1 – வேதம் படித்தவர்க்கும் வித்தை அறிந்தவர்க்கும்நாதம் இசைப்போர்க்கும் நல்கவில்லை – பேதமில்லாபாதங்கள் பட்டநிலம் பார்த்தது மோட்சமதுமாதவன் தானுண்ட மண் 2 – சிலிக்கன் வழிவந்த சில்லுப் புரட்சிகலிகாலம் ஆளும் கம்ப்யூட்டர் ஆதியெங்கே?பாதாதி கேசத்தில் அண்டம் அளந்திட்டமாதவன் தானுண்ட மண்! 3 …
Category:
கவிதை
குப்பைகளைத் தரம்பிரிக்க கற்றுக்கொடுத்திருக்கிறார்களாம் பள்ளியில் மக்கும் குப்பை மக்காக் குப்பை என உதட்டுக்குள்ளேயே அடிக்கடி சொல்லிப்பார்த்துக்கொள்கிறாள் பேத்தி
எத்தனை யுகங்கள் கடந்திருக்கும் இந்த பிரியத்தின் மழைத்துளி! அதன் கண்ணாடி மோன உடல் மிதந்தலைந்தது எங்கெங்கே!
நட்சத்திரப் பூத்தையல் காலத்தறி நெய்த இன்னுமொரு இரவு. கண் திறவா பிள்ளையின் இதழ் சிரிப்பாய் வெள்ளி குழைத்த நிலாத்துண்டு.
அறுவடைக்கென ஆட்கள் வந்திருக்கிறார்கள் நல்லாச்சி வீட்டு தோப்பில் வகைவகையாய் மாங்காய்களும் பலாப்பழங்களும் வாழைத்தார்களுமாய் கனியக்காத்திருந்தவற்றில் குத்தகை போக மீதத்தை அடுக்குகிறார்கள் நல்லாச்சி வீட்டு முற்றம் நிறைய