சின்னாத்தாவின் வீடு இடிந்து விழுந்துவிட்டது. தென்னங்கீற்றில் கூரை வேய்ந்த ஒன்றை குடிசை என்று சொல்வதே பொருத்தம் என்றாலும், அப்படிச் சொன்னால் நீங்கள் சின்னாத்தாவின் சீற்றத்தை எதிர்கொள்ள நேரிடும். அதனால் அவளின் மண்சுவர் வசிப்பிடத்தை வீடு என்று சொல்லிவிடுவதே உத்தமம். அதுவும் இப்போது …
இதழ் 15
சில கேள்விகளுக்குச் சரியான பதில் தெரிந்திருந்தாலும், நம்மால் சொல்ல முடிவதில்லை. அப்படித்தான் அமைந்தது, அன்று கண்ணகி என்னிடம் கேட்ட கேள்வியும். கண்ணகி, எங்கள் வீட்டுப் பணிப்பெண். நாங்கள் இந்த ஊருக்கு வந்ததிலிருந்து இவள்தான் வீட்டுவேலை செய்ய வருகிறாள். இவளது வேலை தினசரி …
கனகா அவசரமாக வீட்டுக்கு வெளியே வந்து தோட்டத்தில் நின்றபடி பொன்னியை அலைபேசியில் கூப்பிட்டாள். “அக்கா, நான்தான்.. மணி ஏழரை ஆச்சுதேன்னு அவருக்குப் போன் செஞ்சேன். குரல் சரியா இல்லை.. நீங்க வந்து பிள்ளைகளைக் கூட்டிட்டுப் போறீங்களா?” கெஞ்சுகிற குரல். கண்களில் பிடிவாதமாய்த் …
துணிச்சல்காரியின் நடுக்கம்
அல்பாயுசில் போனஅப்பாவின் அஸ்தியைக்கரைத்ததோடு அகன்றதுசொந்த பந்தம் அழகியல் தொலைத்தஅம்மாவின் விழிகளுக்குள்உயிர்த்திருக்கிறது ஈன்ற மகவிற்குவிதி செய்யும் கனவு கனன்ற பாலைக்குள்பசுமை செய்த மந்திரக்காரிஇருண்மை வேய்ந்த கூரையில்வெளிச்சத் துகள்களைபரப்பிய மின்மினிக்காரி… மூச்சுப் பிடித்துஉழைக்கும் அவள் சிந்தைக்குள்சுழல்வது எல்லாம்மகவின் வளர்ச்சியே கொண்டை முடிந்தஅந்தப் போராட்டக்காரிபிள்ளையின் கல்யாணவைபவத்திலோ …
பசியோடுஅழுதுகொண்டிருக்கிறதுபெயர் தெரியா குழந்தை,குடித்துவிட்டு மனைவியை அடித்துக்கொண்டிருக்கிறான் குடிகாரனொருவன்வீட்டுப்பாடம்எழுதிவிட்டேனென அம்மாவிடம் பாராட்டுவாங்கிக்கொண்டிருக்கிறாள் ஒரு சிறுமி,உணவு கேட்டு வாசலில்நின்றுகொண்டிருக்கும் முதிர்ந்த யாசகிக்குஉணவோடுகுளிருக்கு போர்த்திக்கொள்ள உடையொன்றைஅளித்துக்கொண்டிருக்கிறாள் பெண்ணொருத்திவேலைக்குப் போன அப்பாவைக் கேட்டுதொந்தரவு செய்துகொண்டிருக்கிறான்ஒரு சிறுவன்மேகத்திற்குள் மறைந்த நிலவுவரும் வரை காத்திருந்துவந்த பிறகு பார்த்துக்கொண்டுவீட்டுக்குள் நுழைகிறார் ஒருவர்இன்பமும் …
எழுதத் தொடங்கிய அந்த இரவுஎன் பேனாவின் நுனியில்ஒரு பிரபஞ்சம் முளைத்துக்கொண்டிருந்தது முதல் வரி தாளின் வெண்மையில்வெற்றிடத்தில் ஒரு இதயத்துடிப்பு போன்றது இரண்டாவது வரிமழை மணம் போல மனமெங்கும் பரவியது மூன்றாவது வரி மட்டும்பிறக்கத் தயங்கிய குழந்தையாய்கருவறை இருளிலேயே நின்றுவிட்டது அதற்குள் வாழ்க்கைதன் …
பரபரப்பானகடைத்தெரு சந்தில்ஏதோ ஒரு சன்னலோரம் நிற்கிறேன் நான்.கடந்து போனவர்களில்ஒருவன் மட்டும் பார்த்துக்கொண்டே சென்றான்.தெருமுனை தரையில்ஒரு வறிய ஓவியன்வரைந்துகொண்டிருந்தான்.வேடிக்கை பார்த்தவர்களில்ஒரு வெள்ளைக்காரிமட்டும் காசு போட்டாள்.சிறுநீர் உபாதைக்காககம்பத்தின் மீது காலைத்தூக்கிய அந்த நாயைவிரட்ட நினைக்கவில்லை.சாய்ந்திருந்த சுவரின்சுண்ணாம்பு வண்ணம்சட்டையில் ஒட்டிக்கொண்டதைபோல உணர்ந்தாலும்முதுகைப் பார்க்க முயலாமல்எனக்கு நானேஉதடசையாமல்பேசிக்கொள்கிறேன் …
மின்சாரம் வழிந்தோடும்கம்பி பட்டவுடன்விசிறப்படும் யாக்கை போலவே மனமிருந்தது..நம்பிக்கையின் பெயர்வைத்து துரோகம்இயற்றிய பொழுது.. பனிச்சில்லுகள் மேல் நிற்கையில்வழிந்தோடும் குருதியின்ரணத்தை பரிசளித்ததுஉள்ளொன்று வைத்து வெளிப்படும்கானல் சிரிப்பு.. எப்போதும் போல் தீயில்பொசுக்கி விட்டு அறியாதது போல்அக்கறை களிம்பு தடவியதில்இன்னும் பற்றி எரிகிறதுஉணர்வுகள்.. ப்ரூட்டசாகவே இருப்பதையறிந்தும்தாயுமானவனாகவே வருகிறேன்குத்தப்பட்டு …
நினைவோட்டத்தின் திருக்கார்த்தியல்
சில நாட்களுக்கு முன்பு ஒரு காணொளி கண்டேன். போரினால் பாதிப்படைந்த இரண்டு பாலஸ்தீன சிறுவர்கள் தொலைவில் இருந்து தண்ணீரை ஒரு தள்ளுவண்டியில் தள்ளிக்கொண்டு வந்தார்கள். ஒருவன் முன்னே இழுக்க பின்னவன் பின்னாலிருந்து தள்ளிக்கொண்டே வந்தான். வழியெங்கும் தண்ணீர் சிந்தியபடி கண்களில் கண்ணீர் …
இந்தத் தேர்தல்ல நான் யாருக்கு ஓட்டுப் போட்டேன்னு நீங்க என்னைக் கேட்டா பட்டுன்னு சொல்லிடுவேன். “போன தேர்தல்ல?” அப்டீன்னு கேட்டீங்கன்னா, அது வந்து வேற கட்சிக்குன்னு இழுப்பேன். இன்னும் சீரியஸா அதுக்கு முன்னாடி தேர்தல்ல ஓட்டை யாருக்கு போட்டே நீன்னு என்னையைக் …