பிக்பாஸ் வீட்டுக்குள்ள இன்னும் அந்த நா*ய் சுத்திட்டும் கத்திட்டும் தான் இருக்கு போல. இன்னைக்கு காலையில அலராம் அடிச்ச பிறகும் FJ தூங்குனத பாத்த டாகி வழக்கம் போல கத்த ஆரம்பிச்சுச்சு. பின்ன நார்மல் ஹவுஸ் ஆளுங்க எல்லாம் சுத்தி உக்காந்திருக்க …
தொண்ணூறுகளில், பள்ளிக்கால பதின்மவயது கிராமப்புற சாமானியனுக்கு, தீபாவளி என்பது சொர்க்கத்தைக் காணுமளவுக்கான ஒரு பெருவிழா. கிரைண்டரும், மிக்ஸியும் இல்லாமல் அம்மியும், குடக்கல்லும் ஆக்கிரமித்திருந்த வீடுகளில் எப்போவதாவதுதான் மாவரைப்பதால் பண்டிகைகாலப் பலகாரங்களுக்கு இணையாக அப்போதெல்லாம் இட்லியும் இருந்தது. தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் குளித்த …
தீபாவளி என்றவுடன் சிறுவயதில் வண்ண வண்ண மத்தாப்புக்களுடன் பண்டிகை கொண்டாடிய நினைவுகள் நெஞ்சில் பூக்கின்றன. அப்போதெல்லாம் கிராமத்துப் பாட்டி வீட்டிற்குப் போய்தான் தீபாவளி கொண்டாடுவது வழக்கம். கம்பி மத்தாப்பை கொளுத்தக்கூட அஞ்சி நிற்கும் எங்களுக்கு, சோளத்தட்டையில் கம்பி மத்தாப்பை சொருகித் தருவார் …
சில பெண்கள் தான் அழகாக இருக்கிறார்கள். அவர்களில் சரிதா ஒருத்தி. சில பெண்கள்.. ஏன் எவ்வளவோ பெண்கள் சாதாரணமாகத்தான் இருக்கிறார்கள். அவர்களில் நான் ஒருத்தி. அழகு என்றால் அகத்தழகு அது இது என்று புத்தகங்களில் எழுதுகிறார்களே அது இல்லை. நான் சொல்வது …
“தீபாவளி” சட்டென்று கடந்து போய் விட முடியாத அனுபவம்நமது பெரும்பான்மையான கொண்டாட்டங்கள் நினைவு சார்ந்தவை.பெரும்பான்மையான நினைவுகள் கொண்டாடத்தக்கவை. “தீபாவளி” நினைவெல்லாம் நிறைந்திருக்கும் தீபாவளி. எத்தனை, எத்தனை தீபாவளி. தீபாவளி என்பது அனுபவம்,இனிப்பான அனுபவம். தீபாவளி என்பது இனிய நிகழ்வுகளின் அனுபவம். அவை …
நன்னாளும் நன்முழுத்தமும் நன்கறிந்துபகை நாட்டார்க்குப் பறையறைந்துதூதன் சொல் கேட்டறிந்துசமாதானத்திற்கு வழியில்லை என்றுணர்ந்துஆநிரையும் முதியோரும் பிணியுடையோரும்அந்தணரும் குழவிகளும் பெண்டிரும்அரணுக்குள் பொத்திய பிறகு… குறித்ததொரு உதயப் பொழுதில்முரசறிவித்து படை நிறுத்திஅந்தி வரை சமரிட்டுஎதிர்ப்புறம் மடிந்த வீரர்கள்எரியூட்ட நேரங் கொடுத்துஇறுதியில் நிராயுதபாணியாய் சரணடைந்தோரைமரியாதையோடு சிறைப்பிடித்துஅறநெறியில் நிலம் …
136, என் மனதுக்கு இணக்கமான எண். என் பால்ய, பதின்ம வயது நினைவுகளால் நிரம்பிய வீட்டின் கதவு எண். வாசல் முதல் பின்புறம் வரை சுமார் நூறடிக்கு மேல் நீண்டிருக்கும் பழங்கால வீடு. வாசல் திண்ணையில் ஆரம்பித்து ஒவ்வொரு இடமும் தன்னுள் …
இப்போதைய வெளிநாட்டு வாழ்க்கையில் தீபாவளி என்பது விடுமுறை நாளாகக் கூட இல்லாமல் வேலை நாளாய்த்தான் கடந்து செல்கிறது. எனது சிறுவயதுத் தீபாவளிக் கொண்டாட்டம் இப்போது எங்கள் ஊரிலும் மாற்றம் கண்டிருந்தாலும் தீபாவளிக்கு ஊரில், அதுவும் சொந்தங்களுடன் இருப்பது மகிழ்வுதானே. அந்த மகிழ்வை …
இன்னும்கூட நன்றாக நினைவிருக்கிறது. அது பூப்போட்ட வெளிர் மஞ்சள் நிறச்சட்டை. அவன் அப்பொழுது ஏழாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தான். வீட்டிலிருந்த ஐவரில் மூவர் பெரிய மனிதர்களாகிவிட, நான்காவது அண்ணன் பத்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தான். இவன்தான் கடைக்குட்டி. அனைவருக்கும் செல்லப்பிள்ளை என்றாலும் அப்பாவிற்கு …
மனதில் ஒளிந்திருக்கும் நரகாசுரன்களை அழிப்போமா?
விடிந்தால் தீபாவளி.. ஊரே உற்சாகத்துடன் பரபரவென்று இருக்கிறது. இரவு நெடு நேரம் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தாலும் எப்பொழுது விடியும், புதிய ஆடை உடுத்தி பட்டாசுகளை வெடிக்கலாம் என்று சிறார்களும், மாமனார் வீட்டு உபசரிப்பில் மயங்கியபடி இளம் மனைவியைச் சுற்றி வரும் புது மாப்பிள்ளைகளும், கண்கவர் ஆடைகளில் …