அன்பிலூறிய சொல்லாரம் அவள்அகழாத புதுமொழி அவன்பேரின்பக் கவிதை காதல்! ஆழ்நிலைக் கனவு அவள்முடிவிலா மோனநிலை அவன்மதி மயக்கம் காதல்! இதயத் துடிப்பு அவள்இயக்கிடும் சுவாசம் அவன்ஊனோடு உயிராகும் காதல்! நேசத்தின் அரசி அவள்பாசமாளும் அரசன் அவன்பிரியாவரம் முடிசூட்டும் காதல்! இன்னிசை ஸ்ருதி …
கவிதை
என்றாவது திரும்ப நேர்ந்தால்,நாம் எப்போதும் சந்திக்கும்அந்த மரத்தடியில்கொஞ்சம்இளைப்பாறிவிட்டுப் போ; காதல் இன்னும்அங்கேஉனக்காகக்காத்துக் கொண்டிருக்கிறது. * நாம் சந்தித்த நாளில்அந்த மரத்தின் கிளையில்ஒரு குருவிசுள்ளி சேர்க்க ஆரம்பித்திருந்தது. நாம் கை கோர்த்த நாளில்அது முட்டை இட்டிருந்தது. நாம் முத்தங்களின்ஈரங்களைஉணர்ந்த நாளில்,குஞ்சுகள் பொரித்திருந்தன. நாம் …
பொழுது விடியும் முன்பேஅவர்கள் புறப்பட்டனர்.அவர்களது வலைகள்நம்பிக்கையால் கனத்திருந்தன.அமைதியாக இருந்ததுஅடிவானம்.நீல நிறத்தைப் பரப்பஆயத்தமாகிக் கொண்டிருந்ததுஆகாயம். அவர்களது தோலில்நினைவுகளைப் போல்ஒட்டிக் கொண்டிருந்தது உப்பு.எழும் ஒவ்வொரு அலையும்அவர்கள் வாழ்நாளெல்லாம் அறிந்தஒரு மூச்சினைப் போல் உயர்ந்தது. எண்ணும் முன்பேமேகங்கள் திரள்கின்றன.ஒரு கனத்த மௌனம்பிறகொரு பலத்த முழக்கம்.அவர்களுக்காகவேபாடிக் கொண்டிருந்த …
சாப்பிடுவதற்குசெரை படுத்தாத பேத்திஏனோசில பொழுதுகளில் சுணங்குவதுண்டு‘காத்தாட சாப்பிடுதேன்’ என்றபடிகிணற்றடிக்குத் தட்டுடன் செல்பவள்துலக்கி மினுக்கி மீள்வாள்அம்மட்டில் திருப்தியுற்ற நல்லாச்சிகண்டுகொள்ளாதிருக்கிறாள் சின்னவளை ‘காத்தாட’ தனித்துண்ணும் பொழுதுகள்சந்தேகத்தை விதைக்கின்றனஅன்னையின் மனதில்செல்லப்பேத்தியைச் சொல்லுக்கு ஆளாக்கினால்ஆச்சி வீசுவாள் கண்டனக்கணையைஅகிலமே ஆச்சிக்கு அஞ்சும்போதுஅன்னை எம்மாத்திரம்எனினும்புகையை ஒளிக்க இயலுமோ!! கரையவிட்ட தோசைகள் …
1. சும்மா கிறுக்குகிறேன் என்பாள்கிறுக்கி கிறுக்கிக் கிழித்தாள்அந்தப் பக்கம் களர்நிலம் போன்றது என்பாள்படுபயங்கரமான விளைச்சல் உள்ள களர்நிலம்எல்லா இரகசியமும் ஒளிந்த பக்கம்யாவருக்கும் கிறுக்கல்களின் குவியல்தனக்கே அது உரித்தான பக்கங்களாய்ஒவ்வொரு நோட்டுகளும்தாங்கும் அப்பக்கங்களின் சுமை அதிகம்அவை தனித்தே இருப்பவைஅடையாளங்களோடு… *********************************************************2.பழுதாகும் பொழுதுகளில் எல்லாம் …
