பிறவாமை வேண்டும் என்பதேஅனைவரின் இறைஞ்சலாகினும்வேண்டாமல் பிறத்தலும், இறத்தலும்இடையே போராடி வாழ்தலும்காலத்தின் கட்டாய விதி. அவரவர் வகுத்துக்கொண்டகுறுகிய வட்ட எல்லையில்செக்கைச் சுற்றி உழன்றுஓய்வில்லாது பொருள் ஈட்டிடபணிப்பது வாழ்வின் அயற்சி. கதிரொளியும் புள்ளினக் கூவலும்சாளர வழி கூட ரசிக்க இயலாதுநில்லாது ஓடும் காலச்சக்கரத்தினைதுரத்தி ஓடிக்கொண்டே …
நளினி சுந்தரராஜன்
“மாமைக் கவினே” – மாநிற/கருமை அழகே!
முன்னுரை நிறம் – மனித இனத்தில் உயர்வு, தாழ்வு பேதம் தோன்றக் காரணங்களுள் முதன்மையாக உள்ளது தோலின் நிறம். புவியில் வாழ் நிலம் பொறுத்தே மனிதனின் நிறம் பெரும்பாலும் அமைகிறது. சூரியனின் புற ஊதாக் கதிர்களும் (UV rays), வெம்மையும் அதிகம் …
அன்பிலூறிய சொல்லாரம் அவள்அகழாத புதுமொழி அவன்பேரின்பக் கவிதை காதல்! ஆழ்நிலைக் கனவு அவள்முடிவிலா மோனநிலை அவன்மதி மயக்கம் காதல்! இதயத் துடிப்பு அவள்இயக்கிடும் சுவாசம் அவன்ஊனோடு உயிராகும் காதல்! நேசத்தின் அரசி அவள்பாசமாளும் அரசன் அவன்பிரியாவரம் முடிசூட்டும் காதல்! இன்னிசை ஸ்ருதி …
வள்ளுவன் தந்த பொதுமறைபிறவிக் கடல் நீந்தப் பொற்கலம்!ஈராயிரங் கால நீதிநூல்வாழ்வியல் செறிவாக்கிடும் நற்பாடம்!முப்பாலின் முத்தான பாக்கள்பண்பு நெறியூட்டும் நல்லுரம்! அன்பும், அறமும், கல்வியும்,அரசு முறையும், குடி கடமையும்பாங்கே படிப்பிக்கும் போதிமரம்!அருளும், நட்பும், இன்சொல்லும்இன்பமும், இல்லறமும், காதலும்சேர்ந்தே பொதிந்துள்ள நித்திலம் ! அல்லவை, …
உறைபனி காலத்திற்கு முன்பிங்கேஇலையுதிர் காலத்திற்கு நன்றி!வேர்கள் சாகாமல் காத்திடும்இலைப் போர்வைகளுக்கு நன்றி! வசந்தம் வரை உறங்கிடும்தாவரங்களுக்குத் தளிரான நன்றி!நீள் துயில் கொள்ளும்வண்டுகளுக்கு வாஞ்சையான நன்றி! நவம்பரில் நல்விளைச்சல் தந்திட்டஉழவருக்கு முதல் நன்றி!உழவுக்கு ஊனாய் உழைத்திட்டவிலங்குகளுக்கு உளமார நன்றி! பாதம் தாங்கும் பூமிக்குநிலம் …
கைப்பிடி உணவும் கண்டாலும்தன் இனம் கரைந்தழைத்துகூடி உண்ணும் காக்கை; கூட்டுக்குள் புழுவாய் ஒடுங்கினாலும்கடுந்தவமிருந்து ஒரு நாள்வண்ணச் சிறகடிக்கும் பட்டாம்பூச்சி; இனத்தில் ஒன்று அடிபட்டால்பதறித் துடித்துச் சுற்றிஉதவிக்காகப் பரிதவிக்கும் குரங்கு; வீழும் பயம் விடுத்துசேய் விண்ணில் பறக்கபயிற்றுவிக்கும் தாய்க் குருவி; நிறம் கருப்பென …
நன்னாளும் நன்முழுத்தமும் நன்கறிந்துபகை நாட்டார்க்குப் பறையறைந்துதூதன் சொல் கேட்டறிந்துசமாதானத்திற்கு வழியில்லை என்றுணர்ந்துஆநிரையும் முதியோரும் பிணியுடையோரும்அந்தணரும் குழவிகளும் பெண்டிரும்அரணுக்குள் பொத்திய பிறகு… குறித்ததொரு உதயப் பொழுதில்முரசறிவித்து படை நிறுத்திஅந்தி வரை சமரிட்டுஎதிர்ப்புறம் மடிந்த வீரர்கள்எரியூட்ட நேரங் கொடுத்துஇறுதியில் நிராயுதபாணியாய் சரணடைந்தோரைமரியாதையோடு சிறைப்பிடித்துஅறநெறியில் நிலம் …
- 1
- 2