தமிழாக்கம்: ஆசிஃப் மீரான் கண்கள்அடைவதற்கும் முன்பேஅவசரப்பட்டுஉள்ளுக்குள்ஏறி வந்தது மேல்கூரையின்நட்சத்திரங்களைப் பார்த்துகை வீசியது பகல்சொல்லமுடியாதமனதில் ஒடுங்கியஒரு வார்த்தைகூட்டத்தில் அடையாளமென்பது போலமினுங்கி நின்றது படுக்கைக்கருகில்மஞ்சள் நாற்காலியில்கால் நீட்டிவழக்கமான இருப்பு விரல்கள்நெட்டி முறிக்கின்றனஒவ்வொரு நெட்டி ஒலியிலும்ஒரு நினைவுமணிநிலத்தில்வீழ்ந்து மறைகிறது மழலையாயிருந்த காலத்தில்என்னைப் பாலூட்டியநிசப்தம்மடியிலிருந்துஊர்ந்து இறங்கியது இடையில்ஒளிந்து …
இலக்கியம்
பொன்னந்தி – பி.பி. போர்க்கர்(மராத்தி)
தமிழாக்கம்: சாந்தி மாரியப்பன் குஞ்சுகள் சிறகை விரிக்கின்றனஎங்கெங்கோ உள்ளன அவற்றின் கூடுகள்நமது பொன்மாலைநேரம் இப்போதுபொன்னொளிரும் மேகவிதானங்களுடன் எத்தனை கவலைகள் இருப்பினும் போயினும்மென்வெய்யில் பரந்து விரிகிறதுஇருள் அடர்ந்து நிலவாகிஅமைதியாக மலர்கிறது நேற்றைய நினைவுகளை முழுமுற்றாய் மறந்துவாழும் இன்றைய நினைவுகளைச் சேமிப்போம்குழந்தைபோன்ற தூய மனதோடுஇன்னொரு …
டாக்டர் விளையாட்டு – நூரா அமீன் (எகிப்து)
தமிழில் – எம். ரிஷான் ஷெரீப் “நாங்கள் டாக்டர் விளையாட்டை விளையாடுவோம்.” ஆல்யாவும், அவளுடைய தங்கையும், அயல்வீட்டாரின் மகளும் என்னோடு சேர்ந்து விளையாடும் அந்தக் கோடையின் நாட்களில் ஆல்யா அப்படித்தான் கத்துவாள். அந்தக் குழுவின் தலைவியாக ஆல்யாவே இருந்தாள். நாங்கள் எப்போது …
அதிசயங்கள் – வால்ட் விட்மன்
தமிழாக்கம்: நளினி சுந்தரராஜன் அதிசயத்தைப் பற்றி யார் பெரிதாகப் பேசுகிறார்கள்?அதிசயங்களைத் தவிர வேறொன்றும் எனக்குத் தெரியாது, நான் மன்ஹாட்டன் வீதிகளில்நடந்தாலும் சரி, அல்லது வீடுகளின் கூரைகளுக்குமேல் விண் நோக்கிபார்வையைச் செலுத்தினாலும் சரி, அல்லது கடற்கரை ஓரத்தில்வெற்றுக் கால்களுடன்நீரின் விளிம்பில் நடந்தாலும் சரி, …
ரம்மியமான சாகுந்தலம்! – மகாகவி காளிதாசர்!
