போர் ரதங்களின் பாடல் மூலம்: ”Ballad of the Army Carts” by Du Fuஆங்கிலத்தில்: David Lundeஆங்கிலத்திலிருந்து தமிழில்: ராமலஷ்மி ரதங்கள் உருளுகின்றன,கடகடவென அதிர்கின்றன.குதிரைகள் கனைக்கின்றன,சீற்றத்துடன் மூச்சு விடுகின்றன.படைவீரர்கள் இடுப்பில் வில்லும் அம்பும் கட்டிஅணிவகுத்துச் செல்கின்றனர்.தந்தைமார், தாய்மார்,மனைவியர் மற்றும் குழந்தைகள்அவர்களை …
ராமலக்ஷ்மி
சுவர்கள் எப்போதும்செங்கற்களால் எழுப்பப்படுவதில்லை,சில நேரங்களில் அவை எண்ணங்களைசுவாசித்தும் எழுகின்றன.இயலாதெனும் தயக்கமும்வேண்டாமெனும் எச்சரிக்கையும்ஒரு முடிச்சாகப் பிணைந்துகாலத்தைக் கட்டிப் போடுகின்றன. நமது எல்லைகளால்ஆகாயம் சுருங்கிப் போகிறது.நமது சந்தேகங்களால்அடிவானம் மறைந்து போகிறது.நமது தடுமாற்றங்களால்திசை விளிம்பு குறுகிப் போகிறது. வெளிப்படுத்தாத வார்த்தைகள்மெளனச் சுவர்களாக உயருகின்றன.மாயக் கோட்டிற்குள்அவிழாத புதிர்களாக …
1. தரையில் வெயில் சூட்டில் சுருளும் பூனை ஓய்வெடுக்கும் நண்பகல். * 2. நடுநிசி சன்னல் ஓரம் நிலவொளியில் பதியும் பாதம் களவு போகும் இரவு. * 3. சருகுகள் நகரும் ஒலி தீயாகத் துடிக்கும் வால் வேட்டைக்காரனைத் தூண்டும் காற்று. * …
அவள் எழுகிறாள், அதிகாலையில்ஒரு இல்லத்தை ஒளிர்விக்க மட்டுமல்லஅவளது ஆழ்ந்த வலிமையை நம்பிதோள்களில் சாயும் உலகத்தைதாங்கிப் பிடிப்பதற்காக. கண்ணாடி அறைக் கூட்டங்களில்,கண்காணிக்கும் குரல்களுக்கு நடுவில்,கனவுகளால் எதிர்காலம் நெய்யப்படும்அலுவலக அறைகளில், வயல் வெளிகளில்,தொழிற்சாலைகளில், கல்விக் கூடங்களில்,நெரிசல் மிகுந்த தொடர்வண்டிகளில்எங்கும் அவள் நடக்கிறாள்-மனஉறுதி எனும் வரைபடத்தைதுணையாகக் …
பொழுது விடியும் முன்பேஅவர்கள் புறப்பட்டனர்.அவர்களது வலைகள்நம்பிக்கையால் கனத்திருந்தன.அமைதியாக இருந்ததுஅடிவானம்.நீல நிறத்தைப் பரப்பஆயத்தமாகிக் கொண்டிருந்ததுஆகாயம். அவர்களது தோலில்நினைவுகளைப் போல்ஒட்டிக் கொண்டிருந்தது உப்பு.எழும் ஒவ்வொரு அலையும்அவர்கள் வாழ்நாளெல்லாம் அறிந்தஒரு மூச்சினைப் போல் உயர்ந்தது. எண்ணும் முன்பேமேகங்கள் திரள்கின்றன.ஒரு கனத்த மௌனம்பிறகொரு பலத்த முழக்கம்.அவர்களுக்காகவேபாடிக் கொண்டிருந்த …
1. இருள் தளரநீலத்தில் தேயும் விண்மீன்கள்விரியும் காலை! 2. வெண்மேகம் விலகஒளி சிந்தும் சூரியன்பேசும் பகல்! 3. மேக நிழல்கள்மண்ணில் வரையும் சித்திரங்கள்வானமெனும் குழந்தை! 4. வானம் திறக்கஇலைகளைத் தொடும் வெயில்மென்மையான வாழ்வு! 5. மலை மேல் சூரியன்குருவியின் குரல் கரையமறையும் …
1. சரசரக்கும் சருகுகள்கிளை தாவும் அணில்காற்றின் வேகத்தில். 2. அமைதியான பின்வாசல்அணிலின் வாலசைவு விளையாட்டுநடனமாடும் அசைவின்மை. 3. மரப்பட்டையைச் சூடேற்றும் வெயில்கொட்டையைக் கொறிக்கும் அணில்திட்டமிடும் குளிர்காலம். 4. புற்களில் காலைப் பனித்துளிநொடியில் மறையும் கால்தடங்கள்நிசப்தத்தைக் கைப்பற்றும் அணில்கள். 5. மிதக்கும் மேகங்கள்மரத்துக்கு …
1.மிதக்கும் சோப்புக் குமிழிகள்அருகில் வண்ணத்துப்பூச்சிகள்பறக்கும் மகிழ்ச்சி. 2.பாதி கடித்த ஆப்பிள்விரியத் திறந்த கதைப்புத்தகம்வியப்புக்கு முடிவில்லை. 3.குழந்தை பென்சிலால் தட்டும் ஒலிஜன்னல் விளிம்பில் தத்தித் தாவும் குருவிகற்கின்றனர் இருவரும் சிறுகச் சிறுக. 4.மரத்தில் சிக்கிய காற்றாடிஅந்தியில் உயர ஏறும் நிலாவிழ மறுக்கின்றன இரண்டும். …
1.தரையில் இலையுதிர்க்கால இலைகாற்றில் சுழன்றாடும் குழந்தைவிழ அஞ்சுவதில்லை இருவரும். 2.ஓவிய நோட்டில் வண்ணத்துப்பூச்சிஉருளுகிறது கிரேயான்சிறகுகள் பெறுகின்றன நிறங்கள். 3.காற்றில் உதிருகின்றன பூவிதழ்கள்ஆச்சரியத்துடன் சேகரிக்கிறது குழந்தைஓட மறக்கிறது நேரம். 4.அந்திப் பூங்காகடைசிச் சிரிப்பைத் துரத்தும் எதிரொலிஆளற்று அசையும் ஊஞ்சல். 5.மழலையின் பள்ளி முதல் …
அவர்கள் அவளிடம் சொன்னார்கள்அவள் ஒரு அழகி அல்ல என்று,அழகுக்காக அவர்கள் வரையறுத்திருந்தலட்சணங்கள் எதுவும் அவளிடம் இல்லையென்று. அவளது உடலின் எடை அதிகமென்றார்கள்அவளது சிரிப்பு உரத்ததென்றார்கள்அவளது தோலின் நிறத்தைக் குறிப்பிட்டார்கள்அவளது கனவுகள் மிக உயரமானவை,ஒரு பெண் எட்ட முடியாதவை என்றார்கள். அவர்கள் ஒருபோதும் …