இன்னும் சில சிலேடைகள். கவிஞர்களின் தனிச்சிறப்புகளுள் ஒன்று உடனடி மொழித் திறனும் இரட்டுற மொழிதலும். 24-ஆம் புலிகேசி படத்தில் வடிவேலு மன்னராக வருவார். அவரை வாழ்த்த வரும் புலவர் ஒருவர் அவரைப் பார்த்து “அண்டங் காக்கையே” என்று இரட்டுற மொழிவார். மிகவும் …
இப்னு ஹம்துன்
சொல் விளையாட்டு! நட்பிற் சிறந்த அரசர் ஒருவரும் நற்றமிழ்ப் புலவர் ஒருவரும் காலார நடந்தனர். புலவர் மன்னருக்குக் குடை பிடித்தார். அதை விரும்பாத மன்னர் அக்குடையைப் பெற்று, கற்றறிந்த புலவருக்கு அரசனாகிய தானே குடை பிடிக்க விரும்புவதாகச் சொன்னார். உடனே புலவர் …
கடந்த பதிவில் சில மயங்கொலிச் சொற்களைச் சிந்திக்கச் சொல்லியிருந்தேன். அவை: கட்டடம் என்றால் கட்டப்பட்ட இடம் – வீடு என்று பொருளாகும். கட்டிடம் என்றால் வீடு முதலியன கட்டுதற்குரிய இடம் (Plot, Site) என்றாகும். (தமிழறிஞர் பா. வரதராசனாரும் இதனைச் சுட்டியுள்ளார் …
எழுத்தில் செய்யும் பிழைகள் : எழுத வேண்டும் என்கிற ஆவல் கொண்டோர், தம்மை அறியாமல் செய்யும் பிழைகள் சிலவற்றை இப்போது பார்ப்போம்: அருகில் என்பதைக் குறிக்க அருகாமை என்று பலரும் பேச்சிலும் எழுத்திலும் பயன்படுத்தி வருகின்றனர். படத்தில், அருகாமை என்பது அருகில் …
(இத்தொடரில் தமிழின் சில இலக்கணக் குறிப்புகள் மட்டுமின்றி இலக்கியக் குறிப்புகள் சிலவற்றையும் தர நினைக்கிறேன் ) கண் பொத்திய காதல் காதலுக்குக் கண்ணில்லை என்பார்கள். கண் பொத்திய காதல் என்று தலைப்பை அந்தப் பொருளில் சொல்லவில்லை. ஆணாயினும் பெண்ணாயினும் நம் சிறுவயதில் …
சமூக ஊடகத்தில் அறிமுகமான நண்பர் அவர். குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு ஆதரவாளர். அவருடைய பதிவுகள், ஏரணங்கள் அழுத்தம்திருத்தமானவை. அதற்காகவே விரும்பிப் படிப்பேன். அண்மையில் தன் கட்சியின் சாதனைகளைப் பட்டியலிட்டு விட்டு இறுதியில் ஒரு வரி இப்படி முடித்திருந்தார். “இவைகள் எம் இயக்கத்திற்கு …