உங்கள் வாழ்க்கை உங்களுடையதே-இருண்ட அடிமைத்தனத்திற்குள்அதை நசுங்க விடாதீர்கள். விழிப்புடன் இருங்கள்.வெளியேற வழிகள் உள்ளன.எங்கோ ஒரு ஒளி உள்ளது.அது பெரிய வெளிச்சமாக இல்லாதிருக்கலாம்.ஆயினும் அதுஇருளை வென்று கொண்டேயிருக்கும். விழிப்புடன் இருங்கள்.தெய்வங்கள்உங்களுக்கு வாய்ப்புகளை வழங்குவார்கள்.அவற்றை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். மரணத்தை உங்களால் …
இலக்கியம்
பெரியதாத்தா வரும் தினங்களில்இறக்கை கட்டிக் குதூகலிப்பாள் பேத்திவயலில் விளைந்தவையென கொண்டுவரும் மூட்டைக்குள்தோட்டத்தில் உதிர்ந்தவையெனஒன்றிரண்டு மயிற்பீலிகளும் இருப்பதுவும்ஒரு காரணம் ஆடலும்பாடலும் கதைசொல்லலுமாய்தாத்தாவின் தோளில் நிழலாய்த்தொற்றிநல்லாச்சியை மறந்து திரியும் பேத்திக்குஒரேயொரு குறைதான்தன் களித்தோழனிடம்கைவிரலிடுக்கில் புகையும் கடைசி விரல்தான் அதுஆருரைத்தும் கேட்காத அகந்தையைஅறிவுறுத்தி உடைக்க எண்ணுகிறாள் …
பல வருடங்களுக்கு முன்பு, மரபுக் கவிதை கற்றுவந்த புதிதில், ரியாத்தில் சவூதி அரேபியாவுக்கான இந்தியத் தூதராகத் தொண்டாற்றிய மறைந்த எம்.ஓ.ஹெச். ஃபாரூக் மரைக்காயர் இல்லத்தில் பாவேந்தர் நினைவேந்தல் நடைபெற்ற போது அதில் மரபுக்கவிதை அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தேன்.பொதுவாக, மனிதர்களைப் பற்றிப் பாடுவதில்லை …
‘கஜுராரே கஜுராரே’, பண்ட்டி ஔர் பப்லி என்னும் திரைப்படத்தில் ஒலித்த பிரபலமான களியாட்டப் பாடலில் சிருங்காரமும், காதலும், சீண்டலும் வெளிப்படும் வரிகள் திடீரென ரசிகனை மீர்ஸா காலிபிடம் அழைத்துச் செல்லும். திரைப் பாடல்களை மேலோட்டமாக ரசித்துக் கடந்து செல்பவருக்குப் புரியாமலும், மீர்ஸா …
ஊரின் எல்லாப் பகுதியிலும் தேடியாகிவிட்டது. தோப்புகள், ஒன்றைக் கூட விடவில்லை.. என்றும் ஆடுகள் மேய்வதற்குச் செல்லும் புல்வெளிகளையும் விடவில்லை.. அலைந்து திரிந்து இதோ இந்த மேடான இடத்திற்கு வந்தாகிவிட்டது.. சாம்பன் எங்கு சென்றிருப்பான்? கையிலிருந்த ஈட்டியை அருகில் வைத்துவிட்டு ஆசுவாசப்படுத்திக் கொள்ள …
சிக்கனமென்பது கிஞ்சித்துமில்லாமூத்தவனால் பெருங்கவலை நல்லாச்சிக்குகாசுபணமெல்லாம் தண்ணீர் பட்டபாடு அவனுக்குதண்ணீரையும் அவ்வாறே வாரியிறைப்பான்பிறரைப்பற்றிக் கவலை கொள்ளா அப்பெருஞ்செலவாளிநாளையைப் பற்றிச் சற்றும் எண்ணாதவனைஎண்ணியெண்ணி நாளும் உருகுகிறாள்‘எங்காலத்துக்குப் பொறவு என்ன கதியோ?!’ என மருகுகிறாள்பிள்ளையின்மேல் படியும் ஏளனப்பார்வைகளைசகியாத நல்லாச்சிபெரியப்பனுக்குப் பரிகிறாள் பேத்தி தாகங்கொண்ட வெய்யோன் அருந்தியதால்கோழிக்காலாய் …
‘பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்; இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்’ என்பது முண்டாசுக் கவி பாரதியின் கூற்று. அதன்படி, கடந்த 20 ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் எண்ணற்ற வடிவங்களையும் வகைமைகளையும் அயலிலிருந்து ஏற்றுக்கொண்டுள்ளது. சிறுகதை, …
1.எங்கும் வெயில்வெப்பச் சாலைகளில் நிசப்தம்நீளும் மதியம். 2.சுருங்கி மறையும் நிழல்கள்தலைக்கு மேல் நண்பகல்கனக்கும் அமைதி. 3.சுழலும் மின்விசிறிசோம்பல் முறிக்கும் வட்டங்கள்கரைகிறது நேரம். 4.பொன்னாக மாம்பழங்கள்பிசுபிசுக்கும் கைகள்ஒளியாக வழிகிறது இனிப்பு. 5.சூடான நிலம்வெற்றுப் பாதங்கள்ஓடுகிறது குழந்தைமை. 6.நெற்றியில் வியர்வைஉப்பு வெயிலின் சந்திப்புஉடலோடு ஒட்டும் …
இனி அதற்கு வாய்ப்பே இல்லை என்கிற கடைசித் தருணத்தில்தான் தற்கொலை செய்ய முடிவெடுத்தேன். இன்று காலைவரையிலும்கூட கொஞ்சம் நம்பிக்கை இருந்தது. எப்படியும் ஜீவா பேசிவிடுவான் என்றே இருந்தேன். கிடைத்த தகவல்கள் என் நம்பிக்கையைச் சிறிது சிறிதாக அரித்துத் தின்றுத் தீர்த்தன. இரண்டு …
1.பெண் எனும் பேனாஇறுகப் பிடித்திருந்தமுள் பேனாவின் முனையிலிருந்துவழியும் ரத்தத்துளிகள் மையாக மாறதனது வாழ்க்கைப் புத்தகத்தின்அத்தனை பக்கங்களிலும் எழுதுகிறாள்தனக்குப் பிடித்தமான வாழ்க்கையை. 2.காதல் பூக்கள்மொட்டாக முகையாக இருக்கும் போதேஅவசரம் கொள்ளாதீர்கள்.வீயாகிச் செம்மையாகும் வரையிலும்காத்திருக்கத் தேவையில்லை.அலராக மலராக இருக்கும்போதுபறித்துக்கொள்ளுங்கள்;கைகளுக்கு மட்டும் அல்லமனதிற்கும் அதனால் அழகு …