புலவர்கள் உயர்வுநவிற்சியாகவும் நகைச்சுவையாகவும் பேசுவதில் வல்லவர்கள். அக்காலத்தில் அரசர்களையும் வள்ளல்களையும் புகழ்ந்து பாடிப் பரிசில்களைப் பெற்று வந்தனர். இக்காலம் போலவே இடித்துரைக்கும் புலவர்களும் இல்லாமலில்லை எனினும், தம் வறுமையைப் போக்கும் வள்ளல்களைப் பாடிப் பரிசில் பெறும் புலவர்கள் மிகுதியும் இருந்தனர். அப்படி …
இப்னு ஹம்துன், Ibnu Hamdun
இப்னு ஹம்துன், Ibnu Hamdun
எழுத்தாளர், வெண்பா வித்தகர், தமிழ் ஆர்வலர், மேனாள் தலைவர் - ரியாத் தமிழ்ச் சங்கம்.
தமிழரின் விருந்தோம்பல் அண்மையில் ஒரு நண்பரின் பதிவு இக்காலத்தில் உணவகங்கள் வணிகத்தில் வெற்றிக்கொடி நாட்டி வந்தாலும் மக்களின் உடல்நலம் குறித்து எந்த நல்லுணர்வும் இன்றி, எப்படியேனும் பொருள் ஆதாயம் என்ற போக்கில் செயற்படுவதைச் சுட்டிப் பேசியது. உண்மை தான். இக்காலம் பொருளே …
பழமொழிகளும் சொலவடைகளும். பழமொழிகள், சொலவடைகள் என்பன மொழியின் ஆழமும் அகலமும் கண்டோரின் அனுபவச் சாறுகள். அவை எல்லோருக்குமான மழை. தமிழில் மிக அருமையான பல பழமொழிகள், சொலவடைகள் இனிமையும் பொருத்தமும் உடையவை. வாழ்வைப் பிழிந்து கருத்தாகச் சொட்டும் பழமொழிகள் / சொலவடைகள் …
கவிதையைப் பற்றிப் பாரதியின் வரிகளில் சொன்னால், “சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சொற்புதிது, சோதிமிக்க நவ கவிதை எந்நாளும் அழியாத மகாகவிதை” எனலாம். மேலும்,‘நமக்குத் தொழில் கவிதை; நாட்டிற்குழைத்தல்இமைப்பொழுதும் சோராதிருத்தல்’ என்றான். அது 2006 ஆம் ஆண்டு என்று …
சமயோசிதம் (Presence of mind) எனப்படும் மதிக்கூர்மை தக்க நேரத்தில் வெளிப்படுவது கவிஞர்/புலவர்களின் தனிச்சிறப்புகளுள் ஒன்று. அவர்களின் அம்பறாத்தூணியிலிருந்து சொற்கள் அம்புகளைப் போன்று எடுக்க எடுக்க வந்துகொண்டே இருக்கும். எந்தச் சூழலையும் வெல்லத் தெரிந்த சொலல்வல்லோர் ஆவாரவர். சான்றாக, எட்டயபுரம் அரசவையில் …
வெண்பாக்களில் தனிச் சிறப்பாக உதடு ஒட்டாத வெண்பாக்கள் உள்ளன (இதழகல் வெண்பாக்கள் என்பர்). திருக்குறளில் இவ்வாறான இதழகலிகள் நான்கு உள்ளன. அவை: இறந்தா ரிறந்தா ரனையர் சினத்தைத்துறந்தார் துறந்தார் துணை. (திருக்குறள் 310) எய்தற் கரிய தியைந்தக்கா லந்நிலையேசெய்தற் கரிய செயல்.(திருக்குறள் …
வெண்பா வகைகளை மீண்டும் ஒருமுறை நினைவுகூர்வோம். 1). குறள் வெண்பா.இரண்டடிகள் கொண்டது.முதலடியில் நான்கு சீர்களும்(கடைசி) இரண்டாம் அடியில் மூன்று சீர்களும் கொண்டது. இயற்சீர் வெண்டளையும் வெண்சீர் வெண்டளையும் விரவி வருவது. ஈற்றுச் சீர் நாள், காசு, மலர், பிறப்பு ஆகிய ஒன்றில் …
கட்டளைக் கலித்துறைதமிழின் களிநயம் மிக்க மரபுப் பா வகைகளுள் கட்டளைக் கலித்துறையும் ஒன்று. சில ஆண்டுகளுக்கு முன்பு கூகுள் மடலாற்குழுமம் ஒன்றில் சக கவிஞரொருவர் வெண்பாவைப் போன்றும் ஆனால் அடிக்கு ஐந்து சீர்களுடனும் எழுதிப் போக, உடனடியாக அவரைத் தொடர்பு கொண்டு …
ஆசிரிய விருத்தத்தில் அரிய வகை கீழ்வரும் பாடலைக் காணுங்கள் மழைப்பொழிவு போலும் மனங்கனியும் எண்ணம்… மடையுடைத்துப் பாயும்மதிநிறைந்த சொற்கள்கழையதனில் செல்லும் கலைமனிதர் போல… கருத்துகளில் ஒன்றி கவிதையென ஆக்கும்விழைவுகளைக் கொண்டு விளைவுகளைத் தேடின்… வியப்பளிக்கும் மாற்றம் விதைப்பதுவே ஆகும்உழைப்பினுக்குத் ஏற்ப ஒருமுகமாய் …
பேருடன் புகழ்வாய்ந்தும் புதுமைமிகும் செயல்செய்தும்வேருடன் பிணக்குற்று வெறுப்படையும் குணமிருப்பின்பாருலகம் பழியுரைக்கும் பதவிகளும் மதிப்பிழக்கும்நீருக்குள் தலைமுங்கு நிலை. மேற்கண்ட பாடல் படித்ததும் ‘என்ன இது, வெண்பாவை ஏன் இப்படி நிறைய தளைதட்ட எழுதியிருக்கிறார்’ என்று நினைக்கிறீர்களா? அப்படியானால் நீங்கள் தான் தொடர்ந்து வாசிக்க …