திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 1

தெலுங்கு மூலம்: ஜாஃபர் பாஷா

மறந்துபோக வேண்டும்
தீங்கினை நினைவுறுத்திய விடியலை
அந்த விடியலை உசுப்பிவிட்ட இதயத்தை
அனைத்தையும் மறந்துபோக வேண்டும்

வானக் கிண்ணத்திலிருந்த வெளிச்சத்தையெல்லாம் விழுங்கிவிட்டு
விக்கலோடு உன்முன்னால் வந்த இந்த இரவுக்கு
கொஞ்சம் போலக் கண்ணீர் புகட்டினாலும் சரி
விடிவதற்குள்ளே எல்லாவற்றையும் மறந்துபோக வேண்டும்

காலத்திற்குத் தாகமெடுக்கும்போதெல்லாம்
நெஞ்சின் ஈரத்தைக் கண் வாளியால் இறைக்கவிட வேண்டும்
அதன் பிறகே
நீர் வற்றிய கிணறு போன்ற தேகம்
ஊற்றெடுக்கும் கனவுகளின் நீரூற்றைக்
கனவு காணும்.

Author

  • மு.இராமர் மாசானம் என்ற இயற்பெயருடைய இவரது சொந்த ஊர் திருநெல்வேலி. தற்போது ஆந்திர மாநிலம் குப்பத்தில் இருக்கிற 'திராவிடன் பல்கலைக் கழகம்' இல் முனைவர்பட்ட ஆய்வாளராக உள்ளார். 'ஒப்பாய்வு நோக்கில் ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் கீர்த்தனைகளும் பக்த இராமதாசு கீர்த்தனைகளும்' எனும் தலைப்பில் ஒப்பிலக்கிய ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மைசூரில் இருக்கிற இந்திய மொழிகள் நடுவண் நிறுவனத்தில் (CIIL) தெலு(ங்)கு மொழியில் பத்து மாதகால பட்டய வகுப்பு முடித்திருக்கிறார். அதன் வெளிப்பாடாக தெலுங்கில் டாக்டர். எம். ஹரிகிஷன் அவர்கள் எழுதிய தெலு(ங்)கு நாட்டுப்புறக் கதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து வருகிறார்.

Related posts

அசுரவதம் – பாகம் 2 – அத்தியாயம் 21: நீலக்கடலின் ஓரத்தில்

அறிவெழுச்சி: 1

மனித மனதின் நிழல்களும் வெளிச்சங்களும் – ராஜேஷ் வைரபாண்டியனின் “அறல்” சிறுகதைத் தொகுப்பு – வாசிப்பனுபவம்