தொலைத்த இடத்தில்தான் தேடணும்என்கிறாள் நல்லாச்சிதினமும் ஏதேனுமொன்றைத்தொலைக்கும் பேத்தியிடம்அவள்எங்கோ தொலைத்ததையெல்லாம் கண்டுபிடிக்கும்மந்திரக்கோலன்றோ நல்லாச்சிஎனினும்அல்லல் அதிகமானால் அலுத்தும்கொள்வாள் பொருட்களைத்தொலைத்தே பழக்கப்பட்ட பேத்திஒருநாளில்நல்லதோர் நட்பையும் தொலைக்கிறாள்பிரிவென்ற பெயரில்;அவ்வன்பை எங்கே தேடுவதெனக் குழம்புகிறாள்பெற்றோரின் அன்போஉற்றாரின் அன்போஇன்னபிற களித்தோழரின் அன்போஇணைவைக்க இயலாமல் தத்தளிக்கின்றனதூக்கமின்றி ஏக்கத்தில் மெலிகிறாள் பேத்திமாற்றமொன்றே மருந்தாகும் …
சாந்தி மாரியப்பன்
விருந்தொன்று வந்திருக்கிறதுநல்லாச்சி வீட்டுக்குஅன்புமிக்கதுதான் அந்நெஞ்சமும்எனினும்இருண்டதும்பேத்தியின் மேல் அன்புசற்றே வறண்டதும் கூட வந்த நாள் முதல்அதன் அட்டகாசங்களையெல்லாம் சகிக்கின்றனர்உறவின் பெயரால்தலைமேல் தாங்குகின்றனர்அன்பின் பெயரால்;பேத்தியின் நனையும் கண்களையும்வெதும்பும் நெஞ்சத்தையும்மரியாதை நிமித்தம் வாளாவிருப்பதையும்கண்ணுறாதவளல்ல நல்லாச்சிவந்த உறவின் மனக்காயம் புரியாதவளுமல்ல எல்லை மீறிய ஓர் நாளில்அருகிருத்தி உரைக்கிறாள் …
கண்புரை ஏற்பட்டிருக்கிறதாம் நல்லாச்சிக்குஅறுவை சிகிச்சைக்குப் பயப்படுகிறாள் அவள்தைரியம் சொல்பவர் சிலர்அதன் பெயரால்அதைரியப்படுத்துபவர் இன்னும் சிலர் தொடச்சுப்போட்ட டியூப்லைட் மாதிரிபளீர்ன்னு தெரியும் ஒலகம்அழகுபோல சீரியல் பாக்கலாம்எனத்தெம்பூட்டுகிறாள்சிகிச்சையால் பலன் பெற்ற செல்லாச்சிநப்பாசையால் சம்மதிக்கிறாள் நல்லாச்சிமுற்றத்து வெயில் முகத்தில் படாதுவெக்கை அணுகாதுஅருகிலிருந்து பேத்தி பேச்சுத்துணையாகஅந்தப்புரத்து ராணி …
பேரன்பும் பெருங்கருணையும்ததும்பித்தளும்பிய காலக்கடலிலிருந்துபொங்கிப்பிரவாகித்துகரைதழுவ ஓடி வந்தன நினைவலைகள்நினைவுகளெனில் பாலைவனச்சோலையுமாம்நினைவுகளெனில்புன்னகையின் பின்னொளிந்த கோரப்பற்களுமாம் வாழ்வெனும் காட்டாற்றின் நடுவேசிறுதுண்டு நிலமாய்காலூன்றி ஆசுவாசம் கொள்ளவும்மலர்ந்திருக்கும் நினைவுகளில் கமழும்நறுமணத்தால் பேதலித்துகாலடி நிலம் நழுவவும்இளஞ்சூரியன் சிரிக்கும் இவ்வீதியில்அதோ அந்தக்குழந்தையின் நகைப்பொலியாய்ஓங்கியொலித்துஇறுதியில் முணுமுணுப்பாய்த் தேய்ந்தடங்கவும்என நங்கூரமிட்டுவரிசையாய் நிற்கின்றன நினைவுகள்அவ்வப்போது பார்த்துக்கொள்ளும்நட்சத்திரங்களைப்போல் …
வாழும் பல்லியும் மனைப்பாம்பும்அரங்கு வீட்டில் உலவும் தேள்களும்அசைத்துப்பார்த்ததில்லை பேத்தியைபெரிய தாத்தாவின் முழ நீளத்தாடிக்கும்மிலிட்டரி மாமாவின் கம்பீர மீசைக்கும்சற்றும் பயந்ததில்லை அவள் கண்ணைக்குத்துவதாய்ச்சொல்லப்படும் சாமியிடமும்தூக்கிச்சென்றுவிடுவதாய்நிறுத்தப்படும் பூச்சாண்டியிடமும்ராஜபார்ட்டுகளுக்குக் கோமாளிவேஷமிடுகிறார்களேயெனபரிதாபமேயுண்டு அவளுக்குதேனீக்குப் பயப்படாத மாமன்குளவிக்கு அஞ்சும் விந்தையும்முரட்டுக்காளையைத் தட்டி விலக்கும் செல்லாச்சிமருமகளிடம் காட்டும் பணிவும்என்றுமே புரிந்ததில்லை …
