1.
கல்லின் பிளவில்
புல்லின் நுனி
நுழைகிறது விடியல்.
2.
உடைந்த மண்பாண்டம்
தேங்கிய மழைநீரில்
மிதக்கும் மேகம்.
3.
தனிப்பறவையின் கூவல்
ஆடும் வெற்றூஞ்சல்
காத்திருப்பின் கனம்.
4.
அசையாத கொக்கு
நதியைக் கடக்கும் மேகங்கள்
எதற்கும் அவசரம் இல்லை.
5.
அசையும் வெற்றுக்கிளை
தேடுகிறது காற்று
திரும்பாத சிறகுகள்.
6.
சுள்ளி சேகரிக்கும் பறவை
கூட்டைக் கலைக்கும் காற்று
மற்றுமொரு சுள்ளி.
7.
வாசலில் சிறு செருப்புகள்
மண்ணில் முதல் மழைத்துளி
மலர்ந்த முற்றம்.
8.
காலியான கூடு
புதிய சிறகொலி
திரும்பும் வசந்தம்.
9.
நிலவில்லாத குளம்
மூடப்படாத ஜன்னல்
தாமதிக்கும் ஒளி.
10.
பழைய மரப்பெட்டி
மங்கும் மணம்
உறங்கும் காலம்.
11.
பழுத்து உதிரும் இலை
திறக்காத கடிதம்
முகவரி மாறவில்லை.
*
ஒளிப்படம் மற்றும் குறுங்கவிதைகள்: ராமலக்ஷ்மி