பண்புடன் மின்னிதழில் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழாக மொழிபெயர்ப்புச் சிறப்பிதழ் வர இருப்பதாகவும் அதில் பிற மொழியில் உள்ள சிறப்பான படைப்புகளை பகிர்ந்து கொள்ளலாம் என்றும் வாசித்ததும் என் மனதில் சட்டென்று தோன்றியது ஒரு காவியம்! அது தான் மகாகவி காளிதாசரால் இயற்றப்பட்ட …
தோல்பாவைக்கூத்து தெருக்கூத்துஇரண்டும் வந்திருக்கின்றன கிராமத்திற்குஊர்த்திருவிழாவை முன்னிட்டுதெய்வங்களும் கொஞ்சம்உற்சாகமடைந்து புத்துணர்வு கொள்கின்றன நல்லாச்சியும் பேத்தியும்தினம் ரசிக்கின்றனர் இரு கூத்துகளையும்அர்ச்சுனன் தபசையும், நள தமயந்தியையும்அரிச்சந்திரனையும் பாஞ்சாலி சபதத்தையும்நல்லாச்சி சொன்ன இன்னபிற கதைகளையும்கூத்துவடிவில் பார்த்த பேத்திராஜாக்களையும் ராணிகளையும்பளபளக்கும் அரசவாழ்வையும்நிஜமெனவே நம்பத்தொடங்குகிறாள்இரவிலும் பகலிலும் வெவ்வேறாய்ச் சுழல்வதுஅவர்கள் உலகம் …
கடல் அரக்கன், தேவதைப்பூ – இரு கதைகள்
கடல் அரக்கன் மூலம்: ஆபி ஃபிலிப்ஸ் வாக்கர் மொழியாக்கம்: சரவணன் பார்த்தசாரதி கடலுக்கு நடுவே ஒரு தீவு இருந்தது. முழுக்க பாறைகளாலான அந்தத் தீவில் ட்ராகன் போன்ற தோற்றத்தில் ஓர் அரக்கன் வாழ்ந்து வந்தான். பெரிய தலையுடன் பாம்பு போன்ற தோற்றத்தில் …
இரு கவிதைகள் – டு ஃபு
போர் ரதங்களின் பாடல் மூலம்: ”Ballad of the Army Carts” by Du Fuஆங்கிலத்தில்: David Lundeஆங்கிலத்திலிருந்து தமிழில்: ராமலஷ்மி ரதங்கள் உருளுகின்றன,கடகடவென அதிர்கின்றன.குதிரைகள் கனைக்கின்றன,சீற்றத்துடன் மூச்சு விடுகின்றன.படைவீரர்கள் இடுப்பில் வில்லும் அம்பும் கட்டிஅணிவகுத்துச் செல்கின்றனர்.தந்தைமார், தாய்மார்,மனைவியர் மற்றும் குழந்தைகள்அவர்களை …
மல்லிகா அமர்ஷேக் கவிதைகள் : மராத்தி.
தமிழாக்கம் : புதியமாதவி வீடு திரும்பும் மனிதர்கள் தோல்வியுற்ற படைவீரர்கள்தங்கள் முகாம்களுக்குதிரும்புவது போலமனிதர்கள்தங்கள் வீடுகளுக்குத் திரும்புகிறார்கள். பெண்கள்வீடுகளை அடைகாக்கிறார்கள். கூர்மையான அறிவுடன் இருந்தகுழந்தைகள் கூடபின்னர்ஈசாப்* போல அடிமையாகிவிடுகிறார்கள்.அனுசரித்துப் போகும் பழக்கத்தின்நஞ்சுக்கொடியைச் சுமந்துசங்கிலிபோல சுழன்றுஸ்தம்பித்துவிடுகிறார்கள்.ஓவ்வொருவரும்அவரவருக்கான தனிப்பட்டதுயரங்களின் மடியில்சத்தமின்றித் தூங்கிப்போகிறார்கள். வீடுகள் பின் வீடுகள்நகரங்கள் …
வரலாற்றில் மறைக்கப்பட்ட பெண் போராளி – மதுமிதா
தாய்வழிச் சமூகமாக இருந்த பெண்ணின் நிலை மாறி எவ்விதம் அவளிடமிருந்து உரிமை பறிக்கப்பட்டது, தந்தை வழி சமூகமாகி பண்டமாக அவள் பார்க்கப்பட்ட விதம் குறித்து ராகுல சாங்கிருத்தியாயன், கிமு 6000-த்தில் ஆரம்பித்து விரிவாகச் சொல்லப்பட்டு கிபி 1942 ஆம் ஆண்டில் முடியும் …