1.
கிழக்கே விரையும் மேகங்கள்
மேற்கே வளையும் புற்கள்
காற்றுக்கு இரண்டு கதைகள்.
2.
மூடிய சாளரம்
ஏறுகிறது முதல் வெயில்
திறக்கிறது இருள்.
3.
நிலவொளியில் நதி
திரும்பும் ஒற்றை இலை
கசியும் மெளனம்.
4.
வறண்ட கிணற்றில்
சுழல்கிறது சருகு
கார்முகிலுக்கு ஏங்கி.
5.
நடுநிசிக் குளத்தில்
இறங்கும் முழுநிலவு
உடைக்கும் மீன்.
*
Author
-
ராமலக்ஷ்மி :
எழுத்தாளர், கவிஞர், ஒளிப்படக் கலைஞர். பெங்களூரில் வசிக்கிறார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை மற்றும் ஆய்வு நிறைஞர் பட்டங்கள் பெற்றவர். சொந்த ஊர் நெல்லை. தனது வலைப்பூ மற்றும் இணைய இதழ்கள், சிற்றிதழ்கள், பத்திரிகைகளில் எழுதி வருகிறார். சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை, நூல் விமர்சனம், ஒளிப்படம் ஆகிய பல தளங்களில் இயங்கி வருகிறார்.இவரது ‘இலைகள் பழுக்காத உலகம்’ கவிதைத் தொகுப்பு, ‘மு.ஜீவானந்தம்’ இலக்கியப் பரிசையும், ‘தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்-நியூ செஞ்சரி புத்தக நிலைய' விருதையும் பெற்றுள்ளது. ‘அடை மழை’ சிறுகதைத் தொகுப்பு ‘திருப்பூர் அரிமா சக்தி’ விருதைப் பெற்றுள்ளது. இவர் எடுத்த ஒளிப்படங்களும் பல பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. அட்டை முகப்பிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன.