விந்திய மலைத்தொடரின் சிகரங்களில் விடியற்காலையின் முதல் பொன்னிற ஒளி விழுந்தபோது, துங்கபத்திரை நதி தன் நீலத் தோள்களில் அந்த ஒளியை ஏந்திக்கொண்டு, சலசலத்துக்கொண்டு ஆக்ரோஷமாகப் பாறைகளுக்கிடையே நெளிந்து ஓடிக்கொண்டிருந்தது. அந்தச் சலசலப்புகள் கிஷ்கிந்தைக்கு வர இருக்கும் துயரங்களுக்கான கிசுகிசுப்பைப் போன்று இருந்தன. …
இலக்கியம்
தனாபதா (たなばた) முன்னொரு காலத்தில் ஜப்பானியக் கிராமத்தில் ஒரு இளைஞன் வசித்து வந்தான். அவன் வயல்களில் வேலை செய்வான். ஒரு நாள் அவன் வயல்வெளியில் தன் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினான். வழியில் குளத்தின் கரையில் அழகிய ஆடை கிடந்தது. அது …
அடுத்தவரின் உழைப்பை அபகரித்தல் முரணே!தடுத்ததனை தவிர்ப்பதே தருமத்தின் முறையே!எடுக்கின்ற காரியத்தில் எதிர்வரும் தடைகள்முடுக்கிவிடும் திறனை முயற்சிக்கு முதற்கல்! உழைக்கின்ற சுயமும் உள்ளத்து உறுதியும்விழைகின்ற யாவிலும் வெற்றிக்கு வழியே!உடன் உழைப்போர்க்கும் வழியை விடு!உன் உழைப்பால் சிகரம் தொடு!
உலகத்து வெயிலெல்லாம் உம்மேலதான்’செல்லமாகக் கடிகிறாள் நல்லாச்சிநட்புகளுடன் விளையாடும் பேத்தியைஉச்சிப்பொழுதின் வெப்பம்வாட்டுமென்ற அக்கறையில்கலந்தாலோசித்த பட்டாளம்திருவிழா விளையாட்டைத் தேர்கிறதுஅறங்காவலராக்குகிறது நல்லாச்சியை செங்கற்களே மூர்த்தங்களாய்அகப்பட்ட பூக்களே தோரணங்களாய்வடிவெடுக்கிறது சப்பரம்பூஜைப்பொருட்கள் ஒருவன் உபயம்நைவேத்யம் ஒருத்தி கொணர்கிறாள்காற்றில் ஒருவன் கொட்டுமுழக்கதாத்தாவின் கைத்தடி நாகஸ்வரமாகிறதுஏதும் கொணராத ஒருத்தியைவிலக்குகிறது கூட்டம் பதைக்கிறாள் …
“ஏஞ்சலினா பாடிக்கொண்டிருந்தாள்… “மேய்ப்பன் அவனே, ஆடுகள் எல்லாம் குழந்தை வடிவத்தில். மன்னவன் அவனே, மக்கள் எல்லாம் மழலை வடிவத்தில்”. நானும், என் தம்பியும், மனைவியும் கேட்டுக்கொண்டிருந்தோம்.. அப்போது எங்களுக்குத் தமிழ் தெரியாது.. போனது ஜான் பெர்ணான்டஸின் வீடு… ஏஞ்சலினா குரல் இனிமையில் …
காக்கம்மா கிளியம்மா ஒரு புளியமரத்தில் காக்கம்மாவும் கிளியம்மாவும் இருந்தன. காக்கம்மாவுடையது கூடு. கிளியம்மாவுடையது வீடு. ஒருநாள் இராத்திரி பலத்தச் சூறாவளி காற்றும் மழையுமாக இருந்தது. அதில் அந்தக் காக்கம்மாவின் கூடு கொஞ்சம் பறந்துபோனது. கிளியம்மாவுடையது வீடு இல்லையா… அதற்கு எதுவும் ஆகவில்லை. …
சின்னது, நடுத்தர அளவு, பெரியது எனக் கலந்துகட்டி இருக்கும் உருளைக்கிழங்கு மூட்டையை டபக்கெனத் திறந்து உருட்டி விட்டாற்போலச் சின்னப் பையன்கள், பெண்கள், கொஞ்சம் வளர்ந்தவர்கள், கொஞ்சம் உயரமானவர்கள் என மாணவ மாணவிகள் பள்ளிக்கூடத்தில் பரவி இருந்தார்கள். என்ன… நோ யூனிஃபார்ம். ஏனெனில் …
சாளரத்தைத் திறந்தவள்சன்னமாய்ச் சிரித்தாள்காத்திருப்பின் ரகசியம்காற்றில் கலந்த கணம் உள்ளக் கிளர்ச்சி எல்லாம்ஊர்வலமாய்ப் போகுதுவெள்ளம் திரண்டது போல்வெகுளித்தனம் மீறுது கள்ளத்தனம் எல்லாம்காணாமல் போனதுகரை கடந்த அன்பு இங்கேகரம் கோர்க்கப் பார்க்குது ஒற்றை மலர் தனியேஒய்யாரமாய் நின்றதுஎட்டிப் பார்த்த அவளைஏறெடுத்துப் பார்த்தது சாய்வது போல் …
அம்மா இறந்த செய்தி வந்தபோது நான் அடித்துப் பிடித்து ஊருக்கு ஓடவில்லை. அம்மாவின் இறப்பு என்பது நகரத்தில் இருக்கும் எனக்கு ஒரு தகவலாக மட்டுமே வந்ததால் அது என்னைப் பாதிக்கவில்லை. ஆனால், பஸ்ஸிலிருந்து இறங்கி, வீட்டின் வாசலில் காலை வைத்த தருணத்தில்தான், …
“நான் ஜெயிலுக்குப் போறேன், நா ஜெயிலுக்குப் போறேன்” என வடிவேலு ரவுடியாக ஃபார்ம் ஆன மாதிரி, நான் முதல் நாள் இரவிலிருந்தே வீட்டில் சொல்ல ஆரம்பித்துவிட்டேன். “நான் நாளைக்கு வெளியில் போறேன், நான் நாளைக்கு வெளிய போறேன், நாள் முழுவதும் எனக்காகவே …