காதல்

காதலென்றால் என்னவென்று இங்கே பார்ப்போம்கதைபலவும் சொல்லிவந்தார் அதையும் கேட்போம்வாதமெனச் சொல்லிடுவர் ஆண்கள் எல்லாம்வண்ணமயில் பெண்ணழகால் வருமே என்றுபாதகமா ஒன்றுமிலை என்ன செய்யபாவையுடன் பழகிவிடின் எல்லாம் கூடும்சோதனைகள் வைத்துவிட்டே பெண்ணின் காதல்சொந்தமென அவளுளத்தில் முகிழ்க்கு மன்றோ*ஊனைத் துளைத்து உணர்வினில் புகுந்துதேனைக் குழைத்தே தந்துவிடும்…

Read more

நரிகளுக்காக – சார்லஸ் புக்கோவ்ஸ்கி

நான் தனிமையில் இருக்கிறேன்
என்பதற்காக
என்னை நினைத்து வருந்தாதீர்கள்.

ஏனெனில் மிகக் கொடூரமான
தருணங்களில் கூட
நகைச்சுவை
எனக்குத் துணையாக இருக்கிறது.

Read more

எண்ட்.. டோஹ்.. த்ரெ – 1

This entry is part 1 of 2 in the series எண்ட்.. டோஹ்.. த்ரெ

வணக்கம்.. நான் ஆரு.. இல்லை இல்லை நான் யார் என்ற வேதாந்தக் கேள்வி எல்லாம் கேட்க நான் உங்களிடம் வரவில்லை.. என் பெயரைச் சொன்னேன் அவ்வளவுதான். என் பெயர் ஆராவமுதன்; சுருக்கமாய் ஆரு.. ஐம்பத்து மூன்று வயது இளைஞன்.. எஸ்.. அழகாய்…

Read more

திருவை மு.இரா. கவிதைகள் – 6

வாழ்க்கையின் நிராசையில்என்ன செய்யப்போகிறேன் வாழ்ந்துஎனத் தவமிருந்து பெற்றெடுத்த பிள்ளை கூறியதுகாரணம் தொடர் புகைப்பழக்கம் பதினைந்தே வயதில்எல்லாவற்றையும் கண்டதுபோல்அனுபவித்து உணர்ந்ததுபோல் ஓர் உணர்வுகாரணம் கஞ்சாப்பழக்கம் கையாலாகாதவன் ச்சீ.. தண்டம்எனப் படுக்கையில் சுகம்காணாத மனைவி திட்டியும்ஆண்மையைப் பழித்தும் பயனில்லைகாரணம் போதைப்பழக்கம் பாழடைந்த வீட்டைக் காட்டிச்…

Read more

“பண்புடன்” – தொடருக்கான விமர்சனப்போட்டி

“பண்புடன்” மின்னிதழில் எழுத்தாளர் விஸ்வா.தி எழுதி தற்போது வெளியாகிக்கொண்டிருக்கும் “வரலாற்றில் பொருளாதாரம்” தொடருக்கான விமர்சனப்போட்டி அறிவிக்கப்படுகிறது. போட்டி விதிமுறைகள்​விமர்சனம் எழுத விரும்புவோர் இத்தொடரின் முதல் முப்பது அத்தியாயங்களை முழுமையாகப் படித்து, தொடரைப்பற்றிய தங்களின் விரிவான பார்வையைத் தொகுத்து வழங்க வேண்டும். கட்டுரையின்…

Read more

காலவெளி மருத்துவன்

காலமும் வெளியும் அந்த அறையில் எப்போதோ உறைந்து போயிருந்தது. அந்த அறையின் அரையிருளில் நான் அமர்ந்திருந்தேன். அறையின் நிசப்தத்தை நாற்காலியின் கால்கள் தரையில் உரசும் சத்தம் மெலிதாகக் கீறியது. எதிரே வந்து அமரும் உருவங்கள் இருளின் திரையிலிருந்து மெல்ல நழுவி வருபவை…

Read more

வரலாற்றில் பொருளாதாரம் – 30

சோழர்கள் வீழ்ந்த உடனே விஜயநகர ஆட்சி இங்கு தமிழகத்தில் வந்துவிடவில்லை; ஆனால் அவர்கள் இங்கு வரும்படியான நிலையை இங்கு உள்ளவர்களே உருவாக்கி இருந்தார்கள் என்பதுதான் நிஜம். எப்படி இராஜராஜ சோழன் மற்றும் இராஜேந்திர சோழன் ஆகியோர் செய்த படையெடுப்பு மற்றும் போர்களினால்…

Read more

தமிழே அமிழ்தே – 15

This entry is part 15 of 18 in the series தமிழே அமிழ்தே

முகநூல் எனப்படும் ஃபேஸ்புக்கில் நடைபெற்ற ஒரு கவிதைப் போட்டிக்கு அடியேன் எழுதி வென்ற ஒரு கவிதை கீழே. (பெரிய திட்டமிடல்கள் இல்லாமல் மனம் போன போக்கில் எழுதி வென்றது என்பதால் மிகுந்த மகிழ்வளித்தது) அந்த ஒரு மழை நாளில்.. உன் வீட்டில்…

Read more

உருதுக் கவிதை உலகு – 4: பஹாதுர் ஷா ‘ஸஃபர்’

This entry is part 4 of 7 in the series உருதுக்கவிதை உலகு

மீர்ஸா அபுல் முஸஃபர் மொஹம்மத் சிராஜுத்தீன் என்னும் இயற்பெயர் கொண்ட ஸஃபரின் பட்டப்பெயர் ‘பஹாதுர் ஷா’. பகதூர் ஷாவின் புனைபெயர் ‘ஸஃபர்‘. புனைபெயரையும் பட்டபெயரையும் சேர்த்து பஹாதுர் ஷா ஸஃபர் என அழைக்கப்பட்டார். மன்னனாகவும் கவிஞனாகவும் வாழ்ந்த ஸஃபர் தன் வாழ்க்கையைப்…

Read more

மீட்சி

கொல்லைப்புறத்திலிருந்த தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த பசுவின் அருகில் நின்று, அதன் முகத்தை மெதுவாக வருடிக்கொடுத்துக்கொண்டிருந்தார் சுந்தரம். ஐந்து நாட்களாக இரை எடுக்காமல் தண்ணீர் எதுவும் அருந்தாமல் பிடிவாதமாக கொலைப்பட்டினியாகக் கிடந்தது அந்தப்பசு. வழக்கமாக கொடுப்பதையெல்லாம் தின்றுவிட்டு போதாக்குறைக்கு கொடியில் காயும் துணிகளையும் ருசி…

Read more