கருமை சூழ் நள்ளிரவில் மாமழையின் மண்வாசம் வர
அறையின் சிறு அகல்விளக்கும் சுழற்காற்றினில் அல்லாட…
காரிருள் சோக நிழல் போர்த்திய காதலியின் நெஞ்சமது
நூலறுந்த பட்டம் போல் வேதனையில்
துடிதுடிக்க…
கண் மூட மறுக்கும் நொடியெல்லாம் காதலனின் நினைவு வாட்ட
விண்ணெட்டும் காதலது உள்ளுக்குள் வேதனையாய் வலிகள் தர…
தவிக்க விட்டுச் சென்றவனே காண மீண்டும் வரமாட்டாயா
சிரிக்கும் உன் மலர் சோலை வாடிய நிலை அறியமாட்டாயா…
தேனூறும் இதழ் சுவைத்து கள் பருகியவன் நீயன்றோ
வானேறி நிலவில் வந்துன் கவின் முகம் காட்டாயோ?
மீனினங்கள் விளையாடிடும் வெளியில்
நின் சாரல் வேண்டிக் காத்திருக்கிறேன்
வான்திறந்து பெய்யாதோ விண்