Home கவிதைஒரு துளியின் துளிர்ப்பு

ஒரு துளியின் துளிர்ப்பு

0 comments

சாம்பல் படர்ந்த இதயங்களின் மேல்
மழைத்துளிகள்
ராகம் பாடிச் செல்கின்றன
சுட்டெரித்த சொற்களின் வடுக்களைக் கழுவி
மனதுக்குள் புதைந்திருந்த மௌனத்தை
பாட வைக்கிறது அந்தப் பெருமழை.

சொற்களால் வீழ்த்தப்படும் மனிதர்களை
இயற்கை ஒருபோதும் கைவிடுவதில்லை
கனிவுடன்
அமுதம் பொழிந்து உயிர்ப்பிக்கிறது
பேரழிவுக்குப் பின் நிகழும்
பேரன்பின் துளிர்ப்பு அது

சுட்டெரித்த எதிர்ப்புகளையெல்லாம் உரமாக்கி
அவநம்பிக்கையின் வேர்களை அறுத்தெறிந்து
மன்னித்தலின் பெருவழியில்
புன்னகையோடு பயணிக்கும் அந்த உயிருக்கு
ஒரு துளி அன்பு போதும்
அதை
யுகாந்த காலம் வரை வாழவைக்க.

Author

You may also like

Leave a Comment