வர்ணம் மாறிய வரைபடம்

காலத் தூரிகைத்
துடைத்துச் சென்ற
பக்கங்கள் யாவிலும்
அழுத்திப்பிடித்த கறைகள்
புரட்டி எடுக்கும்
நினைவின் அசைவில்
வெளிப் பரவும் வண்ணத்துகள்கள்
அலைவரிசையை நிறைத்துவிட்ட
அலப்பறையில்
படபடக்கும்
பக்கங்கள்
அத்துணையிலும்
புதுப்புது கலவைகளால்
தோய்த்து வைக்குமொரு
மாயம் நிகழும்
ஒன்று
கூடி
ஒன்று
குறைந்து
கலந்து திரிந்து
வர்ணம் மாறிய
வரைபடமென வாழ்க்கை
நின்றிருக்க
நிதானிக்க
நகர்ந்து செல்ல
தேவையாய் இருக்கிறது..
அன்னியப்படுதல் எனும் விதி.

Author

Related posts

தமிழகக்கல்விச்சூழல்: சவால்களும்தீர்வுகளும்

நன்னீருக்காகப் பலியாகும் உயிர்கள்

ஆரோக்கியமே உண்மையான அழகு