இலக்கியம்

சிரிக்கும் இதயம் – சார்லஸ் புக்கோவ்ஸ்கி

உங்கள் வாழ்க்கை உங்களுடையதே-இருண்ட அடிமைத்தனத்திற்குள்அதை நசுங்க விடாதீர்கள். விழிப்புடன் இருங்கள்.வெளியேற வழிகள் உள்ளன.எங்கோ ஒரு ஒளி உள்ளது.அது பெரிய வெளிச்சமாக இல்லாதிருக்கலாம்.ஆயினும் அதுஇருளை வென்று கொண்டேயிருக்கும். விழிப்புடன் இருங்கள்.தெய்வங்கள்உங்களுக்கு வாய்ப்புகளை வழங்குவார்கள்.அவற்றை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். மரணத்தை உங்களால்…

Read more

நல்லாச்சி – 34

This entry is part 34 of 40 in the series நல்லாச்சி

பெரியதாத்தா வரும் தினங்களில்இறக்கை கட்டிக் குதூகலிப்பாள் பேத்திவயலில் விளைந்தவையென கொண்டுவரும் மூட்டைக்குள்தோட்டத்தில் உதிர்ந்தவையெனஒன்றிரண்டு மயிற்பீலிகளும் இருப்பதுவும்ஒரு காரணம் ஆடலும்பாடலும் கதைசொல்லலுமாய்தாத்தாவின் தோளில் நிழலாய்த்தொற்றிநல்லாச்சியை மறந்து திரியும் பேத்திக்குஒரேயொரு குறைதான்தன் களித்தோழனிடம்கைவிரலிடுக்கில் புகையும் கடைசி விரல்தான் அதுஆருரைத்தும் கேட்காத அகந்தையைஅறிவுறுத்தி உடைக்க எண்ணுகிறாள்…

Read more

தமிழே அமிழ்தே – 14

This entry is part 14 of 25 in the series தமிழே அமிழ்தே

பல வருடங்களுக்கு முன்பு, மரபுக் கவிதை கற்றுவந்த புதிதில், ரியாத்தில் சவூதி அரேபியாவுக்கான இந்தியத் தூதராகத் தொண்டாற்றிய மறைந்த எம்.ஓ.ஹெச். ஃபாரூக் மரைக்காயர் இல்லத்தில் பாவேந்தர் நினைவேந்தல் நடைபெற்ற போது அதில் மரபுக்கவிதை அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தேன்.பொதுவாக, மனிதர்களைப் பற்றிப் பாடுவதில்லை…

Read more

உருதுக் கவிதை உலகு – 3: மீர்ஸா காலிப்

This entry is part 3 of 11 in the series உருதுக்கவிதை உலகு

‘கஜுராரே கஜுராரே’, பண்ட்டி ஔர் பப்லி என்னும் திரைப்படத்தில் ஒலித்த பிரபலமான களியாட்டப் பாடலில் சிருங்காரமும், காதலும், சீண்டலும் வெளிப்படும் வரிகள் திடீரென ரசிகனை மீர்ஸா காலிபிடம் அழைத்துச் செல்லும். திரைப் பாடல்களை மேலோட்டமாக ரசித்துக் கடந்து செல்பவருக்குப் புரியாமலும், மீர்ஸா…

Read more

சாம்பன் 

ஊரின் எல்லாப் பகுதியிலும் தேடியாகிவிட்டது. தோப்புகள், ஒன்றைக் கூட விடவில்லை.. என்றும் ஆடுகள் மேய்வதற்குச் செல்லும் புல்வெளிகளையும் விடவில்லை.. அலைந்து திரிந்து இதோ இந்த மேடான இடத்திற்கு வந்தாகிவிட்டது.. சாம்பன் எங்கு சென்றிருப்பான்? கையிலிருந்த ஈட்டியை அருகில் வைத்துவிட்டு ஆசுவாசப்படுத்திக் கொள்ள…

