இலக்கியம்

பார்க்காமலே..

நகரின் பிசியான ரோட் சைட் கார் பார்க்கிங். அந்த ஏரியாவை சேர்ந்த கல்லூரி மாணவன் (முதலாம் ஆண்டு) பிரபு ஒரு காரை நோக்கி வருகிறான். அது அகலமான Rear View Mirror உள்ள பணக்காரத்தனமான கார். அதே சமயத்தில் ரொமாண்டிக்காகவும் இருந்தது.…

Read more

முதலாளி

“அம்மா.. வாங்கம்மா வாங்க, எல்லாம் புது ரகம். சுடிதார், நைட்டி, புடவை, ஜீன்ஸ் பேண்ட், டீசர்ட் எல்லாம் இருக்கு. வாங்கம்மா வாங்க” ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் திருச்சி மலைக்கோட்டை பஜாரில், உச்சி வெயிலில் பிளாட்பாரத்தில் துணிக்கடை வைத்து வியாபாரம் செய்து…

Read more

புனரபி மரணம்

பரந்து கிடந்த அந்த ஹாலில் பரமசிவம் மரணித்து மல்லாக்கப் படுத்திருந்தார். மன்னிக்கவும்… படுக்க வைக்கப் பட்டிருந்தார். காலையில் எழுந்திருக்காமல் மேலூர் போய்ச் சேர்ந்திருந்ததால், அவருக்கு ஹார்ட் அட்டாக் என்று முடிவு செய்திருந்தனர் அவர் வீட்டார். பரமசிவம் அந்த ஊருக்கு நாட்டாமை என்பதால்,…

Read more

பேபி சிட்டிங்

”மனசே சரி இல்லம்மா” என்றாள் மகள் ரீமா வருகைக்காகக் காத்திருந்த மீரா. “ஏன் என்னாச்சு?” டிஃபன் பாக்சை அடுப்படியில் போட்டுவிட்டு வந்து அம்மாவுடன் சேர்ந்து கொண்ட ரீமா கேட்டாள். நான் நடப்பதை ஒரு வழிப்போக்கனாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். “சொன்னா கேக்குறாங்களா இவங்க?.…

Read more

சுயவிளையாட்டு 

சுயவிளையாட்டு  Self-referential / Playfulness என்பது பின்நவீனத்துவ இலக்கியத்தின் முக்கிய தன்மைகளில் ஒன்று. இலக்கியம் தன்னைப் பற்றிப் பேசத் தொடங்கும் நிலையே இதன் அடிப்படை. உரை தன்னுடைய உருவாக்க முறையை வெளிப்படுத்திக்கொள்ளும், தன்னைப் பற்றி சிரிக்கத் தொடங்கும், தன் பிம்பங்களை விளையாட்டாகப்…

Read more

ஏமாற்றாதே..

“ஏங்க.. கழுத்துல ஒரு செயினு கூட இல்லாம எப்பிடிங்க உங்க சொந்தக்காரங்க கல்யாணத்துக்குப் போறது?” கமலா கவலையுடன் கேட்டாள். அவனின் பிடிவாதம்தான் மனைவியின் நகைகளையெல்லாம்  அடகு வைக்கும்படி ஆனது.  “வண்டி வாங்குறதுக்கு இப்ப என்னங்க அவசரம்?” என்று கமலா எவ்வளவோ சொல்லியும்…

Read more

க. அம்சப்ரியா கவிதைகள்

யாரோ ஒருவரின் திராட்சை ரசம் நான்பருகப் பருகக் கடக்கிறது காலம்ஒரு நாள் அது கசப்பின்அடையாளமாகிறதுபருகியவர்கள் எவரும்இது திராட்சை ரசமெனஒப்புக் கொண்டதில்லை என்பதுதான்…. எனது வேர்களிலும்கனிகள் விளையும்உரமொன்றைத் தயாரிக்கிறார்கள்எனக்கே எனக்கெனமெனக்கெட்டதாகதூற்றித் திரிகிறார்கள்அறுவடைக் காலங்களில்பள்ளத்தாக்கில் வீசப்படும்மீதக் கனிகள்விரும்பாவிட்டாலும் நஞ்செனப் பரவுகிறதுகனிகளற்ற கிளைகளில்வந்தமர்கிறதுவண்ணத்துப் பூச்சியின்இறகொன்று. அவர்களின்…

Read more

சின்னதாய் ஒரு சர்வீஸ்

“என்னோட லுங்கியைத் துவைக்கலியா?” என்று தலையைத் துவட்டிக்கொண்டே கேட்டான் தியாகு. “குளிச்சு முடிச்சாச்சா?” கேட்டாள் மனைவி வசந்தி. “ஆமா” “பாத்ரூம்ல கால் அடிக்கு ஏன் தண்ணீ நிக்குது?” “நின்னுகிட்டே குளிச்சேன். அதான்” “போய் அடைப்பைக் குத்தி விடுங்க” “இப்போ தான் குளிச்சேன்…

Read more

மகளே.. என் மகளே!

வீட்டுத் திண்ணையில் காலைச் சூரியன்அந்தி சாயும் வரைக்கும் என் கண் தேடும்,இத்தனை வருடம் காலடிச் சத்தம்கேட்டதெல்லாம் இப்போதேன் தூரம். ஊர் தாண்டி நீ போனதனால்,சுவரெல்லாம் நீ சாய்ந்த இடம்,பாயெல்லாம் நீ படுத்த நினைவுகள்,பேச ஒரு வார்த்தை இல்லையே நீயின்றி. பழைய சோற்றைக்…

Read more

பூப்போட்ட மஞ்சள் சட்டை

  இன்னும்கூட நன்றாக நினைவிருக்கிறது. அது பூப்போட்ட வெளிர் மஞ்சள் நிறச்சட்டை. அவன் அப்பொழுது ஏழாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தான். வீட்டிலிருந்த ஐவரில் மூவர் பெரிய மனிதர்களாகிவிட, நான்காவது அண்ணன் பத்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தான். இவன்தான் கடைக்குட்டி. அனைவருக்கும் செல்லப்பிள்ளை என்றாலும் அப்பாவிற்கு…

Read more