பேரன்பும் பெருங்கருணையும்ததும்பித்தளும்பிய காலக்கடலிலிருந்துபொங்கிப்பிரவாகித்துகரைதழுவ ஓடி வந்தன நினைவலைகள்நினைவுகளெனில் பாலைவனச்சோலையுமாம்நினைவுகளெனில்புன்னகையின் பின்னொளிந்த கோரப்பற்களுமாம் வாழ்வெனும் காட்டாற்றின் நடுவேசிறுதுண்டு நிலமாய்காலூன்றி ஆசுவாசம் கொள்ளவும்மலர்ந்திருக்கும் நினைவுகளில் கமழும்நறுமணத்தால் பேதலித்துகாலடி நிலம் நழுவவும்இளஞ்சூரியன் சிரிக்கும் இவ்வீதியில்அதோ அந்தக்குழந்தையின் நகைப்பொலியாய்ஓங்கியொலித்துஇறுதியில் முணுமுணுப்பாய்த் தேய்ந்தடங்கவும்என நங்கூரமிட்டுவரிசையாய் நிற்கின்றன நினைவுகள்அவ்வப்போது பார்த்துக்கொள்ளும்நட்சத்திரங்களைப்போல் …
சாந்தி மாரியப்பன்
வாழும் பல்லியும் மனைப்பாம்பும்அரங்கு வீட்டில் உலவும் தேள்களும்அசைத்துப்பார்த்ததில்லை பேத்தியைபெரிய தாத்தாவின் முழ நீளத்தாடிக்கும்மிலிட்டரி மாமாவின் கம்பீர மீசைக்கும்சற்றும் பயந்ததில்லை அவள் கண்ணைக்குத்துவதாய்ச்சொல்லப்படும் சாமியிடமும்தூக்கிச்சென்றுவிடுவதாய்நிறுத்தப்படும் பூச்சாண்டியிடமும்ராஜபார்ட்டுகளுக்குக் கோமாளிவேஷமிடுகிறார்களேயெனபரிதாபமேயுண்டு அவளுக்குதேனீக்குப் பயப்படாத மாமன்குளவிக்கு அஞ்சும் விந்தையும்முரட்டுக்காளையைத் தட்டி விலக்கும் செல்லாச்சிமருமகளிடம் காட்டும் பணிவும்என்றுமே புரிந்ததில்லை …
ஒட்டி இழையும் குஞ்சுகளையெல்லாம்எட்டித்துரத்தும் கோழியின் போக்குகொஞ்சமும் பிடிக்கவில்லை பேத்திக்குநல்லாச்சியிடம் வந்து அங்கலாய்க்கிறாள்‘பிள்ளேளுக்க தப்பை அம்மைதானே மன்னிக்கணும்அதுகளுக்கேது போக்கிடம்’ வெதும்பும் பேத்தியைதேற்றுகிறாள் நல்லாச்சி புன்னகையுடன்‘அட! கோட்டிப்பயபுள்ள.. குஞ்சுகளையெல்லாம்கோழி தவுத்துட்டுது’ என்கிறாள்‘தவிர்த்துவிட்டது’ எனத் தெளிவாயும் செப்புகிறாள்புரியாமல் தலைசொரியும் பேத்திக்குஇரைதேடல் முதல்இரையாகாமல் தப்புதல் ஈறாகப் பயிற்றுவித்தபின்குழந்தைகளைசுயமாய் …
சுரைக்குடம் கட்டிச் சில நாட்கள்காற்றடைத்த பையுடன் பலநாட்கள்கவிழ்த்த குடத்துடன் ஒன்றிரண்டு நாளேகடப்பாரை நீச்சலை மறந்துகெண்டை மீனாய் நீந்துகிறாள் பேத்திநீரில் தானுமொரு துளியாய்க்கலந்தவளுக்குநிலமென்பது நினைவிலேயே இல்லை ஆறும் குளமும் யோசிக்கின்றனஅடுத்த ஊருக்குப் போய்விடலாமெனதவளைகளெலாம் தப்பித்துவிட்டன எப்போதோ‘கலங்கியது தானே தெளியும்’அமைதிப்படுத்துகிறது மூத்த ஆறொன்று‘வாய்ப்பில்லை’ என்கிறது …
கிடத்திய கிடுகில் வைக்கோல் பரப்பிஅதற்குக் குளிராது வேட்டி போர்த்திசுடுசாதம் கொட்டிப்பரத்துகிறாள் நல்லாச்சிமுத்தாய்ச்சொட்டும் துளிகளெல்லாம்சத்தமில்லாமல் பயணிக்கின்றன கிடுகு வரை அம்பாரச்சோறு அடங்குகிறது அண்டாவில்சம்பாரம் பயணிக்கிறது அத்தோடுமுற்றத்து முருங்கை சாம்பார் உசத்தியாம்கிரீடமாய்ப் பயணிக்கிறது நல்லாச்சி தலைமேல்சோற்றுப்படையெடுத்துச் செல்கிறாள்நடவு வயல் வீரர்களை நோக்கிகுழம்பும் கறியுமாய் ஆயுதமேந்தி …
