Home கவிதைமுதிர்ந்த முள்மரம்

வளையும் பருவத்திலே
வாழ்வியல் கற்க வேண்டும்
காலம் கடந்து விட்டால்
கற்பது கடினமாகிப் போகும்

பகைமை உணர்வுகள்
பார்த்திருந்து நமைப் பந்தாடும்
தக்க நேரத்திற்கு
காத்திருந்து நமைச் சூழும்

நன்செய் நிலத்தில்
நடுவிலே பதர் வந்திடும்
நாள் கடத்தாமல்
நீக்குதல் நிலத்திற்கு நல்லது

முதிர்ந்த முள்மரம்
வெட்டுவார்க்கு வேதனை ஆகும்
இளையதாய் இருக்கையில்
வேரோடு களைதல் வேண்டும்

கூடவே இருக்கும்
கொத்தித் தின்னக் காத்திருக்கும்
பார்த்து நீக்கிவிடில்
பாதகம் வாராமல் காக்கும்

உறவில் பகைகள்
உடனடியாய் நீக்கப்பட வேண்டும்
உள்ளச் சிதைவுகள்
உடனடியாய் காக்கப்பட வேண்டும்!

(குறள்: 879
இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து.)

Author

  • பிறப்பிடம்: திருநெல்வேலி வசிப்பிடம்: மிச்சிகன், அமெரிக்கா வேலை: அலுவலக மேலாளர் கவிதாயினி , எழுத்தாளர் , இதழாசிரியர், தன்னார்வல தமிழ் ஆசிரியர், நிகழ்வுத் தொகுப்பாளர்/தயாரிப்பாளர், கருத்தரங்கம் / கவியரங்கத் தலைமை, கட்டுரையாளர், பட்டிமன்ற பேச்சாளர்/நடுவர், கதை சொல்லி, ஒருங்கிணைப்பாளர்/நெறியாளர். கதம்பம், தென்றல், முத்துக்கமலம், வளரி, வல்லினச் சிறகுகள், இனிய உதயம், மக்கள் முரசு, தாரகை, நெல்லை டைம்ஸ், ஆனந்தச்சந்திரிகை, ஆக்கம், தமிழ்ப்பல்லவி, கொக்கரக்கோ, சித்திரகுப்தன், அன்புப்பாலம், காற்றுவெளி போன்ற இதழ்களில் எழுதிக்கொண்டிருக்கிறார். இவர், இதுவரை எழுதிய நூல்கள்: 21, தொகுத்த நூல்கள்: 17,  பங்கேற்ற தொகுப்பு நூல்கள்: 20 "சங்கப்புலவர் விருது", "தங்க மங்கை", "சொல்லின் செல்வி",  "பாரதியார் விருது",  "சமுதாயச்சிற்பி", "ஈரோடு தமிழன்பன் 80", "சிங்கப்பெண்", "முத்தமிழ்த்திலகம்", "உ.வே.சா. விருது", "உவமைக்கவிஞர் சுரதா விருது", "அருந்தமிழ் தாரகை", "நூலேணி தன்முனை இலக்கிய விருது" உள்ளிட்ட விருதுகளைப்பெற்றிருக்கிறார்.

You may also like

Leave a Comment