வெறும் தமிழ் இலக்கணக் குறிப்புகளை மட்டுமே எழுதிச் செல்லாமல், இத்தலைப்பின் கீழ் பொதுவான ஆக்கங்களைத் தரும் ஒரு முயற்சி.
சமயோசிதம் (Presence of mind) எனப்படும் மதிக்கூர்மை தக்க நேரத்தில் வெளிப்படுவது கவிஞர்/புலவர்களின் தனிச்சிறப்புகளுள் ஒன்று. அவர்களின் அம்பறாத்தூணியிலிருந்து சொற்கள் அம்புகளைப் போன்று எடுக்க எடுக்க வந்துகொண்டே இருக்கும். எந்தச் சூழலையும் வெல்லத் தெரிந்த சொலல்வல்லோர் ஆவாரவர். சான்றாக, எட்டயபுரம் அரசவையில் …