தொகுத்தளித்தவர்: கே.ஏ.ஜெயசீலன் (1940-) தமிழாக்கம்: கார்த்திகைப்பாண்டியன் கவிதை எழுதியவாறு நதிக்கரையில் அமர்ந்திருந்தேன். டைலன் தாமஸின் தொனியைப் பிடிப்பதற்காகக் கவிதையின் ஒவ்வொரு வரியையும் உரக்க வாசித்துத் திருத்தியும் மாற்றியும் எழுதிக் கொண்டிருந்தேன். நதியிலிருந்து மூன்று மீன்கள் நீரை விட்டு வெளியே துள்ளிச் சுடுமணலில் …
இலக்கியம்
பானு முஷ்டாக்கின் ”ஹார்ட் லேம்ப் – தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள்” – நூல் விமர்சனம்
கார்த்திகா வாசுதேவன் கன்னடத்தில் ”இதய ஹனதே” தமிழில் ”இதய விளக்கு” பானு முஷ்டாக்கின் “ஹார்ட் லேம்ப் மற்றும் இதர கதைகள்” சிறுகதைத் தொகுப்பு கடந்த 2025 ஆம் ஆண்டுக்கான சர்வதேச புக்கர் பரிசு வென்றிருக்கிறது. இதை தீபா பஸ்தி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். …
டாக்டர் விளையாட்டு – நூரா அமீன் (எகிப்து)
தமிழில் – எம். ரிஷான் ஷெரீப் “நாங்கள் டாக்டர் விளையாட்டை விளையாடுவோம்.” ஆல்யாவும், அவளுடைய தங்கையும், அயல்வீட்டாரின் மகளும் என்னோடு சேர்ந்து விளையாடும் அந்தக் கோடையின் நாட்களில் ஆல்யா அப்படித்தான் கத்துவாள். அந்தக் குழுவின் தலைவியாக ஆல்யாவே இருந்தாள். நாங்கள் எப்போது …
சவத்துணி – ‘கஃபன்’ – முன்ஷி ப்ரேம்சந்த்
தமிழாக்கம்: அபுல் கலாம் ஆசாத் பாகம் (1) குடிசையின் வாசலில் தகப்பனும் மகனும் அமைதியாக அமர்ந்திருந்தனர். அவர்களின் முன்னே குளிர்காய்வதற்காக எரிக்கப்பட்ட விறகுக்கரி கிடந்தது. குடிசையின் உள்ளே மகனின் இளம் மனைவி புதியா பிரசவ வலியால் துடித்துக்கொண்டிருந்தாள். அவள் துடித்து எழுப்பிய …
ரம்மியமான சாகுந்தலம்! – மகாகவி காளிதாசர்!
பண்புடன் மின்னிதழில் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழாக மொழிபெயர்ப்புச் சிறப்பிதழ் வர இருப்பதாகவும் அதில் பிற மொழியில் உள்ள சிறப்பான படைப்புகளை பகிர்ந்து கொள்ளலாம் என்றும் வாசித்ததும் என் மனதில் சட்டென்று தோன்றியது ஒரு காவியம்! அது தான் மகாகவி காளிதாசரால் இயற்றப்பட்ட …
பிணவறையில் உறங்குகின்றவர்கள் – பாபு பரத்வாஜ் (மலையாளம்)
பிரவாசிகளுடே குறிப்புகள் சிறுகதைத் தொகுப்பிலிருந்து.. தமிழாக்கம்: யாழினி சென்ஷி காணாமல் போன எனது நண்பனை தேடிக்கொண்டிருக்கும் போதுதான் நான் மருத்துவமனையில் சவக்கிடங்கில் இருக்கும் அநாதைப் பிணங்கள் பற்றியும் தெரிந்து கொண்டேன். அதுவரை புத்தகங்களில் வாசித்து அறிந்தது என்னமோ ஆத்மாக்கள் தன்னை உரித்துவிட்டு …
மல்லிகா அமர்ஷேக் கவிதைகள் : மராத்தி.
தமிழாக்கம் : புதியமாதவி வீடு திரும்பும் மனிதர்கள் தோல்வியுற்ற படைவீரர்கள்தங்கள் முகாம்களுக்குதிரும்புவது போலமனிதர்கள்தங்கள் வீடுகளுக்குத் திரும்புகிறார்கள். பெண்கள்வீடுகளை அடைகாக்கிறார்கள். கூர்மையான அறிவுடன் இருந்தகுழந்தைகள் கூடபின்னர்ஈசாப்* போல அடிமையாகிவிடுகிறார்கள்.அனுசரித்துப் போகும் பழக்கத்தின்நஞ்சுக்கொடியைச் சுமந்துசங்கிலிபோல சுழன்றுஸ்தம்பித்துவிடுகிறார்கள்.ஓவ்வொருவரும்அவரவருக்கான தனிப்பட்டதுயரங்களின் மடியில்சத்தமின்றித் தூங்கிப்போகிறார்கள். வீடுகள் பின் வீடுகள்நகரங்கள் …
குறுங்கவிதை – ஒமர் எல் அக்கட்
தமிழாக்கம்: சுரேஷ் பாபு ஒரு நாள்,போர்க்கவலைகள் இல்லாத பொழுதில்,உண்மையைச் சொன்னால் பாதிப்புகள் இராத பொழுதில்,தண்டிக்கப்படவேண்டியவர்கள் தப்பிவிட்ட பொழுதில்,எல்லாருமே எந்நேரமுமேஅநியாயத்துக்கு எதிராகஇருந்தவர்களாகத்தான் இருப்பார்கள்.
பனிவிழும் வனங்களிடை நிதானித்தபோது – ராபர்ட் ஃப்ராஸ்ட் கவிதை
தமிழாக்கம்: பவளமணி பிரகாசம் யாருடைய வனங்களிவையென நானறிவேன்அவன் வீடிருப்பதோ கிராமத்தினிலேஅவன் வனங்கள் பனியால் நிரம்புவதைநான் நின்று ரசிப்பதை அவன் அறியமாட்டான் ஆண்டின் மிக இருண்ட மாலைப்பொழுதில்வனங்களுக்கும் உறைந்த ஏரிக்கும் இடையில்பண்ணைவீடொன்றும் அருகில் இல்லாமல் நின்றதேன்என்றெனது சின்னக்குதிரை வியக்குது சுகமாய் உலாவும் காற்றும் …
குறுங்கவிதை – மர்வான் மஃகூல்
தமிழாக்கம்: அனானி அரசியலற்றகவிதைஎழுதநான் பறவைகளைக்கவனிக்க வேண்டும்பறவைகளைக்கவனிக்கவேண்டுமென்றால்போர் விமானங்கள்அமைதியாக வேண்டும்.