கவிதை

ஒற்றையடிப் பாதை

பிறவாமை வேண்டும் என்பதேஅனைவரின் இறைஞ்சலாகினும்வேண்டாமல் பிறத்தலும், இறத்தலும்இடையே போராடி வாழ்தலும்காலத்தின் கட்டாய விதி. அவரவர் வகுத்துக்கொண்டகுறுகிய வட்ட எல்லையில்செக்கைச் சுற்றி உழன்றுஓய்வில்லாது பொருள் ஈட்டிடபணிப்பது வாழ்வின் அயற்சி. கதிரொளியும் புள்ளினக் கூவலும்சாளர வழி கூட ரசிக்க இயலாதுநில்லாது ஓடும் காலச்சக்கரத்தினைதுரத்தி ஓடிக்கொண்டே…

Read more

நல்லாச்சி – 25

This entry is part 25 of 32 in the series நல்லாச்சி

நாளும் நாலு நல்லதைநடைப்பயிற்சியின்போது அலசுவதுநல்லாச்சிக்கும் பேத்திக்கும் வழக்கம்தகவல்கள் பரிமாறுவதுபோலவேஅறிவுரைகளும் பரிமாறப்படும்பேதமின்றி ஏற்பாள் நல்லாச்சி வகுப்புத்தோழி குடும்பச்சண்டையால்அம்மாச்சி ஊருக்குப் போய்விட்டது முதல்நாளது தினம் தொலைக்காட்சிச்செய்தி வரைபிழிந்து அலசியபின்பேத்திக்கு வருகிறது சந்தேகமொன்றுமனிதர்கள் ஏன் மோதிக்கொள்கிறார்களென அகந்தையும் தன்முனைப்பும்பெற்றுப்போட்ட காரணங்கள்தாம்காரணங்களென்கிறாள் நல்லாச்சிதுளிக்குள் பிறந்தழியும்மாந்தர் அறியாரோதுளிக்குள் துளியே…

Read more

அவள் நடக்கிறாள்

அவள் எழுகிறாள், அதிகாலையில்ஒரு இல்லத்தை ஒளிர்விக்க மட்டுமல்லஅவளது ஆழ்ந்த வலிமையை நம்பிதோள்களில் சாயும் உலகத்தைதாங்கிப் பிடிப்பதற்காக. கண்ணாடி அறைக் கூட்டங்களில்,கண்காணிக்கும் குரல்களுக்கு நடுவில்,கனவுகளால் எதிர்காலம் நெய்யப்படும்அலுவலக அறைகளில், வயல் வெளிகளில்,தொழிற்சாலைகளில், கல்விக் கூடங்களில்,நெரிசல் மிகுந்த தொடர்வண்டிகளில்எங்கும் அவள் நடக்கிறாள்-மனஉறுதி எனும் வரைபடத்தைதுணையாகக்…

Read more

முதிர்ந்த முள்மரம்

வளையும் பருவத்திலேவாழ்வியல் கற்க வேண்டும்காலம் கடந்து விட்டால்கற்பது கடினமாகிப் போகும் பகைமை உணர்வுகள்பார்த்திருந்து நமைப் பந்தாடும்தக்க நேரத்திற்குகாத்திருந்து நமைச் சூழும் நன்செய் நிலத்தில்நடுவிலே பதர் வந்திடும்நாள் கடத்தாமல்நீக்குதல் நிலத்திற்கு நல்லது முதிர்ந்த முள்மரம்வெட்டுவார்க்கு வேதனை ஆகும்இளையதாய் இருக்கையில்வேரோடு களைதல் வேண்டும் கூடவே…

Read more

அவளும் நானும்

நானென்ற தன்மை நாமென்ற படர்க்கையாகதானென்ற நிலையை தகர்த்திட்ட அன்பினால்உள்ளத்தே நிறைத்து உறவாக்கி நிலைக்கும்தெள்ளிய வகையில் தெரிவித்த கண்களில்கலந்திட்டோம் நாங்கள் காட்சி ஒன்றாய்அவளும் நானும் அகத்தில் ஒத்ததாய்!

