பல வருடங்களுக்கு முன்பு, மரபுக் கவிதை கற்றுவந்த புதிதில், ரியாத்தில் சவூதி அரேபியாவுக்கான இந்தியத் தூதராகத் தொண்டாற்றிய மறைந்த எம்.ஓ.ஹெச். ஃபாரூக் மரைக்காயர் இல்லத்தில் பாவேந்தர் நினைவேந்தல் நடைபெற்ற போது அதில் மரபுக்கவிதை அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தேன்.பொதுவாக, மனிதர்களைப் பற்றிப் பாடுவதில்லை …
பெரியதாத்தா வரும் தினங்களில்இறக்கை கட்டிக் குதூகலிப்பாள் பேத்திவயலில் விளைந்தவையென கொண்டுவரும் மூட்டைக்குள்தோட்டத்தில் உதிர்ந்தவையெனஒன்றிரண்டு மயிற்பீலிகளும் இருப்பதுவும்ஒரு காரணம் ஆடலும்பாடலும் கதைசொல்லலுமாய்தாத்தாவின் தோளில் நிழலாய்த்தொற்றிநல்லாச்சியை மறந்து திரியும் பேத்திக்குஒரேயொரு குறைதான்தன் களித்தோழனிடம்கைவிரலிடுக்கில் புகையும் கடைசி விரல்தான் அதுஆருரைத்தும் கேட்காத அகந்தையைஅறிவுறுத்தி உடைக்க எண்ணுகிறாள் …
உங்கள் வாழ்க்கை உங்களுடையதே-இருண்ட அடிமைத்தனத்திற்குள்அதை நசுங்க விடாதீர்கள். விழிப்புடன் இருங்கள்.வெளியேற வழிகள் உள்ளன.எங்கோ ஒரு ஒளி உள்ளது.அது பெரிய வெளிச்சமாக இல்லாதிருக்கலாம்.ஆயினும் அதுஇருளை வென்று கொண்டேயிருக்கும். விழிப்புடன் இருங்கள்.தெய்வங்கள்உங்களுக்கு வாய்ப்புகளை வழங்குவார்கள்.அவற்றை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். மரணத்தை உங்களால் …
மருத்துவர் பக்கம் – 28: எபோலாவும் சிகிச்சையும்
எபோலா நோயைச் சர்வதேச நாடுகளின் கவனத்தைக் கோரும் பொது சுகாதார அவசர நிலையாக (PHEIC – PUBLIC HEALTH EMERGENCY OF INTERNATIONAL CONCERN) உலக சுகாதார நிறுவனம் மே 17, 2026 அறிவித்துள்ளது. இந்நாட்களில் எபோலா குறித்து நாம் அனைவரும் …
இலக்குவன் கிஷ்கிந்தையின் வாயிலில் நின்றிருந்தான். அவன் கண்கள் கோவைப்பழம் போலச் சிவந்திருந்தன. அவனின் சீற்றத்துக்குக் காரணமும் இருக்கத்தான் செய்தது. மழைக்காலம் தொடங்கி, மலையில் மூன்று மாதங்களாகக் கொட்டித் தீர்த்ததில் யாரும் யாரையும் சந்திக்க இயலாமல் இருந்தனர். இராமன் சீதையை நினைந்து நினைந்து …
நள்ளிரவின் கனத்த நிசப்தம். இருளின் ஏதோவொரு மூலையிலிருந்து உறக்கம் பதுங்கிப் பார்த்துக் கொண்டிருந்தது. காற்றில் பரவிய அந்தக் கொடும் நோய்த்தொற்று தொண்டையை இறுக்கி, பிராணவாயுவிற்காக உடல் பதைபதைத்துத் துடித்த அந்த நாட்களின் தொடர்ச்சி இது. மூச்சுக்காகத் திணறியபோது, அதை மீட்க மருத்துவர்களால் …
பார்க்கும் எல்லாமுமாக வாழ்ந்துவிட ஆசைகுறைந்த ஆயுளில் நிறைந்த வாழ்வை விரும்பிகடைக்கோடி ஜீவி வரை வாழ்ந்திட ஆசைஎவ்வுயிராக ஏதாக எனும் குழப்பத்தில்பச்சோந்தியாக எனில்பாவம் உயிர்வாழ நிறம்மாறும் அதற்கும்மனிதர்களால் அவப்பெயர்நாயாக எனில்உண்மையிலேயே அதன் வாழ்வு‘நாய் படும் பாடாக’ உள்ளதுமழையாக எனில்அனைவரும் வேண்டும் மழையாகவாவெறுக்கும் மழையாகவாமரமாக …
‘பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்; இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்’ என்பது முண்டாசுக் கவி பாரதியின் கூற்று. அதன்படி, கடந்த 20 ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் எண்ணற்ற வடிவங்களையும் வகைமைகளையும் அயலிலிருந்து ஏற்றுக்கொண்டுள்ளது. சிறுகதை, …
சிக்கனமென்பது கிஞ்சித்துமில்லாமூத்தவனால் பெருங்கவலை நல்லாச்சிக்குகாசுபணமெல்லாம் தண்ணீர் பட்டபாடு அவனுக்குதண்ணீரையும் அவ்வாறே வாரியிறைப்பான்பிறரைப்பற்றிக் கவலை கொள்ளா அப்பெருஞ்செலவாளிநாளையைப் பற்றிச் சற்றும் எண்ணாதவனைஎண்ணியெண்ணி நாளும் உருகுகிறாள்‘எங்காலத்துக்குப் பொறவு என்ன கதியோ?!’ என மருகுகிறாள்பிள்ளையின்மேல் படியும் ஏளனப்பார்வைகளைசகியாத நல்லாச்சிபெரியப்பனுக்குப் பரிகிறாள் பேத்தி தாகங்கொண்ட வெய்யோன் அருந்தியதால்கோழிக்காலாய் …
“நிலா காய்கிறது மேலும் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே”.. எங்கிருந்தோ தூரத்திலிருந்து மிதந்து வந்த அந்தப் பாடல் வரிகள் அவர் காதில் விழுந்தன. சாளரத்தின் ஓரம் அமர்ந்திருந்த அவர் எழுபதுகளைத் தாண்டியவர். முகத்தில் ஏகப்பட்ட சுருக்கங்கள். சரிந்து விழும் மாலையின் வெயில் அந்த …