இன்னொருத்தி நிகராகுமோ… எனக்கின்னொருத்தி நிகராகுமோ… இடி இடித்தால் மழையாகுமோ… பேதைப் பெண்ணே இன்னொருத்தி நிகராகுமோ இந்த மின்னலுக்கு அஞ்சேனடி… வீண் வாதமென்ன முன்னே வந்து நீ ஆடடி… – கொத்தமங்கலம் சுப்பு
Author
சின்னக் கண்ணன்
தானப்ப முதலித் தெருவில் வீட்டின் வாசலில் மூர்த்தி சைக்கிளை நிறுத்திப் பூட்டிவிட்டுத் திரும்பிய போது வாசலிலேயே நின்றிருந்தாள் பாட்டி. கண்களில் கவலை. “என்ன பாட்டி. இங்க நிக்கறேள்?. அம்மா ரிப்பன் பக்கோடா பண்ணினாளாம். உங்களுக்குக்கொடுத்துவிட்டு வரச் சொன்னாள்.”