திடலின் ஓரத்திலிருக்கும்ஆலமரத்தைக் கண்ணுறுந்தோறும்ஆவலும் பயமும் கொள்வாள் பேத்திகிளிகளைப்போன்ற அக்காக்களும்அக்கக்கோவெனும் கிளிகளும்இறுகப்பற்றி ஊஞ்சலாடும் விழுதுகள்ஆசையையும் பயத்தையும் விதைத்திருந்தன அவளுக்குள் விண்ணுக்கும் மண்ணுக்கும்பாலமாயிருந்த விழுதுகளில் சிலபாதாள லோகத்தையும் பார்த்துவரப்புகுந்திருந்தனஎண்ணெய் தடவாத முடிக்கற்றையெனநுனிகளில் பிளந்து கிளைத்திருந்தன சிலஅக்கையொருத்தி கைபற்றிச்சேர்க்கவிழுது பற்றி ஆடிய பேத்திஅதே வீச்சில்பூமியை முத்தமிட்டுப் …
பூக்களென்றால் கொள்ளைப்பிரியம் பேத்திக்குசூட்டிப்பார்ப்பதில் அதிகப்பிரியம் நல்லாச்சிக்குதென்னைமரக்குடுமி வைத்த பிராயத்திலிருந்துகருநாகம் போல் பின்னலிடும் வயது வரைவிதவிதமாய்ச் சூட்டி அழகு பார்க்கிறாள்சூட்டும்போதே பயன்களையும் சொல்லிவளர்க்கிறாள்தாழைப்பூமுடித்து மருக்கொழுந்து சூடிய பொழுதில்குழந்தை மீனாட்சியாய் வரித்துசுற்றிப்போட்டும் கொள்கிறாள் பன்னீர், சண்பகம், ரோஜா, மகிழம், டேலியா எனதாத்தாவின் தோட்டத்தில் பூக்கிறதுஅந்தப் …
தீபாவளிக்கு ஆரோக்கிய அல்வா வேண்டுமெனஅரை மணி நேரமாய்எசலுகிறான் மாமன்அசையாமல் அமர்ந்திருக்கிறாள் நல்லாச்சிஎடையும் இடையும் பெருகாமல்எண்ணெய்யும் நெய்யும் தொடாமல்நாவினிக்க வேண்டுமாம் தீபாவளிஇத்தனை விதிகளைப் பரப்பினால்என் செய்வாள் அவளும் நல்லாச்சியின் பட்டியலைதலையசைத்து ஒதுக்குகிறான்பேத்தியின் பட்டியலையோகண்டுகொள்ளவேயில்லைபழைய மனப்பான்மை கொண்ட உங்களுக்குநவீன நடைமுறை தெரியாதெனகேலியும் செய்கிறான் ஆரோக்கிய …
ஐந்தாறு நாட்களாய்அமர்க்களப்பட்டுக்கொண்டிருக்கிறது வீடுபருப்புப்பொடியும் ஊறுகாய்களும் இன்னபிறவும்பாட்டிலில் அடைபட்டுக்கொண்டிருக்கின்றனஆரவாரம் கண்டு புருவமுயர்த்துகிறாள் பேத்தி‘அண்ணன் வெளிநாட்டுக்குப்போறாம்லா’குறிப்பறிந்து கூறுகிறாள் நல்லாச்சி பத்தில் ஒரு பங்கைச் சேமித்து வைஅன்றாடம் கணக்கெழுதுநிர்வாகப்பாடத்தை மூளையில் திணிக்கின்றனர்அப்பாவும் அம்மாவும்வம்புவழக்கில் போய் விழாதேஅறிவுரையுடன்தலைவலி வாசனாதி திரவியங்களுக்குதுண்டு போட்டு வைத்தாயிற்று அக்கம்பக்கத்தினர்தாத்தா கிணற்றடியில்துணி வெளுக்கக் …
வயலில் நடக்கும் அறுவடையை மேற்பார்வையிடவென தொற்றிக்கொண்டு கிளம்பினாள் பேத்தியும் கேள்விகளும் பதில்களுமாய் வழிப்பாதையை நிரப்பிக்கொண்டே சென்றாலும் அறுவடை என்பது ஒரு வடையல்ல என்பது சற்று ஏமாற்றத்தையே கொடுத்தது அவளுக்கு
- 1
- 2