ஒட்டி இழையும் குஞ்சுகளையெல்லாம்எட்டித்துரத்தும் கோழியின் போக்குகொஞ்சமும் பிடிக்கவில்லை பேத்திக்குநல்லாச்சியிடம் வந்து அங்கலாய்க்கிறாள்‘பிள்ளேளுக்க தப்பை அம்மைதானே மன்னிக்கணும்அதுகளுக்கேது போக்கிடம்’ வெதும்பும் பேத்தியைதேற்றுகிறாள் நல்லாச்சி புன்னகையுடன்‘அட! கோட்டிப்பயபுள்ள.. குஞ்சுகளையெல்லாம்கோழி தவுத்துட்டுது’ என்கிறாள்‘தவிர்த்துவிட்டது’ எனத் தெளிவாயும் செப்புகிறாள்புரியாமல் தலைசொரியும் பேத்திக்குஇரைதேடல் முதல்இரையாகாமல் தப்புதல் ஈறாகப் பயிற்றுவித்தபின்குழந்தைகளைசுயமாய் …
சுரைக்குடம் கட்டிச் சில நாட்கள்காற்றடைத்த பையுடன் பலநாட்கள்கவிழ்த்த குடத்துடன் ஒன்றிரண்டு நாளேகடப்பாரை நீச்சலை மறந்துகெண்டை மீனாய் நீந்துகிறாள் பேத்திநீரில் தானுமொரு துளியாய்க்கலந்தவளுக்குநிலமென்பது நினைவிலேயே இல்லை ஆறும் குளமும் யோசிக்கின்றனஅடுத்த ஊருக்குப் போய்விடலாமெனதவளைகளெலாம் தப்பித்துவிட்டன எப்போதோ‘கலங்கியது தானே தெளியும்’அமைதிப்படுத்துகிறது மூத்த ஆறொன்று‘வாய்ப்பில்லை’ என்கிறது …
கிடத்திய கிடுகில் வைக்கோல் பரப்பிஅதற்குக் குளிராது வேட்டி போர்த்திசுடுசாதம் கொட்டிப்பரத்துகிறாள் நல்லாச்சிமுத்தாய்ச்சொட்டும் துளிகளெல்லாம்சத்தமில்லாமல் பயணிக்கின்றன கிடுகு வரை அம்பாரச்சோறு அடங்குகிறது அண்டாவில்சம்பாரம் பயணிக்கிறது அத்தோடுமுற்றத்து முருங்கை சாம்பார் உசத்தியாம்கிரீடமாய்ப் பயணிக்கிறது நல்லாச்சி தலைமேல்சோற்றுப்படையெடுத்துச் செல்கிறாள்நடவு வயல் வீரர்களை நோக்கிகுழம்பும் கறியுமாய் ஆயுதமேந்தி …
திடலின் ஓரத்திலிருக்கும்ஆலமரத்தைக் கண்ணுறுந்தோறும்ஆவலும் பயமும் கொள்வாள் பேத்திகிளிகளைப்போன்ற அக்காக்களும்அக்கக்கோவெனும் கிளிகளும்இறுகப்பற்றி ஊஞ்சலாடும் விழுதுகள்ஆசையையும் பயத்தையும் விதைத்திருந்தன அவளுக்குள் விண்ணுக்கும் மண்ணுக்கும்பாலமாயிருந்த விழுதுகளில் சிலபாதாள லோகத்தையும் பார்த்துவரப்புகுந்திருந்தனஎண்ணெய் தடவாத முடிக்கற்றையெனநுனிகளில் பிளந்து கிளைத்திருந்தன சிலஅக்கையொருத்தி கைபற்றிச்சேர்க்கவிழுது பற்றி ஆடிய பேத்திஅதே வீச்சில்பூமியை முத்தமிட்டுப் …
பூக்களென்றால் கொள்ளைப்பிரியம் பேத்திக்குசூட்டிப்பார்ப்பதில் அதிகப்பிரியம் நல்லாச்சிக்குதென்னைமரக்குடுமி வைத்த பிராயத்திலிருந்துகருநாகம் போல் பின்னலிடும் வயது வரைவிதவிதமாய்ச் சூட்டி அழகு பார்க்கிறாள்சூட்டும்போதே பயன்களையும் சொல்லிவளர்க்கிறாள்தாழைப்பூமுடித்து மருக்கொழுந்து சூடிய பொழுதில்குழந்தை மீனாட்சியாய் வரித்துசுற்றிப்போட்டும் கொள்கிறாள் பன்னீர், சண்பகம், ரோஜா, மகிழம், டேலியா எனதாத்தாவின் தோட்டத்தில் பூக்கிறதுஅந்தப் …
- 1
- 2