தனிமையின் தண்மை

தூரத்து மலையில்
தனித்தலையும் ஒற்றைக்குருவி
மனிதவாசம் படா வெளியில்
ஒற்றையாய்ப்பூத்திருக்கும் நீலப்பூ
இன்னொரு ஒற்றைப்பாறைக்கு
தாவிச்செல்லும் வரையாடு
தன்னுள்மூழ்கித் தியானிக்கும்
அலையற்ற சிறுகுளம்
அவரவர் தனிமைக்கு
அவரவரே துணையாயிருக்க
பனித்துகள் திரட்டி
நிலாப்பொம்மை செய்கிறது மலை
ஒவ்வொருவரின் தனிமையையும்
கதகதப்பாய் அணைக்கிறது நிலா
குளிர்கிறது தனிமை.

Author

Related posts

அரலுவா மரா (பூக்கும் மரம்) – கன்னட நாட்டுப்புறக் கதை

முனைவர் ஹஸனுத்தின் அஹ்மது எழுதிய “The History of the Muslim Ummah” என்ற நூலின் அறிமுக உரையில் இருந்து சிறுபகுதி.

ஜப்பானிய சிறுவர் கதைகள் 18 – மொழியாக்கம்