுள்ளவைபறவைகள் பாதி நாம் மீதியெனபிரிக்கத்தேவையின்றிகாலிப்பாத்திரத்தை வைத்திருக்கிறாள் மண்மாதாமலைத்து நிற்கின்றனர் மற்றவர்பரிகசிக்கிறாள் பேத்தி…

Read more

நல்லாச்சி – 20

This entry is part 20 of 40 in the series நல்லாச்சி

தொலைத்த இடத்தில்தான் தேடணும்என்கிறாள் நல்லாச்சிதினமும் ஏதேனுமொன்றைத்தொலைக்கும் பேத்தியிடம்அவள்எங்கோ தொலைத்ததையெல்லாம் கண்டுபிடிக்கும்மந்திரக்கோலன்றோ நல்லாச்சிஎனினும்அல்லல் அதிகமானால் அலுத்தும்கொள்வாள் பொருட்களைத்தொலைத்தே பழக்கப்பட்ட பேத்திஒருநாளில்நல்லதோர் நட்பையும் தொலைக்கிறாள்பிரிவென்ற பெயரில்;அவ்வன்பை எங்கே தேடுவதெனக் குழம்புகிறாள்பெற்றோரின் அன்போஉற்றாரின் அன்போஇன்னபிற களித்தோழரின் அன்போஇணைவைக்க இயலாமல் தத்தளிக்கின்றனதூக்கமின்றி ஏக்கத்தில் மெலிகிறாள் பேத்திமாற்றமொன்றே மருந்தாகும்…

Read more