தனிமையின் தண்மை

தூரத்து மலையில்
தனித்தலையும் ஒற்றைக்குருவி
மனிதவாசம் படா வெளியில்
ஒற்றையாய்ப்பூத்திருக்கும் நீலப்பூ
இன்னொரு ஒற்றைப்பாறைக்கு
தாவிச்செல்லும் வரையாடு
தன்னுள்மூழ்கித் தியானிக்கும்
அலையற்ற சிறுகுளம்
அவரவர் தனிமைக்கு
அவரவரே துணையாயிருக்க
பனித்துகள் திரட்டி
நிலாப்பொம்மை செய்கிறது மலை
ஒவ்வொருவரின் தனிமையையும்
கதகதப்பாய் அணைக்கிறது நிலா
குளிர்கிறது தனிமை.

Author

Related posts

ஹைக்கூ – என்பார்வையில்: பகுதி 3 – ஹைக்கூ இலக்கணம்

திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 2

தான வீர சூர கர்ணன் – 6