மெல்லமெல்ல அடியெடுத்துச் சென்றே பார்த்துமின்னலென மரமதனின் பின்னால் நின்றுசொல்லவொணா உணர்வுகளை அடக்கி மேலும்தீர்க்கமுடன் பார்வைகளை விட்டு அங்கேகல்லெனவே முகமிறுக்கிக் கண்கள் கூர்ந்தேகாணுகின்ற இரைதனையே குறியும் வைத்துபற்கடித்துப் பாய்கின்ற புலிக்கு யாரும்பயமுண்டு என்றெல்லாம் கூற மாட்டார்..*மிச்சமிலா எழிலெல்லாம் கொண்ட பெண்ணேமேதினியில் உனக்குபயம் உண்டோ …
கவிதை
திரிகாலம் தன்னை அடையாளப் படுத்திக் கொள்ளஅந்த மாதத்திற்குக் குழப்பம் இருந்ததுஅதே குழப்பம்தான்அந்த நாளிற்கும் வந்ததுதன்னிலை திரிந்து மாறி நின்றனதொடக்கத்தில் கோடை மழையெனப்பெயர் வாங்கி அடித்து வாங்கிய மேமாத மழையும்நள்ளிரவுக் கோலமாய்க் கோடை மதியமும்தன்னிலைத் திரிந்து அப்போதைய நிலையின்வெளியீடாய் இருக்கக் கற்றுக்கொண்டன. பொருளுலகு …
பார்க்கும் எல்லாமுமாக வாழ்ந்துவிட ஆசைகுறைந்த ஆயுளில் நிறைந்த வாழ்வை விரும்பிகடைக்கோடி ஜீவி வரை வாழ்ந்திட ஆசைஎவ்வுயிராக ஏதாக எனும் குழப்பத்தில்பச்சோந்தியாக எனில்பாவம் உயிர்வாழ நிறம்மாறும் அதற்கும்மனிதர்களால் அவப்பெயர்நாயாக எனில்உண்மையிலேயே அதன் வாழ்வு‘நாய் படும் பாடாக’ உள்ளதுமழையாக எனில்அனைவரும் வேண்டும் மழையாகவாவெறுக்கும் மழையாகவாமரமாக …
உங்கள் வாழ்க்கை உங்களுடையதே-இருண்ட அடிமைத்தனத்திற்குள்அதை நசுங்க விடாதீர்கள். விழிப்புடன் இருங்கள்.வெளியேற வழிகள் உள்ளன.எங்கோ ஒரு ஒளி உள்ளது.அது பெரிய வெளிச்சமாக இல்லாதிருக்கலாம்.ஆயினும் அதுஇருளை வென்று கொண்டேயிருக்கும். விழிப்புடன் இருங்கள்.தெய்வங்கள்உங்களுக்கு வாய்ப்புகளை வழங்குவார்கள்.அவற்றை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். மரணத்தை உங்களால் …
பெரியதாத்தா வரும் தினங்களில்இறக்கை கட்டிக் குதூகலிப்பாள் பேத்திவயலில் விளைந்தவையென கொண்டுவரும் மூட்டைக்குள்தோட்டத்தில் உதிர்ந்தவையெனஒன்றிரண்டு மயிற்பீலிகளும் இருப்பதுவும்ஒரு காரணம் ஆடலும்பாடலும் கதைசொல்லலுமாய்தாத்தாவின் தோளில் நிழலாய்த்தொற்றிநல்லாச்சியை மறந்து திரியும் பேத்திக்குஒரேயொரு குறைதான்தன் களித்தோழனிடம்கைவிரலிடுக்கில் புகையும் கடைசி விரல்தான் அதுஆருரைத்தும் கேட்காத அகந்தையைஅறிவுறுத்தி உடைக்க எண்ணுகிறாள் …
