அசுரவதம் : 2 – காலகேய தானவன்.
காமவள்ளி தன் எச்சரிக்கையை மீறி தன்னை நோக்கி வருவதைக் கண்ட அந்த இளைஞன் சட்டென்று தன் இடையில் இருந்த அந்தக் குறுவாளை எடுத்து அவளை நோக்கி வெகு வேகமாக வீசினான். அந்நேரத்தில் ஒரு பெரிய ஆண் சிங்கம் காமவள்ளியின் பக்கவாட்டில்…
காமவள்ளி தன் எச்சரிக்கையை மீறி தன்னை நோக்கி வருவதைக் கண்ட அந்த இளைஞன் சட்டென்று தன் இடையில் இருந்த அந்தக் குறுவாளை எடுத்து அவளை நோக்கி வெகு வேகமாக வீசினான். அந்நேரத்தில் ஒரு பெரிய ஆண் சிங்கம் காமவள்ளியின் பக்கவாட்டில்…
தானப்ப முதலித் தெருவில் வீட்டின் வாசலில் மூர்த்தி சைக்கிளை நிறுத்திப் பூட்டிவிட்டுத் திரும்பிய போது வாசலிலேயே நின்றிருந்தாள் பாட்டி.
கண்களில் கவலை.
“என்ன பாட்டி. இங்க நிக்கறேள்?. அம்மா ரிப்பன் பக்கோடா பண்ணினாளாம். உங்களுக்குக்கொடுத்துவிட்டு வரச் சொன்னாள்.”
காமவள்ளி. இவளை இந்தப் பெயரால் அறிந்தவர்கள் குறைவு. அவள் நகரில் அவளின் மீனைப் போன்று அழகிய கண்களைக் கண்டு பெண்களும் அவளை மீனாக்ஷி என்றே அவர்கள் அழைப்பதுண்டு.
அந்த இளங்காலைப் பொழுதில் பகலவனின் பொன்னிற ஒளி கோதாவரியை தங்கமென அடித்து வைத்தது. சூரியன் அவளை தன் கிரணங்களால் தழுவிடக் கண்டவர்களால் அவளின் அழகையும் கோதாவரி நதியின் அழகையும் ஒப்பிட்டு எந்த அழகு சிறந்தது என்று கூறிட முடியாமல் திகைத்து நிற்பர்.