இலக்கியம்

பனிவிழும் வனங்களிடை நிதானித்தபோது – ராபர்ட் ஃப்ராஸ்ட் கவிதை

தமிழாக்கம்: பவளமணி பிரகாசம் யாருடைய வனங்களிவையென நானறிவேன்அவன் வீடிருப்பதோ கிராமத்தினிலேஅவன் வனங்கள் பனியால் நிரம்புவதைநான் நின்று ரசிப்பதை அவன் அறியமாட்டான் ஆண்டின் மிக இருண்ட மாலைப்பொழுதில்வனங்களுக்கும் உறைந்த ஏரிக்கும் இடையில்பண்ணைவீடொன்றும் அருகில் இல்லாமல் நின்றதேன்என்றெனது சின்னக்குதிரை வியக்குது சுகமாய் உலாவும் காற்றும்…

Read more

சவத்துணி – ‘கஃபன்’ – முன்ஷி ப்ரேம்சந்த்

தமிழாக்கம்: அபுல் கலாம் ஆசாத் பாகம் (1) குடிசையின் வாசலில் தகப்பனும் மகனும் அமைதியாக அமர்ந்திருந்தனர். அவர்களின் முன்னே குளிர்காய்வதற்காக எரிக்கப்பட்ட விறகுக்கரி கிடந்தது. குடிசையின் உள்ளே மகனின் இளம் மனைவி புதியா பிரசவ வலியால் துடித்துக்கொண்டிருந்தாள். அவள் துடித்து எழுப்பிய…

Read more

சிறார் இலக்கியம் – மொழிபெயர்ப்பு: கடைசி ஆசை (ஆப்பிரிக்க நாட்டுப்புறக்கதை)

ஆங்கிலத்திலிருந்து தமிழில்: ஞா.கலையரசி முன்னொரு காலத்தில் ஓர் அரசர் இருந்தார். வெவ்வேறு பகுதிகளிலிருந்து புலவர்களும், இசைக் கலைஞர்களும், எழுத்தாளர்களும் அவரைப் பார்க்க வந்தார்கள். அவர்களுடைய கதைகளைக் கேட்பதும், பாடல்களை ரசிப்பதும் அவருக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு. எல்லோரையும் விட மகமூத் என்பவரை…

Read more

பிணவறையில் உறங்குகின்றவர்கள் – பாபு பரத்வாஜ் (மலையாளம்)

பிரவாசிகளுடே குறிப்புகள் சிறுகதைத் தொகுப்பிலிருந்து.. தமிழாக்கம்: யாழினி சென்ஷி காணாமல் போன எனது நண்பனை தேடிக்கொண்டிருக்கும் போதுதான்  நான் மருத்துவமனையில் சவக்கிடங்கில் இருக்கும் அநாதைப் பிணங்கள் பற்றியும் தெரிந்து கொண்டேன். அதுவரை புத்தகங்களில் வாசித்து அறிந்தது  என்னமோ ஆத்மாக்கள் தன்னை உரித்துவிட்டு …

Read more

மொழிபெயர்ப்புக்கவிதைகள் – சந்திரா மனோகரன்

ஓ! மலையருவியின் அருகே நிற்கும் மழலையே!—– —————————————————————————ஆங்கிலம் : ஜார்ஜ் பார்க்கர்தமிழில் : சந்திரா மனோகரன் ஓ! மலையருவியின் அருகே நிற்கும் மழலையேஓர் இதயம் மட்டுமே கேட்ட அழைப்பை போலசொற்களற்ற பாடல்கள் அந்த வெள்ளப்பரப்பில்எழுகின்றன!எல்லாவற்றிலும் நிரம்பியிருக்கும் ஆனந்தம்எழும்புகிறதுஒரு பட்சியின் சீழ்க்கையொலிபோல ஓ!…

Read more

குறுங்கவிதை – ஒமர் எல் அக்கட்

தமிழாக்கம்: சுரேஷ் பாபு ஒரு நாள்,போர்க்கவலைகள் இல்லாத பொழுதில்,உண்மையைச் சொன்னால் பாதிப்புகள் இராத பொழுதில்,தண்டிக்கப்படவேண்டியவர்கள் தப்பிவிட்ட பொழுதில்,எல்லாருமே எந்நேரமுமேஅநியாயத்துக்கு எதிராகஇருந்தவர்களாகத்தான் இருப்பார்கள்.

Read more

துண்டுக் கயிறு – கீ டு மோப்பஸான்

தமிழில்: கார்குழலி அன்று சந்தை நாள் என்பதால் சுற்றியிருந்த கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளும் அவர்களின் மனைவியரும் கோடர்வீலை நோக்கி வந்துகொண்டிருந்தனர். நீண்ட வளைந்த கால்கள் எட்டிவைத்த ஒவ்வொரு அடிக்கும் உடல் முழுவதையும் முன்னால் நகர்த்தியபடி மெல்ல நடந்தனர் ஆண்கள். ஏரைத் தள்ளித்தள்ளி…

Read more

குறுங்கவிதை – மர்வான் மஃகூல்

தமிழாக்கம்: அனானி அரசியலற்றகவிதைஎழுதநான் பறவைகளைக்கவனிக்க வேண்டும்பறவைகளைக்கவனிக்கவேண்டுமென்றால்போர் விமானங்கள்அமைதியாக வேண்டும்.

Read more

அரலுவா மரா (பூக்கும் மரம்) – கன்னட நாட்டுப்புறக் கதை

தமிழாக்கம்: ஐயப்பன் கிருஷ்ணன் அது ஒரு பழைய காலம். பஞ்சம் ஊரெல்லாம் தலைவிரித்தாடிய காலம் அது. அந்தக் காலகட்டத்தில், ஒரு ராஜாவின் ஆளுகைக்கு உட்பட்ட சிற்றூரில் ஓர் ஏழைத் தாய் தன் இரு மகள்களுடன் வாழ்ந்து வந்தாள். அன்றாட உணவிற்கே அவர்கள்…

Read more

ஜப்பானிய சிறுவர் கதைகள் 18 – மொழியாக்கம்

முன்னொரு காலத்தில் ஜப்பானில் இரண்டு தவளைகள் வசித்தன. ஒரு தவளை ஒசாகா நகரில் கடலோரமாக இருந்த பள்ளத்தில் தேங்கியிருந்த நீரில் வசித்தது. மற்றொரு தவளை கியோட்டோ நகரில் ஒரு நீரோடையில் வசித்தது. ஒரே இடத்தில் வசித்தது தவளைகளுக்கு சலிப்பாக இருந்தது. அதனால்,…

Read more