உலகத்து வெயிலெல்லாம் உம்மேலதான்’செல்லமாகக் கடிகிறாள் நல்லாச்சிநட்புகளுடன் விளையாடும் பேத்தியைஉச்சிப்பொழுதின் வெப்பம்வாட்டுமென்ற அக்கறையில்கலந்தாலோசித்த பட்டாளம்திருவிழா விளையாட்டைத் தேர்கிறதுஅறங்காவலராக்குகிறது நல்லாச்சியை செங்கற்களே மூர்த்தங்களாய்அகப்பட்ட பூக்களே தோரணங்களாய்வடிவெடுக்கிறது சப்பரம்பூஜைப்பொருட்கள் ஒருவன் உபயம்நைவேத்யம் ஒருத்தி கொணர்கிறாள்காற்றில் ஒருவன் கொட்டுமுழக்கதாத்தாவின் கைத்தடி நாகஸ்வரமாகிறதுஏதும் கொணராத ஒருத்தியைவிலக்குகிறது கூட்டம் பதைக்கிறாள் …
கவிதை
சாளரத்தைத் திறந்தவள்சன்னமாய்ச் சிரித்தாள்காத்திருப்பின் ரகசியம்காற்றில் கலந்த கணம் உள்ளக் கிளர்ச்சி எல்லாம்ஊர்வலமாய்ப் போகுதுவெள்ளம் திரண்டது போல்வெகுளித்தனம் மீறுது கள்ளத்தனம் எல்லாம்காணாமல் போனதுகரை கடந்த அன்பு இங்கேகரம் கோர்க்கப் பார்க்குது ஒற்றை மலர் தனியேஒய்யாரமாய் நின்றதுஎட்டிப் பார்த்த அவளைஏறெடுத்துப் பார்த்தது சாய்வது போல் …
பனிச்சறுக்கு விளையாட ஆசை பேத்திக்குநயந்தும் பயந்தும்பெற்றோர்க்குச்சொன்னவையெல்லாம்கிணற்றில் சறுக்கிய கல்லாய்க் கிடக்கவழக்கம்போல் சரணடைகிறாள் நல்லாச்சியிடம் இமயமலை பற்றி விளக்கினால்‘ஆராம்ளி மலய விட ஒசரமா?’ என்கிறாள்மணல்மணலாய்ப் பனித்துகள் காணலாமென்றால்‘ஆத்தங்கரையில் இல்லாத மணலா?’ என்கிறாள்ஊரே குளிர்ந்திருக்குமென ஆசை காட்டினால்‘தடுமம் பிடிச்சுக்கிடும்ல’ என்கிறாள்ஊரே உலகமென வாழ்ந்த நல்லாச்சி …
அன்பிலூறிய சொல்லாரம் அவள்அகழாத புதுமொழி அவன்பேரின்பக் கவிதை காதல்! ஆழ்நிலைக் கனவு அவள்முடிவிலா மோனநிலை அவன்மதி மயக்கம் காதல்! இதயத் துடிப்பு அவள்இயக்கிடும் சுவாசம் அவன்ஊனோடு உயிராகும் காதல்! நேசத்தின் அரசி அவள்பாசமாளும் அரசன் அவன்பிரியாவரம் முடிசூட்டும் காதல்! இன்னிசை ஸ்ருதி …
என்றாவது திரும்ப நேர்ந்தால்,நாம் எப்போதும் சந்திக்கும்அந்த மரத்தடியில்கொஞ்சம்இளைப்பாறிவிட்டுப் போ; காதல் இன்னும்அங்கேஉனக்காகக்காத்துக் கொண்டிருக்கிறது. * நாம் சந்தித்த நாளில்அந்த மரத்தின் கிளையில்ஒரு குருவிசுள்ளி சேர்க்க ஆரம்பித்திருந்தது. நாம் கை கோர்த்த நாளில்அது முட்டை இட்டிருந்தது. நாம் முத்தங்களின்ஈரங்களைஉணர்ந்த நாளில்,குஞ்சுகள் பொரித்திருந்தன. நாம் …
