Home கவிதைசஞ்சாரம் – யாழினி சென்ஷி

சஞ்சாரம் – யாழினி சென்ஷி

by Yaazini
0 comments

பிரக்ஞைகளை கூடுகட்டி பெருத்திருந்த வயிற்றின் தாரைகள் குறுக்கும் நெடுக்கும் பலதுமாய் சுருங்கிக்கிடக்கிறது
மௌனத்தின் மெய்கள்
பதப்படுத்திய வெளிச்சமாகினும்
அறை முழுவதும் அடக்கவியலா ஆழ்துயரங்களின்‌ கருக்கலில் ஒவ்வொரு முறையும் கருத்தரித்து விடுகிறேன்
பலவீனஙகளின்‌ சிறகை
நிமிட்டியபடி இம்முறையும்
விட்டில் பூச்சிகள்தான்
பிறந்திருக்கிறது

*******

பள்ளத்தில் மீந்திருந்த
மழை நீரில்
மரணத்தைத் துழாவிக்கொண்டிருக்கின்றது
இரு மீன்கள்.
இலையோடு
உதிர்ந்த நிழலையும்
உள்வாங்கிய நீர்
மெல்ல வற்றியதும்
இலைகள் சிறகாகி
பறக்கத்தொடங்கியது
மீன்கள்

Author

You may also like

Leave a Comment