Home கவிதைஅதற்கு வழியில்லை – சார்லஸ் புக்கோவ்ஸ்கி கவிதைகள் 3

அதற்கு வழியில்லை – சார்லஸ் புக்கோவ்ஸ்கி கவிதைகள் 3

by Ramalakshmi Rajan
0 comments

வெற்றி

எத்தனை ஒப்பந்தங்களை
நாங்கள் செய்தோமோ,
அவற்றை நாங்கள்
காத்து நின்றோம்.
இப்போது
காலத்தின் வேட்டை நாய்கள்
எங்களை நெருங்குகையில்,
எங்களிடமிருந்து
எதையும்
பறித்துவிட முடியாது—
எங்கள்
உயிர்களைத் தவிர.
*

ஆமாம்

தனியாக இருப்பதை விட
மோசமானவை இருக்கின்றன
ஆனால் அதை உணர
பல தசாப்தங்கள் ஆகிவிடுகின்றன
பெரும்பாலும்
அதை உணரும்போது
மிகவும் தாமதமாகி விடுகிறது
‘மிகவும் தாமதமாகி விட்டது’
என்பதை விட
மோசமானது
வேறொன்றுமில்லை.
*

அதற்கு வழியில்லை

இதயத்தில் ஒரு இடம் இருக்கிறது
என்றைக்கும் நிரம்பாத இடம்

ஒரு வெற்றிடம்

மிகச் சிறந்த தருணங்களிலும்
மிக உயர்ந்த காலங்களிலும்

நாம் அதை அறிவோம்

நாம் அதை அறிவோம்
முன் எப்போதையும் விட
அதிகமாக

இதயத்தில் ஒரு இடம் இருக்கிறது
என்றைக்கும் நிரம்பாத இடம்

நாம் காத்திருப்போம்
காத்துக்கொண்டேயிருப்போம்

அந்த வெற்றிடத்தில்.
*

மூலம்: 1. Victory; 2. Oh Yes; 3. No help for that
By Charles Bukowski

தமிழாக்கம்: ராமலக்ஷ்மி

*

சார்லஸ் புக்கோவ்ஸ்கி  (1920 – 1994):

இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த அமெரிக்கக் கவிஞர் எனக் கொண்டாடப்படுபவர் ஹென்றி சார்லஸ் புக்கோவ்ஸ்கி. ஆயிரக்கணக்கான கவிதைகள், நூற்றுக்கணக்கான சிறுகதைகள், ஆறு நாவல்கள் ஆகிய யாவும் சுமார் அறுபதுக்கும் மேலான புத்தகங்களாக வெளியாகியுள்ளன. ஜெர்மனியில் பிறந்தவர். தந்தை அமெரிக்கர். தாய் ஜெர்மானியர். இவரது சிறுவயதில் பெற்றோர் அமெரிக்காவில் குடி புகவும், அமெரிக்கராகவே வளர்ந்தார். புக்கோவ்ஸ்கியின் எழுத்துக்களும் இவர் வாழ்ந்த லாஸ் ஏஞ்சல்ஸின் சமூக, கலாச்சார, பொருளாதார நிலைமைகளைப் பிரதிபலிப்பதாகவே உள்ளன. 

**

Series Navigation<< மாபெரும் தப்பிப்பு – சார்லஸ் புக்கோவ்ஸ்கி

Author

  • Ramalakshmi Rajan

    ராமலக்ஷ்மி :
    எழுத்தாளர், கவிஞர், ஒளிப்படக் கலைஞர். பெங்களூரில் வசிக்கிறார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை மற்றும் ஆய்வு நிறைஞர் பட்டங்கள் பெற்றவர். சொந்த ஊர் நெல்லை. தனது வலைப்பூ மற்றும் இணைய இதழ்கள், சிற்றிதழ்கள், பத்திரிகைகளில் எழுதி வருகிறார். சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை, நூல் விமர்சனம், ஒளிப்படம் ஆகிய பல தளங்களில் இயங்கி வருகிறார்.

    இவரது ‘இலைகள் பழுக்காத உலகம்’ கவிதைத் தொகுப்பு, ‘மு.ஜீவானந்தம்’ இலக்கியப் பரிசையும், ‘தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்-நியூ செஞ்சரி புத்தக நிலைய' விருதையும் பெற்றுள்ளது. ‘அடை மழை’ சிறுகதைத் தொகுப்பு ‘திருப்பூர் அரிமா சக்தி’ விருதைப் பெற்றுள்ளது. இவர் எடுத்த ஒளிப்படங்களும் பல பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. அட்டை முகப்பிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

You may also like

Leave a Comment