Home கவிதைதிருவை மு.இரா. கவிதைகள் – 4

திருவை மு.இரா. கவிதைகள் – 4

0 comments

பார்க்கும் எல்லாமுமாக வாழ்ந்துவிட ஆசை
குறைந்த ஆயுளில் நிறைந்த வாழ்வை விரும்பி
கடைக்கோடி ஜீவி வரை வாழ்ந்திட ஆசை
எவ்வுயிராக ஏதாக எனும் குழப்பத்தில்
பச்சோந்தியாக எனில்
பாவம் உயிர்வாழ நிறம்மாறும் அதற்கும்
மனிதர்களால் அவப்பெயர்
நாயாக எனில்
உண்மையிலேயே அதன் வாழ்வு
‘நாய் படும் பாடாக’ உள்ளது
மழையாக எனில்
அனைவரும் வேண்டும் மழையாகவா
வெறுக்கும் மழையாகவா
மரமாக எனில்
அடைக்கலம் தரும் நிழலுக்காகவா
வீட்டில் கதவு ஜன்னல்களாய் அமையவா
மலையாக எனில்
பல்லுயிர்ப் பெருக்கும் தாயாகவா
கல்லுக்காக உடைபடவா
நதியாக எனில்
விளைச்சலைத் தந்திடும் ஜீவனாகவா
கழிவுகள் சுமந்திடும் பழிபாவங்கள் போக்கிடும்
சகதி சாக்கடையாகவா
எதுவாயினும் சரி மனிதர்கள் அற்ற உலகில்
வாழ்ந்திட வேண்டும்
நித்திய அமைதியோடு சுகமாக..

Series Navigation<< திருவை மு.இரா. கவிதைகள் -3

Author

  • மு.இராமர் மாசானம் என்ற இயற்பெயருடைய இவரது சொந்த ஊர் திருநெல்வேலி. தற்போது ஆந்திர மாநிலம் குப்பத்தில் இருக்கிற 'திராவிடன் பல்கலைக் கழகம்' இல் முனைவர்பட்ட ஆய்வாளராக உள்ளார். 'ஒப்பாய்வு நோக்கில் ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் கீர்த்தனைகளும் பக்த இராமதாசு கீர்த்தனைகளும்' எனும் தலைப்பில் ஒப்பிலக்கிய ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மைசூரில் இருக்கிற இந்திய மொழிகள் நடுவண் நிறுவனத்தில் (CIIL) தெலு(ங்)கு மொழியில் பத்து மாதகால பட்டய வகுப்பு முடித்திருக்கிறார். அதன் வெளிப்பாடாக தெலுங்கில் டாக்டர். எம். ஹரிகிஷன் அவர்கள் எழுதிய தெலு(ங்)கு நாட்டுப்புறக் கதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து வருகிறார்.

You may also like

Leave a Comment