ஆங்கிலத்திலிருந்து தமிழில்: ஞா.கலையரசி முன்னொரு காலத்தில் ஓர் அரசர் இருந்தார். வெவ்வேறு பகுதிகளிலிருந்து புலவர்களும், இசைக் கலைஞர்களும், எழுத்தாளர்களும் அவரைப் பார்க்க வந்தார்கள். அவர்களுடைய கதைகளைக் கேட்பதும், பாடல்களை ரசிப்பதும் அவருக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு. எல்லோரையும் விட மகமூத் என்பவரை …
இலக்கியம்
துண்டுக் கயிறு – கீ டு மோப்பஸான்
தமிழில்: கார்குழலி அன்று சந்தை நாள் என்பதால் சுற்றியிருந்த கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளும் அவர்களின் மனைவியரும் கோடர்வீலை நோக்கி வந்துகொண்டிருந்தனர். நீண்ட வளைந்த கால்கள் எட்டிவைத்த ஒவ்வொரு அடிக்கும் உடல் முழுவதையும் முன்னால் நகர்த்தியபடி மெல்ல நடந்தனர் ஆண்கள். ஏரைத் தள்ளித்தள்ளி …
அரலுவா மரா (பூக்கும் மரம்) – கன்னட நாட்டுப்புறக் கதை
தமிழாக்கம்: ஐயப்பன் கிருஷ்ணன் அது ஒரு பழைய காலம். பஞ்சம் ஊரெல்லாம் தலைவிரித்தாடிய காலம் அது. அந்தக் காலகட்டத்தில், ஒரு ராஜாவின் ஆளுகைக்கு உட்பட்ட சிற்றூரில் ஓர் ஏழைத் தாய் தன் இரு மகள்களுடன் வாழ்ந்து வந்தாள். அன்றாட உணவிற்கே அவர்கள் …
ஜப்பானிய சிறுவர் கதைகள் 18 – மொழியாக்கம்
முன்னொரு காலத்தில் ஜப்பானில் இரண்டு தவளைகள் வசித்தன. ஒரு தவளை ஒசாகா நகரில் கடலோரமாக இருந்த பள்ளத்தில் தேங்கியிருந்த நீரில் வசித்தது. மற்றொரு தவளை கியோட்டோ நகரில் ஒரு நீரோடையில் வசித்தது. ஒரே இடத்தில் வசித்தது தவளைகளுக்கு சலிப்பாக இருந்தது. அதனால், …
5 நான்-கள்: அத்தியாயம் ஒன்று
“நடிப்பின் அளவுகோல் என யாரைச் சொல்லலாம் தெரியுமா? உன்னுடைய நந்தினிதான் அது, ஆதித்த கரிகாலா!” கிட்டத்தட்டக் கத்தலாய்ச் சொன்னான் பார்த்திபேந்திரன். கண்களில் கொஞ்சம் பொறாமை கலந்த உணர்வா என்ன? செவேலென்றிருந்த முகம் மீண்டும் சிவந்துவிட உதடுகள் துடித்தன. உற்றுப் பார்த்தேன் அவனை. …
சுவர்கள் எப்போதும்செங்கற்களால் எழுப்பப்படுவதில்லை,சில நேரங்களில் அவை எண்ணங்களைசுவாசித்தும் எழுகின்றன.இயலாதெனும் தயக்கமும்வேண்டாமெனும் எச்சரிக்கையும்ஒரு முடிச்சாகப் பிணைந்துகாலத்தைக் கட்டிப் போடுகின்றன. நமது எல்லைகளால்ஆகாயம் சுருங்கிப் போகிறது.நமது சந்தேகங்களால்அடிவானம் மறைந்து போகிறது.நமது தடுமாற்றங்களால்திசை விளிம்பு குறுகிப் போகிறது. வெளிப்படுத்தாத வார்த்தைகள்மெளனச் சுவர்களாக உயருகின்றன.மாயக் கோட்டிற்குள்அவிழாத புதிர்களாக …
இருசியமுக மலை உச்சியில் இருந்த குகைக்குள் இருந்த சுக்ரீவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. உளவறியச் சென்ற அனுமன் இன்னும் வரவில்லை. ஏற்கனவே ஒற்றர்கள் சொல்லியிருந்த செய்தி அவன் மனதை அரித்துக்கொண்டிருந்தது. இரு மானிடர்கள் பெரும் வில்லுடன் இருசியமுக மலையைத் தேடி வந்துகொண்டிருந்த செய்திதான் …
வெள்ளிக்கிழமை காலை. அர்ஜுன் சரியாகத் தூங்கவில்லை. கண்கள் சிவந்திருந்தன. முகச்சவரம் செய்யும்போதே கை லேசாக நடுங்கியது. நேற்றிரவு சுசிக்குத் தெரியாமல் அந்த எண்ணிற்குப் பதில் அளிக்க முயன்றான். ஏதும் போகவில்லை. மீனாவின் பழைய எண்ணிற்கே செய்தி அனுப்பினான்: “பிரிகேட் ரோட், டீ …
“அம்மா!” பார்கவியின் உள்ளாழம் வரை சென்ற அந்த அழைப்பு அவள் உயிர்வரைத் தொட்டு உலுக்கியது. தன்னைச் சில நொடிகளில் சமன் செய்து கொண்டாள். “சொல்லுப்பா.” “ம்மா!” மஞ்சளில் சிவப்புப் புள்ளிகளிட்ட சுங்குடிப் புடைவை. கோடாலி முடிச்சு. விபூதிக் கீற்று. அதற்கு மேலே …
வெய்யில் வாட்டுகிறதாம் நல்லாச்சியைவருடந்தோறும் அதிகரிப்பதாய்ப் புலம்புகிறாள்மழையும் குளிரும் வெயிலும்அதிகரித்துகொண்டே போவதாய்ச்சொல்லிஅந்தந்த தெய்வங்களை ‘அர்ச்சிக்கிறாள்’ஒருவரையொருவர் நோக்கிக்கொள்கின்றன அவைபாவம்போல்குளிருக்கென்றோர் தெய்வம் இல்லாமல்தவித்துத் திரிகின்றன அர்ச்சனைகள் முற்றத்தைப்போர்த்திய தென்னங்கிடுகுசாளரங்களைத் திரையிட்ட வெட்டிவேர்குலைகுலையாய் நுங்கும் இளநீரும்கூடவே கொஞ்சம் மோரும் பானகமும்ஆயுதங்களுடன் தயாராகத்தானிருக்கிறாள்குட்டிச் சிப்பாய் பேத்தியுடன் அவ்வூரைக் கடக்குமட்டும்மேகத்தில் …