பொழுது விடியும் முன்பேஅவர்கள் புறப்பட்டனர்.அவர்களது வலைகள்நம்பிக்கையால் கனத்திருந்தன.அமைதியாக இருந்ததுஅடிவானம்.நீல நிறத்தைப் பரப்பஆயத்தமாகிக் கொண்டிருந்ததுஆகாயம். அவர்களது தோலில்நினைவுகளைப் போல்ஒட்டிக் கொண்டிருந்தது உப்பு.எழும் ஒவ்வொரு அலையும்அவர்கள் வாழ்நாளெல்லாம் அறிந்தஒரு மூச்சினைப் போல் உயர்ந்தது. எண்ணும் முன்பேமேகங்கள் திரள்கின்றன.ஒரு கனத்த மௌனம்பிறகொரு பலத்த முழக்கம்.அவர்களுக்காகவேபாடிக் கொண்டிருந்த …
சாப்பிடுவதற்குசெரை படுத்தாத பேத்திஏனோசில பொழுதுகளில் சுணங்குவதுண்டு‘காத்தாட சாப்பிடுதேன்’ என்றபடிகிணற்றடிக்குத் தட்டுடன் செல்பவள்துலக்கி மினுக்கி மீள்வாள்அம்மட்டில் திருப்தியுற்ற நல்லாச்சிகண்டுகொள்ளாதிருக்கிறாள் சின்னவளை ‘காத்தாட’ தனித்துண்ணும் பொழுதுகள்சந்தேகத்தை விதைக்கின்றனஅன்னையின் மனதில்செல்லப்பேத்தியைச் சொல்லுக்கு ஆளாக்கினால்ஆச்சி வீசுவாள் கண்டனக்கணையைஅகிலமே ஆச்சிக்கு அஞ்சும்போதுஅன்னை எம்மாத்திரம்எனினும்புகையை ஒளிக்க இயலுமோ!! கரையவிட்ட தோசைகள் …
1. சும்மா கிறுக்குகிறேன் என்பாள்கிறுக்கி கிறுக்கிக் கிழித்தாள்அந்தப் பக்கம் களர்நிலம் போன்றது என்பாள்படுபயங்கரமான விளைச்சல் உள்ள களர்நிலம்எல்லா இரகசியமும் ஒளிந்த பக்கம்யாவருக்கும் கிறுக்கல்களின் குவியல்தனக்கே அது உரித்தான பக்கங்களாய்ஒவ்வொரு நோட்டுகளும்தாங்கும் அப்பக்கங்களின் சுமை அதிகம்அவை தனித்தே இருப்பவைஅடையாளங்களோடு… *********************************************************2.பழுதாகும் பொழுதுகளில் எல்லாம் …
விதைத்த சோளக்காடு அறுவடைக்கு நிற்கிறதுதளவாடங்களுடன் கிளம்புகிறது குடும்பம்கோணிகளோடு நல்லாச்சியும்சிறு பையுடன் பேத்தியும் தொடர்கின்றனர் கும்பிட்டு அறுத்தமுதல் கதிரே சாவியாய் இருக்கஅடுத்தடுத்த கதிர்களும் அப்படியேபோனால் போகிறதெனஒன்றிரண்டு சோளமுத்துகளைச் சுமந்துவெறுஞ்சிப்பியாய் பிளந்திருக்கின்றன மீதமுள்ளவைபறவைகள் பாதி நாம் மீதியெனபிரிக்கத்தேவையின்றிகாலிப்பாத்திரத்தை வைத்திருக்கிறாள் மண்மாதாமலைத்து நிற்கின்றனர் மற்றவர்பரிகசிக்கிறாள் பேத்தி …
வள்ளுவன் தந்த பொதுமறைபிறவிக் கடல் நீந்தப் பொற்கலம்!ஈராயிரங் கால நீதிநூல்வாழ்வியல் செறிவாக்கிடும் நற்பாடம்!முப்பாலின் முத்தான பாக்கள்பண்பு நெறியூட்டும் நல்லுரம்! அன்பும், அறமும், கல்வியும்,அரசு முறையும், குடி கடமையும்பாங்கே படிப்பிக்கும் போதிமரம்!அருளும், நட்பும், இன்சொல்லும்இன்பமும், இல்லறமும், காதலும்சேர்ந்தே பொதிந்துள்ள நித்திலம் ! அல்லவை, …