1.எங்கும் வெயில்வெப்பச் சாலைகளில் நிசப்தம்நீளும் மதியம். 2.சுருங்கி மறையும் நிழல்கள்தலைக்கு மேல் நண்பகல்கனக்கும் அமைதி. 3.சுழலும் மின்விசிறிசோம்பல் முறிக்கும் வட்டங்கள்கரைகிறது நேரம். 4.பொன்னாக மாம்பழங்கள்பிசுபிசுக்கும் கைகள்ஒளியாக வழிகிறது இனிப்பு. 5.சூடான நிலம்வெற்றுப் பாதங்கள்ஓடுகிறது குழந்தைமை. 6.நெற்றியில் வியர்வைஉப்பு வெயிலின் சந்திப்புஉடலோடு ஒட்டும் …
1.பெண் எனும் பேனாஇறுகப் பிடித்திருந்தமுள் பேனாவின் முனையிலிருந்துவழியும் ரத்தத்துளிகள் மையாக மாறதனது வாழ்க்கைப் புத்தகத்தின்அத்தனை பக்கங்களிலும் எழுதுகிறாள்தனக்குப் பிடித்தமான வாழ்க்கையை. 2.காதல் பூக்கள்மொட்டாக முகையாக இருக்கும் போதேஅவசரம் கொள்ளாதீர்கள்.வீயாகிச் செம்மையாகும் வரையிலும்காத்திருக்கத் தேவையில்லை.அலராக மலராக இருக்கும்போதுபறித்துக்கொள்ளுங்கள்;கைகளுக்கு மட்டும் அல்லமனதிற்கும் அதனால் அழகு …
சிக்கனமென்பது கிஞ்சித்துமில்லாமூத்தவனால் பெருங்கவலை நல்லாச்சிக்குகாசுபணமெல்லாம் தண்ணீர் பட்டபாடு அவனுக்குதண்ணீரையும் அவ்வாறே வாரியிறைப்பான்பிறரைப்பற்றிக் கவலை கொள்ளா அப்பெருஞ்செலவாளிநாளையைப் பற்றிச் சற்றும் எண்ணாதவனைஎண்ணியெண்ணி நாளும் உருகுகிறாள்‘எங்காலத்துக்குப் பொறவு என்ன கதியோ?!’ என மருகுகிறாள்பிள்ளையின்மேல் படியும் ஏளனப்பார்வைகளைசகியாத நல்லாச்சிபெரியப்பனுக்குப் பரிகிறாள் பேத்தி தாகங்கொண்ட வெய்யோன் அருந்தியதால்கோழிக்காலாய் …
இறைவன்மலரின் நறுமணம் பிரித்து எடுத்தான்மலைநேர் மரத்தின் மாண்பினைச் சேர்த்தான்புலரிப் பனியின் மென்மை குழைத்தான்புணரியினுள்ளிருந்த அமைதியினை அகழ்ந்தான்அந்திப் பொழுதின் அழகை வார்த்தான்ஆயிரம் விண்மீன் ஆன்மாவினை வடித்தான்சிலிர்க்கும் ஓடையின் நகையினை இட்டான்சிறகடிக்கும் புள்ளின் நளினம் கோர்த்தான்இத்தனை எழிலினையும் ஒன்றாய்ப் பிணைத்துஇணையிலாக் கலையினை இறைவன் முடித்தான்;முழுமை …
உதிர்த்த இலைகளில் பாக்கியுள்ளதெனபலமாக அடித்தது காற்றுஉதிர்ந்ததும் உதிராததும் நனைந்தன மழையில்உயிரற்றும் உயிரோடும்பலத்த காற்றுக்கும் எதிர்ப்பில்லைபலத்த மழைக்கும் எதிர்ப்பில்லைகடும் வறட்சிக்கும் எதிர்ப்பில்லைஎப்படித்தான் வாழ்வாயோ நகர்ந்து செல்ல முடிந்தால்பல்லாயிரம் இறக்கைகள் முளைத்தால்எல்லாரோடும் உரையாட முடிந்தால்வெளிச்சத்தில் இருளைப் பார்க்க முடிந்தால்உனக்கு நிகர்தான் யாரு. உண்மையென்றால் குழப்பம்தான்இருக்கலாம் …