யாரோ ஒருவரின் திராட்சை ரசம் நான்பருகப் பருகக் கடக்கிறது காலம்ஒரு நாள் அது கசப்பின்அடையாளமாகிறதுபருகியவர்கள் எவரும்இது திராட்சை ரசமெனஒப்புக் கொண்டதில்லை என்பதுதான்…. எனது வேர்களிலும்கனிகள் விளையும்உரமொன்றைத் தயாரிக்கிறார்கள்எனக்கே எனக்கெனமெனக்கெட்டதாகதூற்றித் திரிகிறார்கள்அறுவடைக் காலங்களில்பள்ளத்தாக்கில் வீசப்படும்மீதக் கனிகள்விரும்பாவிட்டாலும் நஞ்செனப் பரவுகிறதுகனிகளற்ற கிளைகளில்வந்தமர்கிறதுவண்ணத்துப் பூச்சியின்இறகொன்று. அவர்களின் …
கவிதை
வீட்டுத் திண்ணையில் காலைச் சூரியன்அந்தி சாயும் வரைக்கும் என் கண் தேடும்,இத்தனை வருடம் காலடிச் சத்தம்கேட்டதெல்லாம் இப்போதேன் தூரம். ஊர் தாண்டி நீ போனதனால்,சுவரெல்லாம் நீ சாய்ந்த இடம்,பாயெல்லாம் நீ படுத்த நினைவுகள்,பேச ஒரு வார்த்தை இல்லையே நீயின்றி. பழைய சோற்றைக் …
மயங்கும் இருளை மறுக்கும் ஒளியாய்,மனங்களில் மேகம் களைக்கும் வான்மழையாய்,அழகு தீபம் அலங்கரித்ததோர் தருணம்,அறத்தை மொழியும் அகல் விளக்கமிது. இருள் வாழும் இடம் தெரியாது,ஓர் ஒளி வந்தால் தவம் முடியும்;அந்த ஒளியாம் இந்நாள் வாழ்த்து,அன்பெனும் வாசலில் அழைக்கின்றது. அரசர் குடியில் தீபமிட்டார்,ஆசையுடன் கூடி …
தீபாவளிக்கு ஆரோக்கிய அல்வா வேண்டுமெனஅரை மணி நேரமாய்எசலுகிறான் மாமன்அசையாமல் அமர்ந்திருக்கிறாள் நல்லாச்சிஎடையும் இடையும் பெருகாமல்எண்ணெய்யும் நெய்யும் தொடாமல்நாவினிக்க வேண்டுமாம் தீபாவளிஇத்தனை விதிகளைப் பரப்பினால்என் செய்வாள் அவளும் நல்லாச்சியின் பட்டியலைதலையசைத்து ஒதுக்குகிறான்பேத்தியின் பட்டியலையோகண்டுகொள்ளவேயில்லைபழைய மனப்பான்மை கொண்ட உங்களுக்குநவீன நடைமுறை தெரியாதெனகேலியும் செய்கிறான் ஆரோக்கிய …
ஆலய வாசலின் முன்னிருந்தஆரவாரமிக்கப் பூக்கடைகளைத் தாண்டிவீதியின் அமைதியான ஓரத்தில்சாயம் போன குடைக்குக் கீழ்மூங்கில் கூண்டிற்கு உள்ளேசைகைக்காகக் காத்திருக்கிறது கிளி. வருவோர் போவோரைக் கவரும்வாய்கொள்ளாப் புன்னகையுடன்பச்சைக்கரையிட்ட மஞ்சள் வேட்டியும்இளஞ்சிகப்பில் சட்டையும், நெற்றியில்விபூதிப் பட்டையுடன் சந்தனமும் குங்குமமும்தரித்த ஜோஸியர்விரல்களைச் சொடுக்கவும்தாவிக் குதித்து வெளியே வருகிறது …
காதல் கோள்கள் நாம் பூமியில் மட்டும்சந்தித்துக் கொள்ளவில்லை நண்பனே மின்னிக் கிடக்கும் பலகோடி நட்சத்திரங்கள்எப்படி வந்தன என்று கேட்டாய்நான் உடனே ஒரு முத்தம் தந்தேன்அவை ஆகின பல கோடியே ஒன்றுதாரகைகளெல்லாம் முத்தங்களெனில் நிலவு?அது சற்றே நீண்ட முத்தம் பால்வெளி நிரப்பிய காதலின்போதாமையில் …
எனது கண்ணீர் ஆன்மாவிலிருந்து வடிவதுஅதன் தூய்மைஒருவரைப் பகலிலும் தூங்க விடாததுஎத்தனை மைல்களுக்கு அப்பால்இருந்தாலென்னஎத்தனை காலத் தொலைவு இருப்பினும் என்னஇனி தேடவேண்டிய எந்த அவசியங்களுமில்லைநீயே உதிர்த்த சொற்கள்தான்நான் மாயங்களை நிகழ்த்துபவள்நீ எனை வந்து சேர்வாய் தேவ.
மண்பட்ட பாவாடையோடு மண்ணிலே விளையாடினாய்விறகடுப்பில் பூத்த புகையில் கண் சிவந்து சிரித்தாய்இந்தக் கிராமம்தான் என் உலகம்என் குடும்பம்தான் என் சந்தோஷம்இந்தச் சிறு வட்டமே என் வானம்உனக்கும் இங்குதான் இடமென்றுஇத்தனை வருடங்களாய் நான் வாழ்ந்தேன்வெளியிடம் வேறு தேசம் தெரியாமலேஎன் வாசல் தாண்டிப் போகாதே …
ஐந்தாறு நாட்களாய்அமர்க்களப்பட்டுக்கொண்டிருக்கிறது வீடுபருப்புப்பொடியும் ஊறுகாய்களும் இன்னபிறவும்பாட்டிலில் அடைபட்டுக்கொண்டிருக்கின்றனஆரவாரம் கண்டு புருவமுயர்த்துகிறாள் பேத்தி‘அண்ணன் வெளிநாட்டுக்குப்போறாம்லா’குறிப்பறிந்து கூறுகிறாள் நல்லாச்சி பத்தில் ஒரு பங்கைச் சேமித்து வைஅன்றாடம் கணக்கெழுதுநிர்வாகப்பாடத்தை மூளையில் திணிக்கின்றனர்அப்பாவும் அம்மாவும்வம்புவழக்கில் போய் விழாதேஅறிவுரையுடன்தலைவலி வாசனாதி திரவியங்களுக்குதுண்டு போட்டு வைத்தாயிற்று அக்கம்பக்கத்தினர்தாத்தா கிணற்றடியில்துணி வெளுக்கக் …
வயலில் நடக்கும் அறுவடையை மேற்பார்வையிடவென தொற்றிக்கொண்டு கிளம்பினாள் பேத்தியும் கேள்விகளும் பதில்களுமாய் வழிப்பாதையை நிரப்பிக்கொண்டே சென்றாலும் அறுவடை என்பது ஒரு வடையல்ல என்பது சற்று ஏமாற்றத்தையே கொடுத்தது அவளுக்கு