Read more

அக்னி நட்சத்திரம்

1.எங்கும் வெயில்வெப்பச் சாலைகளில் நிசப்தம்நீளும் மதியம். 2.சுருங்கி மறையும் நிழல்கள்தலைக்கு மேல் நண்பகல்கனக்கும் அமைதி. 3.சுழலும் மின்விசிறிசோம்பல் முறிக்கும் வட்டங்கள்கரைகிறது நேரம். 4.பொன்னாக மாம்பழங்கள்பிசுபிசுக்கும் கைகள்ஒளியாக வழிகிறது இனிப்பு. 5.சூடான நிலம்வெற்றுப் பாதங்கள்ஓடுகிறது குழந்தைமை. 6.நெற்றியில் வியர்வைஉப்பு வெயிலின் சந்திப்புஉடலோடு ஒட்டும்…

Read more

ஒரு (தற்)கொலை நடக்கப்போகிறது

இனி அதற்கு வாய்ப்பே இல்லை என்கிற கடைசித் தருணத்தில்தான் தற்கொலை செய்ய முடிவெடுத்தேன். இன்று காலைவரையிலும்கூட கொஞ்சம் நம்பிக்கை இருந்தது. எப்படியும் ஜீவா பேசிவிடுவான் என்றே இருந்தேன். கிடைத்த தகவல்கள் என் நம்பிக்கையைச் சிறிது சிறிதாக அரித்துத் தின்றுத் தீர்த்தன. இரண்டு…

Read more

ர.பா.இந்துமதி கவிதைகள்

1.பெண் எனும் பேனாஇறுகப் பிடித்திருந்தமுள் பேனாவின் முனையிலிருந்துவழியும் ரத்தத்துளிகள் மையாக மாறதனது வாழ்க்கைப் புத்தகத்தின்அத்தனை பக்கங்களிலும் எழுதுகிறாள்தனக்குப் பிடித்தமான வாழ்க்கையை. 2.காதல் பூக்கள்மொட்டாக முகையாக இருக்கும் போதேஅவசரம் கொள்ளாதீர்கள்.வீயாகிச் செம்மையாகும் வரையிலும்காத்திருக்கத் தேவையில்லை.அலராக மலராக இருக்கும்போதுபறித்துக்கொள்ளுங்கள்;கைகளுக்கு மட்டும் அல்லமனதிற்கும் அதனால் அழகு…

Read more

உருதுக்கவிதை உலகு – 2

This entry is part 2 of 11 in the series உருதுக்கவிதை உலகு

அமீர் குஸ்ரூ கையறுநிலையைக் கண்டும் கைவிட்டுப் பாதை மாறி விழிதிருப்பிப் பொய்யுரைத்தனையோ பிரிவினைத் தாங்கும் திடமனம் எனக்கிலையெனினும் நெஞ்சணைக்க விலக்குவையோ பாரசீகமும் ஹிந்தவியும் கலந்து எழுதப்பட்ட இந்த இரண்டு அடிகள்தான் உருதுக் கவிதை உலகின் முதல் கஜலின் தொடக்க இரண்டு அடிகள்.…

Read more

பரமசிவன் பாதம் பணி – அந்தாதி

விவரணை வேண்டாமே வேகமாய் நெஞ்சில்சிவனை நினைந்தால் சிறப்பாம் – புவனமதைஆக்கியே காத்தும் அழிக்கவும் செய்திடும்வாக்கினில் வல்லோன் அவன் அவனன்றி ஓரணுவும் அண்டத்தில் தானாய்உவந்து அசையாதே ஊக்கமாய் ஒற்றுமையாய்க்காலம் முழுவதும் காத்திடக் கைப்பற்றுஆலமுண்ட ஈசன்தாள் ஆம் ஆமென்று சொல்பவரை அண்டிப் பதம்தருவான்போமென்று சொல்பவரைப்…

Read more