Home கவிதைஇறைவனின் இணையில்லாப் படைப்பு

இறைவன்
மலரின் நறுமணம் பிரித்து எடுத்தான்
மலைநேர் மரத்தின் மாண்பினைச் சேர்த்தான்
புலரிப் பனியின் மென்மை குழைத்தான்
புணரியினுள்ளிருந்த அமைதியினை அகழ்ந்தான்
அந்திப் பொழுதின் அழகை வார்த்தான்
ஆயிரம் விண்மீன் ஆன்மாவினை வடித்தான்
சிலிர்க்கும் ஓடையின் நகையினை இட்டான்
சிறகடிக்கும் புள்ளின் நளினம் கோர்த்தான்
இத்தனை எழிலினையும் ஒன்றாய்ப் பிணைத்து
இணையிலாக் கலையினை இறைவன் முடித்தான்;
முழுமை கண்ட அத்தலைசிறந்த படைப்பிற்கு
எளிமையாய் “அன்னை” எனப் பெயரிட்டான்!

Author

  • கவிஞர் நளினி சுந்தரராஜன் வட அமெரிக்காவில் வசிக்கிறார். தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளிலும் எழுதும் இவர், அமெரிக்காவில் தமிழ்ச்சங்கப்பேரவை, கவியரங்கங்கள் மற்றும் உலகத்திருக்குறள் மாநாட்டில் கவிதைகள் வாசித்திருக்கிறார். "Face in Face" இவரது முதல் மொழிபெயர்ப்பு நூல். "திக்குகளின் புதல்வியர், உறைபனி உதிர்த்த இறகு, வலசை சென்ற வண்ண மயில்கள்" ஆகிய தொகுப்பு நூல்களில் இவரது கவிதைகளும் இடம் பெற்றுள்ளன.

You may also like

Leave a Comment