திரைப்பாடல்கள், தமிழ்த் திரைப்பட வரலாறு, அரசியல், என் எல்லைக்குட்பட்ட இலக்கியம் அனைத்தும் என் வாழ்க்கை வரலாற்றிலிருந்து பிரிக்கமுடியாமல் இருப்பவை. எனக்கு மட்டுமல்ல; ‘அவனுடைய’ இனிய தமிழ் மக்கள் அனைவருக்கும் அப்படித்தான். பெயருக்காக அவன் தமிழ் மக்களை அழைக்கவில்லை, அவர்களுடன் அவர்களாகவே அவனும் …
கட்டுரை
பேரன்பின் சாட்சியங்கள் – அமுதவல்லி நாராயணனின் ’என்றும் நானறியேன்’ கவிதைத் தொகுப்பை முன் வைத்து…
108 கவிதைகளைக் கொண்ட இத்தொகுப்பில், ஒரு பெண்ணின் வாழ்க்கைப் பயணம் ஆழ்ந்த நெகிழ்வுடனும், உண்மையுடனும் விரிகிறது. சூரிய ஒளியில் நனைந்த குழந்தைப் பருவ நினைவுகள், தாயின் ஆழமான அன்பு, தந்தையின் அமைதியான பிரியம், உறவுகளின் உன்னதம், தன் குழந்தைகளின் மீதான எல்லையற்ற …
அன்றைய மொழிபெயர்ப்புகளும், இன்றைய மொழிபெயர்ப்புகளும்
பத்து வருடங்களுக்கு முன்பு, THT (Tamil Heritage Trust) குழுவினருடன் ஒரிசாவுக்கு ரயில் ஏறினேன். குளிரூட்டப்பட்ட மூன்றாம் வகுப்பு பயணம். அந்தக் குழுவில் வெகு சிலரைத் தவிர மற்றவர்களை எனக்கு அறிமுகம் கிடையாது. அதே பெட்டியில் ஒரு பெரியவரும், அவர் மனைவியும், …
பள்ளிக்காலம் அது. அரசு உயர்நிலைப்பள்ளியில் பெரிய நூலகம் உண்டு. ஆனால், நாங்கள் சென்று புத்தகம் எடுக்கவோ, படிக்கவோ அனுமதி இல்லை. அத்தோடு இப்படி ஒன்று இருப்பதுகூட நாங்கள் அறியாதது. ஆசிரியர்களின் மதிய நேர ஓய்வுக்கூடமாகவே இருந்தது அது. புதிதாக வந்த தமிழாசிரியர் …
“ரோஜா, மல்லி, செம்பருத்தி, துளசி என, கண்ணுக்குக் குளுமையாய்க் காட்சியளிக்கும் நந்தவனமாகத் தோட்டம், எங்க வீட்டு காம்பவுண்டில் இருந்தாலும்… காலையில் எழுந்து, ஜன்னல் வழியாகத் தோட்டத்தைப் பார்த்தால், “பருத்தி” மரம்தான் தெரியும்… ஏதாவது காய்கறித் தோட்டம் போடலாம் எனப் பந்தல் அவரை …
“மாமைக் கவினே” – மாநிற/கருமை அழகே!
முன்னுரை நிறம் – மனித இனத்தில் உயர்வு, தாழ்வு பேதம் தோன்றக் காரணங்களுள் முதன்மையாக உள்ளது தோலின் நிறம். புவியில் வாழ் நிலம் பொறுத்தே மனிதனின் நிறம் பெரும்பாலும் அமைகிறது. சூரியனின் புற ஊதாக் கதிர்களும் (UV rays), வெம்மையும் அதிகம் …
நேற்று என் தோழியர் வட்டத்தில் இருவர் எனக்கு போன் செய்து, “ராதா, நீயும் அனிதாவும் ஜீ தமிழ் நடத்தும் “தமிழா!தமிழா” ப்ரோக்ராம்க்குப் போய் இருக்கலாம்டீ” என்றார்கள். (ஆமா!! நம்மை யார் கூப்பிடுவார்கள்) (தனிக்குடித்தனம் கூட்டுக்குடும்பம் டாப்பிக்காம்.. அதில், பெண்கள் மாமியார் கேரக்டர் …
சபராளிகளின் சிறகசைப்புகள் | ஆசிஃப் மீரான்
“புலம்பெயர்ந்து வாழக்கூடிய தமிழர்களின் இலக்கியம்தான் இனிமுதல் வரும் காலங்களில் தமிழ் இலக்கிய உலகில் கோலோச்சும்” என்று இலங்கையின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான எஸ்.பொ அவர்கள் குறிப்பிட்டபோது, தமிழின் இலக்கிய உலகம் மொத்தமும் அதிர்ந்தது. அதற்கு எதிரான குரல்களும், விமர்சனங்களும் தமிழ்நாட்டில் …
கடலுக்குள் மெல்ல உந்தப்படும் படகுகள் | அம்பை
ஒரு மொழியின் இலக்கியம் வளர்ச்சி அடைந்ததின் ஓர் அடையாளம் அது எவ்வளவுபேரை எட்டியுள்ளது என்பதைப் பொறுத்திருக்கிறது என்று பரவலாக நம்பப்படுகிறது. இது மொழியாக்கம் மூலம்தான் சாத்தியம். குறிப்பிட்டுச் சொன்னால் மேற்கு உலகை எட்ட மிகவும் முக்கியமானது மொழியாக்கம். இங்கு மேற்கு உலகு …
உலகம் யாவையும் உருக்கொண்ட வாசிப்பு | ரா கிரிதரன்
கடந்த இருபது வருடங்களாக இங்கிலாந்தில் வசித்து வந்தாலும் வாசிப்பு ஆர்வமிக்க நண்பர்கள் குழு ஒன்று கடந்த பதினைந்து வருடங்களுக்கு முன் தான் அமைந்தது. இங்குள்ள புறச் சூழல்களில் ஓரிடத்தில் சந்திப்பதும் விவாதிப்பதும் அதைத் தொடர்ச்சியாகச் செய்வதும் நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்றாகவே இருந்தது. …