- நல்லாச்சி
- நல்லாச்சி – 2
- நல்லாச்சி -3
- நல்லாச்சி -4
- நல்லாச்சி -5
- நல்லாச்சி – 6
- நல்லாச்சி -8
- நல்லாச்சி -7
- நல்லாச்சி -9
- நல்லாச்சி – 11
- நல்லாச்சி – 10
- நல்லாச்சி – 12
- நல்லாச்சி – 13
- நல்லாச்சி – 14
- நல்லாச்சி – 15
- நல்லாச்சி – 16
- நல்லாச்சி – 17
- நல்லாச்சி – 18
- நல்லாச்சி – 19
- நல்லாச்சி – 20
- நல்லாச்சி – 21
- நல்லாச்சி – 22
- நல்லாச்சி – 23
- நல்லாச்சி – 24
- நல்லாச்சி – 25
- நல்லாச்சி – 26
- நல்லாச்சி – 27
- நல்லாச்சி – 28
- நல்லாச்சி – 29
- நல்லாச்சி – 30
- நல்லாச்சி – 31
- நல்லாச்சி – 32
- நல்லாச்சி – 33
- நல்லாச்சி – 34
- நல்லாச்சி – 35
- நல்லாச்சி – 36
- நல்லாச்சி – 37
- நல்லாச்சி – 38
- நல்லாச்சி – 39
- நல்லாச்சி – 40
- நல்லாச்சி – 41
தட்டட்டியில் பெய்யும் மழை நீரையெல்லாம்
தேக்கி வைக்கத்துடிக்கிறாள் பேத்தி
குளமாக்கி அணையாக்கி ஆறாக்கி
இறுதியில் அதை
கடலாகவும் ஆக்கி விட வேண்டுமாம்
சுறாமீன்களைத் தோணியாகவும்
திமிங்கிலங்களைக் கப்பலாகவும் கொண்டு
ஈரேழுலகமும் சுற்றி வர வேண்டும்
மனிதர் புழங்காத நாடுகளும் தீவுகளும்
ஏராளம் கண்டுபிடிக்க வேண்டும்
அவற்றில்
நல்லாச்சியின் கொடி உயரப்பறக்க வேண்டும்
வானளாவிப்பறக்கும் கொடியைப் பற்றிக்கொண்டு
விண்வெளிக்கும் செல்ல வேண்டும்
அங்கே
நிலவில் வடை சுடும் பெரிய ஆச்சி
பிடித்து வைத்திருக்கும் விண்மீன்களைக் கொணர்ந்து
தோட்டத்துக்கிணற்றில் விட வேண்டும்
மின்னி மின்னி அவை நீந்தும்போது
மத்தாப்பு கூட தோற்றுவிடும்
கதை வளர்த்துக்கொண்டே போகும் பேத்திக்கு
முளைக்கிறதொரு சந்தேகம் திடீரென
விண்மீனும் நட்சத்திர மீனும் ஒன்றா
பிற உயிர்களின் எலும்பெல்லாம்
அவ்வாறே வழக்கிலிருக்கும்போது
மீன்களின் எலும்பை மட்டும்
ஏன் முள்ளெனப் பகர்கிறோம்
இத்தனை விண்மீன்கள் உள்ளதெனில்
வானில் இருப்பது எத்தனையாவது கடல்
கேள்விகளால் துளைக்கிறாள்
வழக்கம்போல் விழிக்கும் நல்லாச்சி
வழக்கம்போல் சமாளிக்கிறாள்
‘எல… தண்ணியெல்லாம் வெளிய போவுது
தூம்பாவ மொதல்ல அடை
குட்டையளவேனும் நீர் தேங்கினால்தானே
அது
கடலை குட்டியாய்ப்போடும்’
நல்லாச்சியின் சொல்லையேற்ற பேத்தி
தட்டட்டியின் மடையை அடைக்கிறாள்
வானில் பெருகத்தொடங்குகிறது
ஒரு
தொங்கும் கடல்