மாலை சூரியன், இராவணன் தன் தோல்வியின் கோபத்தால் தன்னைச் சுட்டெரிக்கக்கூடும் என அஞ்சி மேற்கு மலைத் தொடர்களின் பின்னே ஒளியத் தொடங்கினான். அப்படி ஒளிந்து கொண்ட பின்பும், மண்டோதரியின் துயரநிலை அறிந்து அவள் இனி என்ன செய்யப் போகிறாள் என்பதைக் கவனிக்க …
அசுரவதம்
அசோகவனத்தின் அந்த நீண்ட இருளின் பின்னிருந்த சூர்ப்பனகையின் கண்கள் இராவணனை வெறித்து நோக்கின. இப்போது அவள் கண்களில் தெரிவது அவள் பழிவாங்கும் நோக்கத்தின் வெற்றியா? இல்லை மாபெரும் சக்கரவர்த்தி தன் நிலையிழந்து தள்ளாடித் தள்ளாடிச் செல்வதும், அப்படிச் செல்பவன் தன் அண்ணன் …
“அன்னையே, இதோ வருகிறேன்” என்று அவன் விண்ணில் தாவிய வேகத்தில் உடல் மேலே எழும்ப எழும்ப, அவனுக்குள் ஒரு விசித்திரமான மாற்றம் நிகழ்ந்துகொண்டிருந்தது. ஒரு குரங்கின் இயல்பு என்பது எந்நேரமும் சலனப்பட்டுக்கொண்டே இருப்பது. ஒரு கிளையிலிருந்து இன்னொரு கிளைக்குத் தாவுவது உடலின் …
காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை; இரக்கப்படுவதுமில்லை. காலம், எந்த உணர்வுகளும் தங்காத வெற்றிடத்தின் ஊற்று. அது தன் மாபெரும் சதுரங்க விளையாட்டை ஒரு கொலைவாளின் தன்மையோடு இரக்கமின்றியே ஆடி முடிக்கிறது. விதியின் முன் எப்பேர்ப்பட்ட சக்கரவர்த்தியும் ஒரு சாதாரண பகடைக்காய் மட்டுமே. படைத்தவனே …
காலத்தின் அத்தனைச் செயல்களையும் கண்டு அதற்கு ஒரே சாட்சி நான் என்பது போல நின்றிருந்தது அந்தக் நீலப் பெருங்கடல். அதன் கரையில், பற்பல யுகங்களின் அழுத்தம் தாங்கிய மகேந்திர மலையின் உச்சி முகட்டில் அனுமன் அமர்ந்திருந்தான். சாம்பவானை விட்டு நீங்கிச் சென்ற …
பரத கண்டத்தின் தென்திசை. மாபெரும் நிலப்பரப்பின் தென்கோடி எல்லை அது. பிரபஞ்சத்தின் மார்பில் வரையப்பட்ட ஒரு பிரம்மாண்டமான நாட்டிற்கான வரைபடம் பரதகண்டம் என்றால், அதன் இரும்புக் கோட்டையைப் போல எழுந்து நின்றது மகேந்திர மலை. பல யுகங்களாகக் கடல் அலைகளின் ஓயாத …
“வணக்கம் தாயே” என்ற குரல் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பினாள் சீதை. பாலைவனத்தின் அனல் காற்றில் திடீரென வீசிய வசந்தகாலத் தென்றலைப் போல ஒலித்தது அந்தக் குரல். சீதையின் முன் ஓர் அரக்கி வினோதமாக வணங்கியபடி தலைதாழ்த்தி நின்றிருந்தாள். அவளின் வளைந்த முதுகின் …
அசோகவனம், உலக ரம்மியங்களை ஒன்று திரட்டிச் சுருக்கி வைத்தால் எத்தனை அழகாக இருக்குமோ அத்தனை அழகையும் தன்னுள் கொண்டிருக்கும் ஒரு வனச்சோலை. இராவணனின் மாபெரும் ரசனைக்கு அதுவே சாட்சி. வசந்த காலம் நிரந்தரமாகக் குடிகொண்டிருக்கும் நந்தவனம் அது. பொன்னும் நவரத்தினங்களும் பதிக்கப்பட்ட …
கர்ணன் மாவீரனா? மாவீரன் என்றால் ஏதோ சில தருணங்களில் மட்டும் வித்தைகளை வெளிப்படுத்துவது அல்லது வீரம் காட்டுவது என்று பொருளல்ல. ஒருவன் மாவீரன் என்பதற்கு அளவுகோல் அவனது நிலைத்தன்மை (ஆங்கிலத்தில் Consistency). சினிமாக்களில் ஆரம்பத்தில் வலிமையாக வில்லன் இருந்தாலும், கதாநாயகன் எப்படி …
சீதையைக் காப்பாற்றும் தந்திரங்களைக் குறித்துச் சூர்ப்பனகை யோசிக்கையில், கிஷ்கிந்தையில் மாபெரும் மாற்றம் நிகழ்ந்து கொண்டிருந்தது. பொழுது விடிந்தது. கிஷ்கிந்தைப் பள்ளத்தாக்கு ஒரு மாபெரும் வானரக் கடலென உருமாறியிருந்தது. தாரையின் சொற்கள் பொய்க்கவில்லை. விந்திய மலை, மேரு சிகரம், கிழக்குக் கடற்கரை… எல்லாத் …