இறைவன்மலரின் நறுமணம் பிரித்து எடுத்தான்மலைநேர் மரத்தின் மாண்பினைச் சேர்த்தான்புலரிப் பனியின் மென்மை குழைத்தான்புணரியினுள்ளிருந்த அமைதியினை அகழ்ந்தான்அந்திப் பொழுதின் அழகை வார்த்தான்ஆயிரம் விண்மீன் ஆன்மாவினை வடித்தான்சிலிர்க்கும் ஓடையின் நகையினை இட்டான்சிறகடிக்கும் புள்ளின் நளினம் கோர்த்தான்இத்தனை எழிலினையும் ஒன்றாய்ப் பிணைத்துஇணையிலாக் கலையினை இறைவன் முடித்தான்;முழுமை …
நளினி சுந்தரராஜன்
ஆங்கில மூலக்கவிஞர்: ஃபிலிப் லெவின் தமிழாக்கம்: நளினி சுந்தரராஜன் ஃபிலிப் லெவின் (1928-2015) மிகவும் புகழ்பெற்ற அமெரிக்கக் கவிஞர்களில் ஒருவராவார். பதின்ம வயதில் மிச்சகன் மாகாண கார் தொழிற்சாலைகளில் பணி புரிந்தவர். Assembly Line எனப்படும் உழைப்பாளர்கள் உடலையும், மனதையும் சோர்வடையச் …
கால் இடறிய நொடியில்குனிந்து பார்த்த அற்புதம்கண்கள் தான் நம்பவில்லை முந்தைய இரவு பெய்தவிண்மீன் மழைச் சாரலில்முளைத்தனவோ தெரியவில்லை இலையில்லா காம்புகளில்வழியெங்கும் நட்சத்திரப் பூக்கள்அழகினை விவரிக்க வார்த்தையில்லை எப்போதும் எதற்கும் நேரமின்றிநமக்காய் அதிசயங்கள் காலடியில்பூத்திருப்பதைக் காணாது கடக்கின்றோம் நின்று இரசித்து மகிழ்ந்திடஇயற்கை இறைஞ்சுகிறது …
அதிசயங்கள் – வால்ட் விட்மன்
தமிழாக்கம்: நளினி சுந்தரராஜன் அதிசயத்தைப் பற்றி யார் பெரிதாகப் பேசுகிறார்கள்?அதிசயங்களைத் தவிர வேறொன்றும் எனக்குத் தெரியாது, நான் மன்ஹாட்டன் வீதிகளில்நடந்தாலும் சரி, அல்லது வீடுகளின் கூரைகளுக்குமேல் விண் நோக்கிபார்வையைச் செலுத்தினாலும் சரி, அல்லது கடற்கரை ஓரத்தில்வெற்றுக் கால்களுடன்நீரின் விளிம்பில் நடந்தாலும் சரி, …
பள்ளி முடிந்துஅவசர அவசரமாகவீட்டிற்கு வந்துஅம்மா வருவதற்குள்பேனா மைத்துளிகள்கோலமிட்ட சீருடையைசோப்பு நீரில்முக்கித் துவைக்கையில்… பறந்து உடையும்வண்ண நீர்க்குமிழிகளில்அன்றைக்கு சூதுவாதின்றிநண்பர்களுடன் ஏமாற்றிகொட்டமடித்த எண்ணங்கள்மின்னி மறையும்; பிள்ளைப் பருவத்தில்ஏமாந்த கோபத்திற்குநீர்க்குமிழியின் ஆயுள்,நீடித்த நட்பினில்கடுமைகள் ஏதும்பலநாள் தொடராது. மனதினில் எதனையும்நிறுத்திக் கொள்ளாதிருக்கஒரு முறையேனும்மீண்டும் வாராதோ…கள்ளமில்லா பிள்ளைப்பருவஏப்ரல் 1.
ஆயிரமாயிரம் ஆண்டு காலம் மடியும் உயிர்கள்ஆழியின் ஆழ மடியில் சேரும்;மண்ணும் சேறும் நீரும் மூடமருளச் செய்யும் இருள் அங்கே சூழும்! பூமித் தாயின் வெப்பம் கனன்றுபுதைந்த உயிர்கள் கொள்கலனில் உருவம் மாறும்;அழுத்தம் தந்து மேலும் இயற்கை சமைக்கஅடியில் உருவாகும் அமுதம் கருப்புத் …
பிறவாமை வேண்டும் என்பதேஅனைவரின் இறைஞ்சலாகினும்வேண்டாமல் பிறத்தலும், இறத்தலும்இடையே போராடி வாழ்தலும்காலத்தின் கட்டாய விதி. அவரவர் வகுத்துக்கொண்டகுறுகிய வட்ட எல்லையில்செக்கைச் சுற்றி உழன்றுஓய்வில்லாது பொருள் ஈட்டிடபணிப்பது வாழ்வின் அயற்சி. கதிரொளியும் புள்ளினக் கூவலும்சாளர வழி கூட ரசிக்க இயலாதுநில்லாது ஓடும் காலச்சக்கரத்தினைதுரத்தி ஓடிக்கொண்டே …
“மாமைக் கவினே” – மாநிற/கருமை அழகே!
முன்னுரை நிறம் – மனித இனத்தில் உயர்வு, தாழ்வு பேதம் தோன்றக் காரணங்களுள் முதன்மையாக உள்ளது தோலின் நிறம். புவியில் வாழ் நிலம் பொறுத்தே மனிதனின் நிறம் பெரும்பாலும் அமைகிறது. சூரியனின் புற ஊதாக் கதிர்களும் (UV rays), வெம்மையும் அதிகம் …
அன்பிலூறிய சொல்லாரம் அவள்அகழாத புதுமொழி அவன்பேரின்பக் கவிதை காதல்! ஆழ்நிலைக் கனவு அவள்முடிவிலா மோனநிலை அவன்மதி மயக்கம் காதல்! இதயத் துடிப்பு அவள்இயக்கிடும் சுவாசம் அவன்ஊனோடு உயிராகும் காதல்! நேசத்தின் அரசி அவள்பாசமாளும் அரசன் அவன்பிரியாவரம் முடிசூட்டும் காதல்! இன்னிசை ஸ்ருதி …
வள்ளுவன் தந்த பொதுமறைபிறவிக் கடல் நீந்தப் பொற்கலம்!ஈராயிரங் கால நீதிநூல்வாழ்வியல் செறிவாக்கிடும் நற்பாடம்!முப்பாலின் முத்தான பாக்கள்பண்பு நெறியூட்டும் நல்லுரம்! அன்பும், அறமும், கல்வியும்,அரசு முறையும், குடி கடமையும்பாங்கே படிப்பிக்கும் போதிமரம்!அருளும், நட்பும், இன்சொல்லும்இன்பமும், இல்லறமும், காதலும்சேர்ந்தே பொதிந்துள்ள நித்திலம் ! அல்லவை, …
- 1
- 2