நின்ற கால்கள் நின்றபடி இருக்க, அந்தப் பெரியவரை நோக்கிச் சென்ற கண்களின் பார்வை திரும்பாமலே இருக்க… கொஞ்சம் சிரமப்பட்டுப் பார்வையைத் திருப்பி, மறுபடி அவரைப் பார்த்தான் சுல்தான் மாலிக் ஏஜாஸ். தீர்க்கமான, சாந்தமான கண்கள். வயதான உடல். ஆனால் தேஜஸ்… உடலில் …
நாவல்
இருசியமுக மலை உச்சியில் இருந்த குகைக்குள் இருந்த சுக்ரீவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. உளவறியச் சென்ற அனுமன் இன்னும் வரவில்லை. ஏற்கனவே ஒற்றர்கள் சொல்லியிருந்த செய்தி அவன் மனதை அரித்துக்கொண்டிருந்தது. இரு மானிடர்கள் பெரும் வில்லுடன் இருசியமுக மலையைத் தேடி வந்துகொண்டிருந்த செய்திதான் …
வெள்ளிக்கிழமை காலை. அர்ஜுன் சரியாகத் தூங்கவில்லை. கண்கள் சிவந்திருந்தன. முகச்சவரம் செய்யும்போதே கை லேசாக நடுங்கியது. நேற்றிரவு சுசிக்குத் தெரியாமல் அந்த எண்ணிற்குப் பதில் அளிக்க முயன்றான். ஏதும் போகவில்லை. மீனாவின் பழைய எண்ணிற்கே செய்தி அனுப்பினான்: “பிரிகேட் ரோட், டீ …
தேநீர்க் கோப்பையிலிருந்து எழுந்த சூடான ஆவி அர்ஜுனின் முகத்தில் பட்டது. சுசி அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் கண்கள் அவனை ஆராய்ந்துகொண்டிருந்தன. அதை விலக்கத் தன் தலையைத் திருப்பிய அர்ஜுனின் பார்வை, தற்செயலாக மேசையின் மீதிருந்த கணிப்பொறியின் திறந்த திரையை நோக்கி நகர்ந்தது. …
“கல்யாணம் ஆகாத இளம் பெண்களுக்கும் கல்யாணம் ஆகிப் பல வருடம் ஆன பெண்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. தெரியுமா ஜபீன்…?” கேட்டவன் சுல்தான் ஏஜாஸ் மாலிக். இடம் அந்தப்புரம் ஹரேம். கேட்டது மனைவி ஜபீன் மெஹருன்னிஸாவை. “என்ன, நிறைய வாய் பேசுவோமாக்கும்?” …
பம்பா நதிக்கரையின் அந்தச் செந்நிறப் பாறை இடுக்குகளில் அந்திப் பொழுது ஒரு மர்மமான நிழலைப் படரவிட்டிருந்தது. நதி நீரின் சலசலப்பு ஏதோ ஒரு எச்சரிக்கையைச் சொல்வது போலத் துரிதப்பட்டது. தூரத்தில் இருந்து அந்த வேடுவ இளைஞனை உற்று நோக்கிய இலக்குவனின் கண்களில் …
அர்ஜுனுக்கு வயது நாற்பத்திரண்டு. போன மாதம்தான் முடிந்தது. பெரிய கொண்டாட்டமெல்லாம் இல்லை. அவனது நாட்காட்டியில் அது வெறும் ஒரு வேலைக்குறிப்பு மட்டும்தான். ‘வழக்கமான சுயபரிசோதனை, முப்பது நிமிடங்கள்’ என்றிருக்கும். பின் அதை முடிந்தது என்று குறியிட்டுவிட்டு அடுத்த வேலைக்கு நகர்ந்துவிடுவான். அவன் …
”முகத்தைப் பார்க்க முடியாது.. விழிகளைப் பார்த்தேன்.. கிடுகிடுவென என் இதயத்தைத் துளைத்தது.. யாருக்கும் வசப்படாத ஹிருதயம் என்னுடையது.. எதிரிகளுக்கு வாளால் பேசும்.. நண்பர்களைக் கௌரவிக்கும்.. ஆனால்… ஆனால் இவளது பார்வை.. பின் கைகளை மறைக்கவில்லையே அவள்.. என்ன அழகான ஓவியம் ஹென்னா …
மதங்கமுனியின் ஆசிரமம் சற்றே காலத்தில் உறைந்து நின்றது போல இருந்தது. சபரியின் மரணம் குறித்த செய்தி சுற்றி இருந்தவர்களுக்குத் தெரிந்து அங்கே குழும ஆரம்பித்திருந்தார்கள். இராமன் கலங்கி நின்றான். சற்று முன்பு வரை தாய் அன்பின் ஊற்றாக நின்ற ஒரு மூதாட்டி, …
“ஆஹா. விழிகள் மையேந்தி ஆட, என் குழலில் இருக்கும் மலர்கள் ஆட, என் கைவளைகளும் ஆட இவர் முன்னால் ஆடவேண்டும் என்று தோன்றுகிறதடி சித்ரா… என்ன அழகு… வெண்ணிலா முகம் என்றால் வெண்ணிலவுக்குக் களங்கம் இருக்கும்..இவரழகு என்ன அழகடி இவளே…” “ஆமாம் …