விதைத்த சோளக்காடு அறுவடைக்கு நிற்கிறதுதளவாடங்களுடன் கிளம்புகிறது குடும்பம்கோணிகளோடு நல்லாச்சியும்சிறு பையுடன் பேத்தியும் தொடர்கின்றனர் கும்பிட்டு அறுத்தமுதல் கதிரே சாவியாய் இருக்கஅடுத்தடுத்த கதிர்களும் அப்படியேபோனால் போகிறதெனஒன்றிரண்டு சோளமுத்துகளைச் சுமந்துவெறுஞ்சிப்பியாய் பிளந்திருக்கின்றன மீதமுள்ளவைபறவைகள் பாதி நாம் மீதியெனபிரிக்கத்தேவையின்றிகாலிப்பாத்திரத்தை வைத்திருக்கிறாள் மண்மாதாமலைத்து நிற்கின்றனர் மற்றவர்பரிகசிக்கிறாள் பேத்தி …
வள்ளுவன் தந்த பொதுமறைபிறவிக் கடல் நீந்தப் பொற்கலம்!ஈராயிரங் கால நீதிநூல்வாழ்வியல் செறிவாக்கிடும் நற்பாடம்!முப்பாலின் முத்தான பாக்கள்பண்பு நெறியூட்டும் நல்லுரம்! அன்பும், அறமும், கல்வியும்,அரசு முறையும், குடி கடமையும்பாங்கே படிப்பிக்கும் போதிமரம்!அருளும், நட்பும், இன்சொல்லும்இன்பமும், இல்லறமும், காதலும்சேர்ந்தே பொதிந்துள்ள நித்திலம் ! அல்லவை, …
1. இருள் தளரநீலத்தில் தேயும் விண்மீன்கள்விரியும் காலை! 2. வெண்மேகம் விலகஒளி சிந்தும் சூரியன்பேசும் பகல்! 3. மேக நிழல்கள்மண்ணில் வரையும் சித்திரங்கள்வானமெனும் குழந்தை! 4. வானம் திறக்கஇலைகளைத் தொடும் வெயில்மென்மையான வாழ்வு! 5. மலை மேல் சூரியன்குருவியின் குரல் கரையமறையும் …
தொலைத்த இடத்தில்தான் தேடணும்என்கிறாள் நல்லாச்சிதினமும் ஏதேனுமொன்றைத்தொலைக்கும் பேத்தியிடம்அவள்எங்கோ தொலைத்ததையெல்லாம் கண்டுபிடிக்கும்மந்திரக்கோலன்றோ நல்லாச்சிஎனினும்அல்லல் அதிகமானால் அலுத்தும்கொள்வாள் பொருட்களைத்தொலைத்தே பழக்கப்பட்ட பேத்திஒருநாளில்நல்லதோர் நட்பையும் தொலைக்கிறாள்பிரிவென்ற பெயரில்;அவ்வன்பை எங்கே தேடுவதெனக் குழம்புகிறாள்பெற்றோரின் அன்போஉற்றாரின் அன்போஇன்னபிற களித்தோழரின் அன்போஇணைவைக்க இயலாமல் தத்தளிக்கின்றனதூக்கமின்றி ஏக்கத்தில் மெலிகிறாள் பேத்திமாற்றமொன்றே மருந்தாகும் …
விரையும் காலத்தின் ஓட்டத்தில்விரும்பும் தேவைகளும் அதிகரிக்ககற்கும் கல்வியின் நோக்கத்தால்கருத்தினில் கூடிடும் மாற்றங்கள். கல்வியின் முறைகள் மாறிடவேகற்பிக்கும் திறன்களில்கலந்திடும் புதுமைகள். புதுமைகளின் வரவால்கூடிடும் கவனத்தில்படிப்பின் புரிதல் உயர்ந்திடுமே. புரிதல் காட்டும் பாதையிலேசெயலின் தாக்கம் நீண்டிடுமே.செய்முறை காணும் களத்தினிலேபடைப்பவர் வாழ்வியல் வளர்ந்திடுமே. படைப்பும் பண்பும் …