ஊரின் எல்லாப் பகுதியிலும் தேடியாகிவிட்டது. தோப்புகள், ஒன்றைக் கூட விடவில்லை.. என்றும் ஆடுகள் மேய்வதற்குச் செல்லும் புல்வெளிகளையும் விடவில்லை.. அலைந்து திரிந்து இதோ இந்த மேடான இடத்திற்கு வந்தாகிவிட்டது.. சாம்பன் எங்கு சென்றிருப்பான்? கையிலிருந்த ஈட்டியை அருகில் வைத்துவிட்டு ஆசுவாசப்படுத்திக் கொள்ள …
இலக்கியம்
1.எங்கும் வெயில்வெப்பச் சாலைகளில் நிசப்தம்நீளும் மதியம். 2.சுருங்கி மறையும் நிழல்கள்தலைக்கு மேல் நண்பகல்கனக்கும் அமைதி. 3.சுழலும் மின்விசிறிசோம்பல் முறிக்கும் வட்டங்கள்கரைகிறது நேரம். 4.பொன்னாக மாம்பழங்கள்பிசுபிசுக்கும் கைகள்ஒளியாக வழிகிறது இனிப்பு. 5.சூடான நிலம்வெற்றுப் பாதங்கள்ஓடுகிறது குழந்தைமை. 6.நெற்றியில் வியர்வைஉப்பு வெயிலின் சந்திப்புஉடலோடு ஒட்டும் …
இனி அதற்கு வாய்ப்பே இல்லை என்கிற கடைசித் தருணத்தில்தான் தற்கொலை செய்ய முடிவெடுத்தேன். இன்று காலைவரையிலும்கூட கொஞ்சம் நம்பிக்கை இருந்தது. எப்படியும் ஜீவா பேசிவிடுவான் என்றே இருந்தேன். கிடைத்த தகவல்கள் என் நம்பிக்கையைச் சிறிது சிறிதாக அரித்துத் தின்றுத் தீர்த்தன. இரண்டு …
1.பெண் எனும் பேனாஇறுகப் பிடித்திருந்தமுள் பேனாவின் முனையிலிருந்துவழியும் ரத்தத்துளிகள் மையாக மாறதனது வாழ்க்கைப் புத்தகத்தின்அத்தனை பக்கங்களிலும் எழுதுகிறாள்தனக்குப் பிடித்தமான வாழ்க்கையை. 2.காதல் பூக்கள்மொட்டாக முகையாக இருக்கும் போதேஅவசரம் கொள்ளாதீர்கள்.வீயாகிச் செம்மையாகும் வரையிலும்காத்திருக்கத் தேவையில்லை.அலராக மலராக இருக்கும்போதுபறித்துக்கொள்ளுங்கள்;கைகளுக்கு மட்டும் அல்லமனதிற்கும் அதனால் அழகு …
அமீர் குஸ்ரூ கையறுநிலையைக் கண்டும் கைவிட்டுப் பாதை மாறி விழிதிருப்பிப் பொய்யுரைத்தனையோ பிரிவினைத் தாங்கும் திடமனம் எனக்கிலையெனினும் நெஞ்சணைக்க விலக்குவையோ பாரசீகமும் ஹிந்தவியும் கலந்து எழுதப்பட்ட இந்த இரண்டு அடிகள்தான் உருதுக் கவிதை உலகின் முதல் கஜலின் தொடக்க இரண்டு அடிகள். …
விவரணை வேண்டாமே வேகமாய் நெஞ்சில்சிவனை நினைந்தால் சிறப்பாம் – புவனமதைஆக்கியே காத்தும் அழிக்கவும் செய்திடும்வாக்கினில் வல்லோன் அவன் அவனன்றி ஓரணுவும் அண்டத்தில் தானாய்உவந்து அசையாதே ஊக்கமாய் ஒற்றுமையாய்க்காலம் முழுவதும் காத்திடக் கைப்பற்றுஆலமுண்ட ஈசன்தாள் ஆம் ஆமென்று சொல்பவரை அண்டிப் பதம்தருவான்போமென்று சொல்பவரைப் …
“நிலா காய்கிறது மேலும் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே”.. எங்கிருந்தோ தூரத்திலிருந்து மிதந்து வந்த அந்தப் பாடல் வரிகள் அவர் காதில் விழுந்தன. சாளரத்தின் ஓரம் அமர்ந்திருந்த அவர் எழுபதுகளைத் தாண்டியவர். முகத்தில் ஏகப்பட்ட சுருக்கங்கள். சரிந்து விழும் மாலையின் வெயில் அந்த …
சிக்கனமென்பது கிஞ்சித்துமில்லாமூத்தவனால் பெருங்கவலை நல்லாச்சிக்குகாசுபணமெல்லாம் தண்ணீர் பட்டபாடு அவனுக்குதண்ணீரையும் அவ்வாறே வாரியிறைப்பான்பிறரைப்பற்றிக் கவலை கொள்ளா அப்பெருஞ்செலவாளிநாளையைப் பற்றிச் சற்றும் எண்ணாதவனைஎண்ணியெண்ணி நாளும் உருகுகிறாள்‘எங்காலத்துக்குப் பொறவு என்ன கதியோ?!’ என மருகுகிறாள்பிள்ளையின்மேல் படியும் ஏளனப்பார்வைகளைசகியாத நல்லாச்சிபெரியப்பனுக்குப் பரிகிறாள் பேத்தி தாகங்கொண்ட வெய்யோன் அருந்தியதால்கோழிக்காலாய் …
‘பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்; இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்’ என்பது முண்டாசுக் கவி பாரதியின் கூற்று. அதன்படி, கடந்த 20 ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் எண்ணற்ற வடிவங்களையும் வகைமைகளையும் அயலிலிருந்து ஏற்றுக்கொண்டுள்ளது. சிறுகதை, …
“பொல்லாத்தனம் செய்பவர்களை ஒழிப்பதற்கு ஒரே வழி நாம் பொல்லாதவர்களாக மாறுவதுதான். அதுவும் இப்போதுதான் இத்தனை ஜென்மங்களில் நீ சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறாய்.” கடகடவென சிரிப்பு வந்தது எனக்கு. சிரிக்கவும் முடியாது. ஏனெனில் கையில் தூக்கிக்கொண்டிருந்த இயந்திரத் துப்பாக்கியின் கனம்; தவிர முதுகில் …