தமிழாக்கம்: நளினி சுந்தரராஜன் அதிசயத்தைப் பற்றி யார் பெரிதாகப் பேசுகிறார்கள்?அதிசயங்களைத் தவிர வேறொன்றும் எனக்குத் தெரியாது, நான் மன்ஹாட்டன் வீதிகளில்நடந்தாலும் சரி, அல்லது வீடுகளின் கூரைகளுக்குமேல் விண் நோக்கிபார்வையைச் செலுத்தினாலும் சரி, அல்லது கடற்கரை ஓரத்தில்வெற்றுக் கால்களுடன்நீரின் விளிம்பில் நடந்தாலும் சரி, …
இலக்கியம்
ரம்மியமான சாகுந்தலம்! – மகாகவி காளிதாசர்!
பண்புடன் மின்னிதழில் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழாக மொழிபெயர்ப்புச் சிறப்பிதழ் வர இருப்பதாகவும் அதில் பிற மொழியில் உள்ள சிறப்பான படைப்புகளை பகிர்ந்து கொள்ளலாம் என்றும் வாசித்ததும் என் மனதில் சட்டென்று தோன்றியது ஒரு காவியம்! அது தான் மகாகவி காளிதாசரால் இயற்றப்பட்ட …
தோல்பாவைக்கூத்து தெருக்கூத்துஇரண்டும் வந்திருக்கின்றன கிராமத்திற்குஊர்த்திருவிழாவை முன்னிட்டுதெய்வங்களும் கொஞ்சம்உற்சாகமடைந்து புத்துணர்வு கொள்கின்றன நல்லாச்சியும் பேத்தியும்தினம் ரசிக்கின்றனர் இரு கூத்துகளையும்அர்ச்சுனன் தபசையும், நள தமயந்தியையும்அரிச்சந்திரனையும் பாஞ்சாலி சபதத்தையும்நல்லாச்சி சொன்ன இன்னபிற கதைகளையும்கூத்துவடிவில் பார்த்த பேத்திராஜாக்களையும் ராணிகளையும்பளபளக்கும் அரசவாழ்வையும்நிஜமெனவே நம்பத்தொடங்குகிறாள்இரவிலும் பகலிலும் வெவ்வேறாய்ச் சுழல்வதுஅவர்கள் உலகம் …
கடல் அரக்கன், தேவதைப்பூ – இரு கதைகள்
கடல் அரக்கன் மூலம்: ஆபி ஃபிலிப்ஸ் வாக்கர் மொழியாக்கம்: சரவணன் பார்த்தசாரதி கடலுக்கு நடுவே ஒரு தீவு இருந்தது. முழுக்க பாறைகளாலான அந்தத் தீவில் ட்ராகன் போன்ற தோற்றத்தில் ஓர் அரக்கன் வாழ்ந்து வந்தான். பெரிய தலையுடன் பாம்பு போன்ற தோற்றத்தில் …
இரு கவிதைகள் – டு ஃபு
போர் ரதங்களின் பாடல் மூலம்: ”Ballad of the Army Carts” by Du Fuஆங்கிலத்தில்: David Lundeஆங்கிலத்திலிருந்து தமிழில்: ராமலஷ்மி ரதங்கள் உருளுகின்றன,கடகடவென அதிர்கின்றன.குதிரைகள் கனைக்கின்றன,சீற்றத்துடன் மூச்சு விடுகின்றன.படைவீரர்கள் இடுப்பில் வில்லும் அம்பும் கட்டிஅணிவகுத்துச் செல்கின்றனர்.தந்தைமார், தாய்மார்,மனைவியர் மற்றும் குழந்தைகள்அவர்களை …
மல்லிகா அமர்ஷேக் கவிதைகள் : மராத்தி.
தமிழாக்கம் : புதியமாதவி வீடு திரும்பும் மனிதர்கள் தோல்வியுற்ற படைவீரர்கள்தங்கள் முகாம்களுக்குதிரும்புவது போலமனிதர்கள்தங்கள் வீடுகளுக்குத் திரும்புகிறார்கள். பெண்கள்வீடுகளை அடைகாக்கிறார்கள். கூர்மையான அறிவுடன் இருந்தகுழந்தைகள் கூடபின்னர்ஈசாப்* போல அடிமையாகிவிடுகிறார்கள்.அனுசரித்துப் போகும் பழக்கத்தின்நஞ்சுக்கொடியைச் சுமந்துசங்கிலிபோல சுழன்றுஸ்தம்பித்துவிடுகிறார்கள்.ஓவ்வொருவரும்அவரவருக்கான தனிப்பட்டதுயரங்களின் மடியில்சத்தமின்றித் தூங்கிப்போகிறார்கள். வீடுகள் பின் வீடுகள்நகரங்கள் …
வரலாற்றில் மறைக்கப்பட்ட பெண் போராளி – மதுமிதா
தாய்வழிச் சமூகமாக இருந்த பெண்ணின் நிலை மாறி எவ்விதம் அவளிடமிருந்து உரிமை பறிக்கப்பட்டது, தந்தை வழி சமூகமாகி பண்டமாக அவள் பார்க்கப்பட்ட விதம் குறித்து ராகுல சாங்கிருத்தியாயன், கிமு 6000-த்தில் ஆரம்பித்து விரிவாகச் சொல்லப்பட்டு கிபி 1942 ஆம் ஆண்டில் முடியும் …
பனிவிழும் வனங்களிடை நிதானித்தபோது – ராபர்ட் ஃப்ராஸ்ட் கவிதை
தமிழாக்கம்: பவளமணி பிரகாசம் யாருடைய வனங்களிவையென நானறிவேன்அவன் வீடிருப்பதோ கிராமத்தினிலேஅவன் வனங்கள் பனியால் நிரம்புவதைநான் நின்று ரசிப்பதை அவன் அறியமாட்டான் ஆண்டின் மிக இருண்ட மாலைப்பொழுதில்வனங்களுக்கும் உறைந்த ஏரிக்கும் இடையில்பண்ணைவீடொன்றும் அருகில் இல்லாமல் நின்றதேன்என்றெனது சின்னக்குதிரை வியக்குது சுகமாய் உலாவும் காற்றும் …
சவத்துணி – ‘கஃபன்’ – முன்ஷி ப்ரேம்சந்த்
தமிழாக்கம்: அபுல் கலாம் ஆசாத் பாகம் (1) குடிசையின் வாசலில் தகப்பனும் மகனும் அமைதியாக அமர்ந்திருந்தனர். அவர்களின் முன்னே குளிர்காய்வதற்காக எரிக்கப்பட்ட விறகுக்கரி கிடந்தது. குடிசையின் உள்ளே மகனின் இளம் மனைவி புதியா பிரசவ வலியால் துடித்துக்கொண்டிருந்தாள். அவள் துடித்து எழுப்பிய …
சிறார் இலக்கியம் – மொழிபெயர்ப்பு: கடைசி ஆசை (ஆப்பிரிக்க நாட்டுப்புறக்கதை)
ஆங்கிலத்திலிருந்து தமிழில்: ஞா.கலையரசி முன்னொரு காலத்தில் ஓர் அரசர் இருந்தார். வெவ்வேறு பகுதிகளிலிருந்து புலவர்களும், இசைக் கலைஞர்களும், எழுத்தாளர்களும் அவரைப் பார்க்க வந்தார்கள். அவர்களுடைய கதைகளைக் கேட்பதும், பாடல்களை ரசிப்பதும் அவருக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு. எல்லோரையும் விட மகமூத் என்பவரை …