Read more

தனிமையின் தண்மை

தூரத்து மலையில்தனித்தலையும் ஒற்றைக்குருவிமனிதவாசம் படா வெளியில்ஒற்றையாய்ப்பூத்திருக்கும் நீலப்பூஇன்னொரு ஒற்றைப்பாறைக்குதாவிச்செல்லும் வரையாடுதன்னுள்மூழ்கித் தியானிக்கும்அலையற்ற சிறுகுளம்அவரவர் தனிமைக்குஅவரவரே துணையாயிருக்கபனித்துகள் திரட்டிநிலாப்பொம்மை செய்கிறது மலைஒவ்வொருவரின் தனிமையையும்கதகதப்பாய் அணைக்கிறது நிலாகுளிர்கிறது தனிமை.

Read more

உன் உழைப்பால் சிகரம் தொடு!

அடுத்தவரின் உழைப்பை அபகரித்தல் முரணே!தடுத்ததனை தவிர்ப்பதே தருமத்தின் முறையே!எடுக்கின்ற காரியத்தில் எதிர்வரும் தடைகள்முடுக்கிவிடும் திறனை முயற்சிக்கு முதற்கல்! உழைக்கின்ற சுயமும் உள்ளத்து உறுதியும்விழைகின்ற யாவிலும் வெற்றிக்கு வழியே!உடன் உழைப்போர்க்கும் வழியை விடு!உன் உழைப்பால் சிகரம் தொடு!

Read more

காற்றில் உதிரும் கணம்

சாளரத்தைத் திறந்தவள்சன்னமாய்ச் சிரித்தாள்காத்திருப்பின் ரகசியம்காற்றில் கலந்த கணம் உள்ளக் கிளர்ச்சி எல்லாம்ஊர்வலமாய்ப் போகுதுவெள்ளம் திரண்டது போல்வெகுளித்தனம் மீறுது கள்ளத்தனம் எல்லாம்காணாமல் போனதுகரை கடந்த அன்பு இங்கேகரம் கோர்க்கப் பார்க்குது ஒற்றை மலர் தனியேஒய்யாரமாய் நின்றதுஎட்டிப் பார்த்த அவளைஏறெடுத்துப் பார்த்தது சாய்வது போல்…

Read more

நல்லாச்சி – 23

This entry is part 23 of 32 in the series நல்லாச்சி

பனிச்சறுக்கு விளையாட ஆசை பேத்திக்குநயந்தும் பயந்தும்பெற்றோர்க்குச்சொன்னவையெல்லாம்கிணற்றில் சறுக்கிய கல்லாய்க் கிடக்கவழக்கம்போல் சரணடைகிறாள் நல்லாச்சியிடம் இமயமலை பற்றி விளக்கினால்‘ஆராம்ளி மலய விட ஒசரமா?’ என்கிறாள்மணல்மணலாய்ப் பனித்துகள் காணலாமென்றால்‘ஆத்தங்கரையில் இல்லாத மணலா?’ என்கிறாள்ஊரே குளிர்ந்திருக்குமென ஆசை காட்டினால்‘தடுமம் பிடிச்சுக்கிடும்ல’ என்கிறாள்ஊரே உலகமென வாழ்ந்த நல்லாச்சி…

Read more

அவளும் அவனும்

அன்பிலூறிய சொல்லாரம் அவள்அகழாத புதுமொழி அவன்பேரின்பக் கவிதை காதல்! ஆழ்நிலைக் கனவு அவள்முடிவிலா மோனநிலை அவன்மதி மயக்கம் காதல்! இதயத் துடிப்பு அவள்இயக்கிடும் சுவாசம் அவன்ஊனோடு உயிராகும் காதல்! நேசத்தின் அரசி அவள்பாசமாளும் அரசன் அவன்பிரியாவரம் முடிசூட்டும் காதல்! இன்னிசை ஸ்ருதி…

Read more